தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா – விக்னேஷ்சிவன் இருவரும் சமீபத்தில் ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் 2022 மார்ச் மாதமே ஒரு வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் நயன்தாரா நெற்றி வடிகில் குங்குமம் வைத்திருந்தார்.
இவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது ஏன் நெற்றியில் போட்டு வைத்தார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
திருமணத்திற்கு பிறகும் நிறைய படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளதால் அவர் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்தாராம்.
மேலும் ஏற்கனவே நயன்தாராவுக்கு 38 வயதாகி விட்டதால் இனிமேல் கருவுற்று குழந்தை பெறுவது கடினமான செயல் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் (4 மாத கணக்குப்படி) இன்று அக்டோபர் 9 ஆம் தேதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நாங்கள் அம்மா & அப்பா ஆகிவிட்டோம் என விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
(ஏற்கெனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி நயன்தாரா வாடகை தாய் மூலம் தற்போது குழந்தை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது)
ஏற்கனவே பாலிவுட் பிரபலம் நடிகை பிரியங்கா சோப்ராவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Nayanthara and Vignesh Shivan welcoming a Twin babies through surrogacy.