தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2022 ஆம் ஆண்டு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 6 தேதி கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்று உள்ளனர்.
ஆனால் நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜைக்குப் பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டது.
இருந்த போதிலும் நட்சத்திர தம்பதிக்காக மூடப்பட்ட கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் வெயிலில் காத்திருக்க இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு மட்டும் நடை திறக்கப்பட்டுள்ளது.
இதற்காக போலீஸ் அதிகாரிகளும் கோயில் நிர்வாக அதிகாரிகளும் அங்கு காத்திருந்தனர். ஆனால் பொது மக்களை உள்ளே அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் வெளியில் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
வழிபாடு நடத்திய பின்னர் கோயிலுக்கு வெளியே நயன்தாராவை சூழ்ந்து கொண்ட ரசிகைகள், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது, ரசிகை ஒருவர் தோள் மீது கை வைத்ததால் கடுப்பாகியுள்ளார் நயன்தாரா.
சில தினங்களுக்கு முன் மதுரையில் கீழடி பகுதியில் புதிதாக திறக்கப்பட்டு அரசு அருங்காட்சியத்திற்கு நடிகர் சூர்யா – ஜோதிகா உள்ளிட்டோர் குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
அப்போதும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் வெளியில் வெயில் காத்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவு இருக்கலாம்.
சமீப காலமாக நட்சத்திரங்களுக்காக.. பணம் படைத்தவர்களுக்காக அரசு அதிகாரிகள் செயல்படுவது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
Nayanthara and Vignesh Shivan Temple visit made controversy