ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் ஈ-மெயில்.; தமிழ் பிரபலங்கள் ஆதரவு

ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் ஈ-மெயில்.; தமிழ் பிரபலங்கள் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’.

இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார்.

2வது நாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

ஈ-மெயில்

இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்தநிலையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான அமீர், நடிகர் மகத் ராகவேந்திரா, நடிகைகள் வசுந்தரா மற்றும் கோமல் சர்மா ஆகியோர் வெளியிட்டனர்.

ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் அதேசமயம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

ஈ-மெயில்

அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

ஈ-மெயில்

Online Game fraud Ameer Mahat launched First look of Email

வாழவைத்த சென்னைக்கு வாரி கொடுத்து கொண்டே இருக்கும் பாலா

வாழவைத்த சென்னைக்கு வாரி கொடுத்து கொண்டே இருக்கும் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பாதிப்பில் மக்கள் பக்கம் நிற்பவனே உண்மையான கலைஞன், தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் உதவும் குணத்தால் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார்.

தன் மொத்தக் கையிருப்பையும் திரட்டி, சென்னை வெள்ளபாதிப்பில் அவர் செய்து வரும் உதவிகளை, பலரும் பாராட்டி வருகிறார்கள்.

விஜய் டிவி ( கலக்க போவது யாரு) நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாலா தற்போது தன் உதவும் கரங்களால் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித்தந்தது, ஏழ்மையான குழந்தைகளை படிக்க வைப்பது என, திரையில் பணியாற்றி அதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு இது போல் உதவி செய்து வருகிறார்.

இந்த சென்னை வெள்ளத்தில் அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிககப்பட்ட மக்களுக்கு – குடும்பத்திற்கு தலா ( 1000 ) ரூபாய் வீதம் – 200 குடும்பங்களுக்கு மொத்தமாக 2,00,000 ( இரண்டு லட்சம் ) உதவித் தொகை வழங்கினார்.

பின்னர் தான் அவசர தேவைக்காக சீட்டு போட்டு வைத்திருந்த 3 லட்ச ரூபாய் மற்றும் தன்னால் முடிந்த பணத்தை திரட்டி, பணத்தை எடுத்து, பள்ளிக்கரனை உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம் 600 கிலோ அரிசி வாங்கி அளித்துள்ளார்.

அடுத்ததாக துரைப்பாக்கம் பல்லவன் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு நைட்டி,, ஆண்களுக்கு கைலி என வெள்ள நிவாரணம் அளித்துள்ளார்.

நரிக்குறவர் சமுதாய மக்கள், மழையால் பாதிக்கப்பட்ட சாலையோரம் வசிக்கும் மக்கள் என 140 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் மொத்தம் 1,40,000 ரூபாய் உதவித்தொகையுடன் ரூபாய் 1,60,000 மதிப்புள்ள
நைட்டி, கைலி உட்பட வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார்.
பாலா இதுவரை சென்னை மழைக்காக மொத்தம் 5லட்சம் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையின் பாதிப்பை சரி செய்யும் பணியில் இறங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியுடன் வெள்ள நிவாரணத்தை தன் மொத்தக் கையிருப்பையும் திரட்டி உதவி செய்து வரும் பாலாவின் முன்மாதிரியான செயல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

பாலா

Kpy Bala helping for chennai flooded area peoples

ரஜினிகாந்த் பிறந்த நாளில் ‘தலைவர் 170’ படத்தின் மெகா விருந்து

ரஜினிகாந்த் பிறந்த நாளில் ‘தலைவர் 170’ படத்தின் மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவது ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எனவே அவரது பிறந்தநாளுக்கு பலவிதமான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்து திருவிழா போல கொண்டாடி வருவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

எனவே ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்விக்க பட தயாரிப்பாளர்களும் திரையுலகினரும் ரஜினிபடம் தொடர்பான ஏதாவது ஒரு தகவல்களை பகிர்ந்து வருவதை பார்த்திருக்கிறோம்.

அடுத்த வாரம் டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார்.

இதனை முன்னிட்டு நேற்று டிசம்பர் 8ம் தேதி ‘முத்து’ படத்தின் ஜப்பான் ரீலீஸ் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு திரைப்படத்தை ரி-ரீலீஸ் செய்தது அந்த தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட உள்ளனர்.

ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க பிரபல நட்சத்திரங்கள் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalaivar 170 Mega treat on Rajini birthday

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது. பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர்.

வெப்பன்

இந்த வரிசையில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படக்குழுவும் இணைந்துள்ளது. இதன் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோஸ், எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் ஏரி சூழ்ந்த பகுதிகளில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர்.

’வெப்பன்’ படக்குழுவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

வெப்பன்

Weapon movie team helping Chennai flood affected peoples

2024 NEW YEAR SPECIAL : Dance Don Guru Steps 2023 Kollywood Awards

2024 NEW YEAR SPECIAL : Dance Don Guru Steps 2023 Kollywood Awards

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடனக் கலைஞர் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில், எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள, பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த டான்ஸ் டான் விழாவை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர், அக்‌ஷரா ஶ்ரீதர், அசோக் மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர், லலிதா மணி மாஸ்டர், குமார் சாந்தி மாஸ்டர், வசந்த் மாஸ்டர், விமலா மாஸ்டர், சம்பத் மாஸ்டர், ஹரீஷ் குமார் மாஸ்டர், மாலினி மாஸ்டர், VKS பாபு மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Dance Don Guru Steps

உலகளவில் இந்தியா சினிமா ஆடல் கலை மற்றும் பாடலுக்கு பெயர் பெற்றது. பாடலும் ஆடலும் இல்லாமல் இந்திய சினிமா இல்லை.

இங்கு சினிமா உருவானதிலிருந்தே ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக, சினிமாவிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடனக் கலையை பயிற்றுவிக்கும் நடனக் கலைஞர்களின் பணி அளப்பரியது.

இத்தனை புகழ்மிக்க நடனக் கலையை ஆரம்ப காலத்தில் பயிற்றுவித்த பல புகழ்மிகு நடனக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றில் இல்லை.

1950 களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். இன்றைய நவீன டிஜிட்டல் உலகைப் போல அவர்களைப் பற்றிய அறிமுகங்களோ, விவரங்களோ, அனைவருக்கும் தெரிந்ததில்லை.

திரையுலகில் பணியாற்றும் நடனக் கலைஞர்களுக்கே நம் முந்தைய தலைமுறையின் ஆரம்பத்தில் புகழுடன் பணியாற்றிய நடனக் கலைஞர்களின் விவரங்கள் தெரிவதில்லை.

நம் தலைமுறையில் நமக்கு முன் சாதித்து காட்டிய நடனக் கலைஞர்களை அடையாளம் காட்டும் வகையிலும், அவர்களைப் பற்றி வரலாற்றில் பதிவு செய்து, அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் இந்த டான்ஸ் டான் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Dance Don Guru Steps

இவ்விழாவில் தமிழ் திரையுலகில் புகழுடன் பணியாற்றி மறைந்த நடனக் கலைஞர்கள் பற்றி பதிவு செய்து, அவர்களின் சாதனைகளை, நினைவு கூர்ந்து, அவர்களின் புகழ் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கௌரவிக்கப்படவுள்ளது.

மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் நடன கலைஞர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர். மேலும் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

Dance Don Guru Steps 2003 Kollywood Awards தமிழ்த் திரையுலகின் முன்னணி நடனக் கலைஞரான கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் முன்னின்று இவ்விழாவை ஏற்பாடு செய்து நடத்துகிறார்.

வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடக்கவுள்ள இவ்விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி நடன கலைஞர்களுடன், தமிழ்த்திரைத்துறையின் பல முன்னணி இயக்குநர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.

டான்ஸ் டான் விழா டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி காமராஜர் அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Dance Don Guru Steps

Dance Don Guru Steps 2023 Kollywood Awards

தனது மருமகனை நாயகனாக்கி இயக்கும் நடிகர் தனுஷ்

தனது மருமகனை நாயகனாக்கி இயக்கும் நடிகர் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பாடகர் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ்.

கோலிவுட் பாலிவுட் வரை சென்ற தனுஷ் ஹாலிவுட் படங்களிலும் நடித்து விட்டார். எனவே நடிப்பு துறையை தாண்டி தற்போது டைரக்ஷனிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதன்படி ராஜ்கிரணை நாயகனாக வைத்து ‘பா பாண்டி’ (பவர் பாண்டி) என்ற படத்தை இயக்கினார். அந்த படம் சூப்பர் ஹிட்டாகவே அடுத்த படத்தை உடனே இயக்குவார் தனுஷ் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். தற்போது தனுஷின் 50வது படத்தை அவரை இயக்கி நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் 2024 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

இதன் பின்னர் சேகர் கம்முலா இயக்கத்தில் டி51 படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் நாகர்ஜுனா நடிக்க தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த நிலையில் தன் அக்கா மகனை நாயகனாக அறிமுகப்படுத்தி தனுஷே தயாரித்து இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

Dhanush 3rd movie directorial His son in law become hero

More Articles
Follows