தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார்.
இப்படம் தொடங்கியது முதல் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியதாக கூறப்பட்டது.
மேலும் பல விழாக்களுக்கும் இருவரும் ஒன்றாக சென்று வந்தனர்.
இந்நிலையில் ஒரு பிரபல சேனல் ஒளிப்பரப்பிய விருது வழங்கும் விழாவில் இருவரும் நானும் ரவுடிதான் படத்திற்காக விருதுகளை பெற்றனர்.
அப்போது விக்னேஷ் சிவன் பேசும்போது, நயன்தாராவின் பெயரை தொகுப்பாளர்கள் மிர்ச்சி சிவா மற்றும் சதீஷ் மாறி மாறி கூறிக் கொண்டே இருந்தனர்.
அதன்பின்னர் நயன்தாரா பேசும்போதும் இதே போன்று செய்தனர்.
நான் அவரு பெயரை சொல்லலாமா? என்று கேட்டுவிட்டு ‘எங்களை தான் எதுவுமே செய்ய விட மாட்டீங்கிறீங்க… ? என்று நாணத்துடன் கூறினார் நயன்தாரா.
அப்போது அரங்கமே சிரப்பலையில் அதிர்ந்தது.