ஹரி இயக்கத்தில் அருண் விஜய் & ப்ரியா பவானி சங்கர் இணையும் பட அப்டேட்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் & ப்ரியா பவானி சங்கர் இணையும் பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்து வருகிறார்.

‘அருண்விஜய் 33’ #AV33 என தற்காலிக பெயரிட்டுள்ளனர்

இதில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

New update on Arun Vijay – Hari project

முதன்முறையாக விஜய் ஆண்டனியுடன் டூயட் பாடப்போகும் ஹன்சிகா

முதன்முறையாக விஜய் ஆண்டனியுடன் டூயட் பாடப்போகும் ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மஹா’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா. இது அவரின் 50வது படமாகும். இதில் கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கில் ‘என் பெயர் ஸ்ருதி மற்றும் 150 நிமிடங்கள்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனியுடன் முதன்முறையாக இணையவிருக்கிறாராம்.

பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி.

தன் பிறந்த நாளில் இப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிடப்போவதாகவும் தெரிவித்தார் விஜய் ஆண்டனி.

‘பிச்சைக்காரன்’ முதல் பாகத்தில் நாயகியாக நடித்த சாட்னா டைட்டஸ் அப்படத்தின் இணை தயாரிப்பாளர் கார்த்திக்கை காதலித்து கடந்த 2017 பிப்ரவரியில் திருமணம் செய்துக் கொண்டார்.

Actress Hansika to romance Vijay Antony

அஞ்சலி ரம்யா ரேவதி் பார்வதி ரோகிணி, அதிதி ரித்விகா ப்ரயகா..; நவரசா-வில் அசத்தும் ஹீரோயின்ஸ் இன்ட்ரோ

அஞ்சலி ரம்யா ரேவதி் பார்வதி ரோகிணி, அதிதி ரித்விகா ப்ரயகா..; நவரசா-வில் அசத்தும் ஹீரோயின்ஸ் இன்ட்ரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Netflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள் !

மனிதனின் அக உணர்வுகளை முன்னிறுத்தி சொல்லப்படும், 9 வெவ்வேறு வித்தியாசமான கதைகள் அடங்கிய, ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தை, சமீபத்தில் அறிவித்துள்ளது Netflix நிறுவனம்.

தமிழில் உருவாகியிருக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை, மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு 9 வித்தியாசமான கதைகளங்களுல், இது வரை பார்த்திராத கோணத்தில், அழகான கதைகளை சொல்கிறது.

இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் கதையின் ஆழத்தை வெளிபடுத்துவதில், கதை சொல்லலின் அடுத்த நிலைக்கு இப்படத்தை எடுத்து செல்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

“நவரசா” திரைப்படத்தில் 9 கதைகளிலும் பெண் கதாப்பத்திரங்கள் ஆச்சர்யப்படும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

எதிரி (கருணை) கதையில் ரேவதி கதாப்பாத்திரமான “சாவித்திரி”

“சாவித்திரி” பாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும் முதிர்வு பெற்று காட்சிக்கு காட்சி மாறிக்கொண்டிருக்கும், ரசிகர்கள் பார்க்க ஏங்கும் ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். சாவித்திரி ஒரு மங்களகரமான பக்தி கொண்ட பெண் கதாப்பாத்திரம். படத்தில் துக்கத்திற்கும் அறத்திற்கும் இடையில் தவித்து, சரியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு பாத்திரம் ஆகும்.

இன்மை ( பயம் ) கதையில் பார்வதி கதாப்பாத்திரமான “வஹிதா’

நடிகை பார்வதி இந்திய சினிமாவில் பல மாறுபட்ட துணிச்சலான பாத்திரங்களில் நடித்தன் மூலம், உலக அளவில் புகழை குவித்தவர். இப்படத்தில் ஒரு எளிமையான குடும்பத்திலிருந்து வந்து, பணத்திற்காககவும் சொத்திற்காகவும், வயதான பணக்காரரை திருமணம் செய்து கொண்ட பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரது வாழ்க்கையைச் சுற்றியுள்ள பல உண்மைகளைக் தெரிந்து கொள்ளும்போது, வாழ்க்கை அவரது செயல்களை கேள்விக்குள்ளாக்குகிறது.

கிடார் கம்பி மெலே நின்று (காதல்) கதையில் ப்ரயகா ரோஸ் மார்டின் கதாப்பாத்திரமான “நேத்ரா”

நேத்ரா ஒரு மிகச்சிறந்த பாடகி நவநாகரீக பெண். தனக்கு சரியென பட்டதை துணிந்து செய்யும் கதாப்பாத்திரம்.

தனக்கு வேண்டியதை தேடி அடையும் பெண். சுந்தந்திரமாக இயங்கும் அனைவரும் விரும்பும் மாடர்ன் பெண்.

பாயாசம் (வெறுப்பு) கதையில் அதிதி பாலன் கதாப்பாத்திரமான “பாக்யலட்சுமி”

மிக இளம் வயதில் விதவையானதால், சமூகம் அவளிடம் பாராபட்ச காட்டும் நடவடிக்கைகளால், மனதளவில் அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்.

அவள் நேர்மறை எண்ணங்களால், அவள் முன் உள்ள தடைகளை கடந்து, நம் அனைவருக்கும் முன்னுதாரண பெண்ணாக, நம் கண்களில் நீர் பொங்கும் கடின வாழ்க்கையை கடந்து, சாதித்து காட்டும் “பாக்யலட்சுமி”
கதாப்பாத்திரத்தில் அதிதி பாலன் நடித்துள்ளார்.

பாயாசம் (வெறுப்பு) கதையில் ரோகிணி கதாப்பாத்திரமான “வாலம்பா”

இறந்த முதிய கணவனான சமந்து உடைய மனைவி கதப்பாத்திரம் தான் வாலம்பா. அறத்தின்நெறியில் நின்று வாழும் பெண்.

சரி தவறுகளை தன் வாழ்வில் தான் நம்பும் அறத்தின் வழி முடிவு செய்யும் பெண். இந்த கதாப்பாத்திரத்தில் ரோகிணி நடித்துள்ளார்

ரௌத்திரம் ( கோபம் ) கதையில் ரித்விகா கதாப்பாத்திரமான “அன்புக்கரசி”

பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில் அட்டகாச நடிப்பை தந்த ரித்விகா, இக்கதையில் “அன்புக்கரசி” பாத்திரத்தில் நடித்துள்ளார்.

முற்போக்கு எண்ணம் கொண்ட படித்த பெண்ணாக, தன் வாழ்வில் உயர் சாதனைகளை நோக்கி பயணப்படும் பெண் கதாப்பாத்திரத்தில், அருளின் சகோதரியாக நடித்துள்ளார்

துணிந்த பின் (தைரியம்) கதையில் அஞ்சலி கதாப்பாத்திரமான “முத்துலட்சுமி”

தான் ஏற்கும் கதாப்பாத்திரங்களில், ஒவ்வொன்றிலும் மிகசிறப்பான நடிப்பை தரும் அஞ்சலி,தொலைந்து போன வெற்றியின் காதல் மனைவியாக நடித்துள்ளார். தனது காதல் கணவனின் வருகைக்காக ஏங்கும் பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை ) கதையில் ரம்யா நம்பீசன் கதாப்பாத்திரமான “லக்ஷ்மி”

குழந்தை நட்சத்திரமாக இருந்து 60 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை ) கதையில் ஒரு ஆசிரியராக மிகச்சிறந்த பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனது மாணவர்களின் நன்மைக்காக உழைக்கும் அன்பான ஆசிரியராகவும், நாய்களின் காதலராகவும் நடித்துள்ளார்

தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.

மனதை உருக வைக்கும் காதலில் தொடங்கி அருவருப்பு வரை மனித உணர்வுகளின் அனைத்து நிலைகளையும் காட்சிப்படுத்தும் அட்டகாசமான கதைகளின் ஒருங்கிணைப்பாக இத்திரைபடம் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆச்சர்யம் தரும் வகையில் முன்னனி நட்சத்திரங்கள் சூர்யா, அர்விந்த் சுவாமி, விஜய் சேதுபதி, ரேவதி, பார்வதி, ரோகிணி, அதிதி பாலன், ரித்விகா, பிரகாஷ் ராஜ், சித்தார்த், அதர்வா, பிரசன்னா ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Female lead characters revealed in Netflix’s Navarasa

ஐஸ்வர்யாவின் ’திட்டம் இரண்டு’.; எடிட்டர் பிரேம் குமாருக்கு பிரஸ் ஷோவில் கிடைத்த பாராட்டு

ஐஸ்வர்யாவின் ’திட்டம் இரண்டு’.; எடிட்டர் பிரேம் குமாருக்கு பிரஸ் ஷோவில் கிடைத்த பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் கேமராவுக்கு முன்பு இருப்பவர்கள் தான் மக்களிடம் பிரபலமாவதோடு, ஊடகங்களின் அங்கீகாரத்தையும்
பெறுவார்கள், என்ற விதியை ஒரு சிலர் தங்களது பணியின் மூலம் உடைத்து கேமராவுக்கு பின்னாள் பணியாற்றும் தொழில்நுட்ப
கலைஞர்களாலும் கவனம் ஈர்க்க முடியும், என்பதை நிரூபித்து காட்டுவார்கள்.

அப்படிப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களில் ஒருவராக தனது படத்தொகுப்பு மூலம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்
படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்.

பிரபல படத்தொகுப்பாளர் பி.லெனின் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றிய C.S.பிரேம் குமார், ‘களவாடிய பொழுதுகள்’ படத்துக்கு லெனினுடன் இணைந்து படத்தொகுப்பு செய்தவர்.

‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் மூலம் படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அப்படத்தை தொடர்ந்து , ’குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’, V1 , ‘ஹவுஸ் ஓனர்’ ரூம்’ உள்ளிட்ட பல படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

C.S.பிரேம் குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்தும் வியாபார ரீதியாக வெற்றிப் பெறுவதோடு, சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் வென்று குவிக்கிறது.

இதனால், வித்தியாசமான திரைப்படங்கள் என்றாலே, இயக்குநர்கள் C.S.பிரேமை தான் அனுகுகிறார்கள்.

இதனால் தமிழ் சினிமாவின் பிஸியான படத்தொகுப்பாளராக வலம் வரும் C.S.பிரேம் குமார், ‘ராஜாமகள்’, ’ரூம்’, ‘ராஜாவுக்கு ராஜாடா’ உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார்.

C.S.பிரேம் குமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் வரும் ஜூலை 30 ஆம் தேதி நேரடியாக சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தின் சிறப்பு காட்சி ஜூலை 27 ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.

படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் மற்றும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷை மற்றும் முக்கியமாக படத்தொகுப்பாளர் C.S.பிரேமை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கும் C.S.பிரேம் குமார், தனது படத்தொகுப்பு மூலம், திரைக்கதையின் போக்கை யூகிக்க முடியாத வகையில் காட்சிகளை கச்சிதமாக தொகுத்திருக்கிறார்.

ஏற்கனவே பல படங்களில் தனது திறமையை C.S.பிரேம் குமார் நிரூபித்திருந்தாலும், ‘திட்டம் இரண்டு’ படத்தின் மூலம் கூடுதல் கவனம் பெற்றிருப்பவரை பாராட்டி வரும் பத்திரிகையாளர்கள் படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார் நிச்சயம் தேசிய விருது பெறுவார், என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுவரை எதார்த்த படங்களில் பணியாற்றிய C.S.பிரேம் குமார் இப்பொழுது பொழுது போக்கு (Commercial) அம்சமான படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Editor CS Prem Kumar got appreciation for his new work

‘தாதா 87’ பட காட்சிகளை ஆட்டைய போட்ட சாய்குமார்..; சாட்டைய சுழற்றும் விஜய் ஸ்ரீ

‘தாதா 87’ பட காட்சிகளை ஆட்டைய போட்ட சாய்குமார்..; சாட்டைய சுழற்றும் விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வணக்கம்…

கமலஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா கலை சினிமாஸ்வுடன் இணைந்து தயாரித்த தாதா 87 படத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி

தற்சமயம் பவுடர் , பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன்.

நேற்று காலை YouTube நடிகர் சாய்குமார் நடிப்பில் ஒன் பை டூ என்ற பெயரில் ‘தாதா 87’ படத்தின் ரீமேக் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் .

ரஜினியின் காலா டீசருடன் தாதா 87 படத்தின் டீசர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது அனைத்து சினிமா ரசிகர்களும் அறிவார்கள் அதே டீசரில் சாருஹாசன் காட்சிக்கு பதில் சாய்குமார் சில காட்சிகள் மட்டும் படமெடுத்து இன்று டீஸராக வெளியிட்டுள்ளார்கள்.

இதனை பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன்

1/2 படக்குழு என்னுடைய கற்பனையும் என் உழைப்பையும் திருடும் செயலில் இந்த சம்பவம் இருக்கிறது என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் செய்திருப்பது சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பது வருந்தத்தக்கது

முறையாக அனுமதி பெற்று என் கதையின் கருவை என் பெயரை பயன்படுத்தாமல் வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது ஒருவருடைய பெயருக்கு முன் உள்ள இனிஷியல் ஐ மாற்றுவதற்கு சமமானது.என பெரியவர்கள் கூறுவார்கள்

தற்போது இதுபோல் பல படங்களுக்கு தொடர்ந்து கதை திருட்டு நடைபெற்று வருகிறது .

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படமாக தாதா87 படத்தின் கருவை சிதைத்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜு மீடியா கம்பெனி வழக்கறிஞர்கள் அறிவுறுத்தலின் படி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் இதை பற்றி விரிவான செய்திகளை விரைவில்
அறிவிப்பேன்.

– விஜய் ஸ்ரீ ஜி
தயாரிப்பாளர்/ இயக்குனர்
போன்: 8778649797

Dhadha 87 fame director Vijay Sri G complains againt Youtuber Sai Kumar

‘மாறன்’ பர்ஸ்ட் லுக் ரிலீசானது.; ஆக்‌ஷனில் மிரட்டும் தனுஷ்

‘மாறன்’ பர்ஸ்ட் லுக் ரிலீசானது.; ஆக்‌ஷனில் மிரட்டும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் தியேட்டரில் ரிலீசானது. அதன் பிறகு ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடியில் ரிலீசானது.

இவை இரண்டின் ரிலீசின் போதும் அமெரிக்காவில் இருந்தார்.

அங்கு ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு இந்தியா வந்த தனுஷ் ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் தனது 43ஆவது படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் இன்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூலை 28) காலை 11 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.

இந்த படத்திற்கு ‘மாறன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஆக்சன் காட்சியில் தனுஷ் மிரட்டலாக உள்ளார்.

IMG-20210728-WA0024

Actor Dhanush next film is titled Maaran

More Articles
Follows