‘முத்துநகர் படுகொலை’-ஐ தமிழகத்தில் திரையிடனும்.; வட இந்திய மக்களுக்கு திரையிட மேதா பட்கர் முடிவு

‘முத்துநகர் படுகொலை’-ஐ தமிழகத்தில் திரையிடனும்.; வட இந்திய மக்களுக்கு திரையிட மேதா பட்கர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஆவணப்படம் “முத்துநகர் படுகொலை’. M.S.ராஜ் இயக்கியிருக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான இந்த ஆவணப் படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், SDPI கட்சியின் மாநில தலைவர் முபாரக் உள்ளிட்ட தலைவர்கள் பார்த்து பாராட்டியுள்ளனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கு 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்த சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர் அவர்களுக்கு முத்துநகர் படுகொலை படம் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது.

இந்த்படத்தின் இயக்குனரை வெகுவாக பாராட்டிய மேதாபட்கர்…

” போலீஸ் அடக்குமுறையும் அரசு எந்திரங்களின் மோசமான தோல்வியும் பார்ப்பவர்களை பதற வைக்கும் அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு துணிச்சலான முயற்சி.

இந்த படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, திருமாவளவன் உதவி செய்ய வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் மகாராஷ்டிரா & மத்திய பிரதேசத்தில் போராடும் மக்களுக்கு முத்துநகர் படுகொலை ஆவணப்படத்தை திரையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

உடனிருந்த கூடங்குளம் அணு உலைப் போராளி சுப.உதயகுமாரும் படத்தை வெகுவாக பாராட்டினார்.

Mehta Bhatkar decides to screen Muthunagar Padukolai for North Indian people

நெஞ்சுக்கு நீதி… வயித்துக்கு பிரியாணி..; உதயநிதியும் உடன்பிறப்புகளும்..; சீமான் கிண்டல்

நெஞ்சுக்கு நீதி… வயித்துக்கு பிரியாணி..; உதயநிதியும் உடன்பிறப்புகளும்..; சீமான் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ஆர்ட்டிகிள் 15 பட தமிழ் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்று தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் உருவாகியுள்ளார்.

‘கனா’ படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதில் உதயநிதியுடன், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன் , ஷிவானி ராஜசேகர், ரவி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வசனங்களை தமிழரசன் எழுதியுள்ளார்.

‘நெஞ்சுக்கு நீதி’ ரிலீஸ்.: உதயநிதி ரசிகர்கள் மக்களுக்கு செய்யும் அநீதி

கனா படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சென்சாரில் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மே 20ல் இப்படம் தியேட்டர்களில் ரிலீசானது.

இந்த சீமான் இப்படத்தை கிண்டலடித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்…
படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள்.

சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!

இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.

NTK leader Seeman takes on Udhayanidhi stalin

——- பாத்துக்கலாம்.; கமல் ரசிகர்கள் அடித்த ஆபாச போஸ்டர் மீது போலீஸில் கம்ப்ளைன்ட்

——- பாத்துக்கலாம்.; கமல் ரசிகர்கள் அடித்த ஆபாச போஸ்டர் மீது போலீஸில் கம்ப்ளைன்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தின் ‘பத்தல பத்தல…’ பாட்டில் மத்திய அரசை விமர்சித்து வரிகள் இருந்தன. இதனால் சர்ச்சைகளும் ஏற்பட்டன.

சர்ப்ரைஸ் விசிட் : கமல்ஹாசனை கட்டியணைத்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்

விக்ரம் பட ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

ட்ரைலரில் கமல் ஆபாச வார்த்தையை பேசுவது போன்றுள்ளது.

இந்த நிலையில், அந்த வார்த்தையை பயன்படுத்தி, “சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..! ——- பாத்துக்கலாம்..!” என்ற வசனம் அடங்கிய போஸ்டரை அடித்துள்ளனர்.

இதை மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளான மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி செயலாளர் கதிரேசன் மற்றும் மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் சேது ஆகிய இருவரும் மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் ஒட்டியுள்ளனர்.

நாலு வருஷமானாலும் நச்ன்னு டபுள் ரெக்கார்ட் செஞ்ச கமலஹாசன்

போஸ்டரில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்று இருப்பது குறித்து மதுரை திடீர் நகர் மற்றும் தெற்கு வாசல் காவல்துறையினர் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Complained to police over controversy poster by Kamal fans

3வது முறையாக இணையும் சத்யஜோதி & ஹிப் ஹாப் ஆதி.; இந்த முறையாவது வெற்றி கிட்டுமா.?

3வது முறையாக இணையும் சத்யஜோதி & ஹிப் ஹாப் ஆதி.; இந்த முறையாவது வெற்றி கிட்டுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sathya Jyothi Films மற்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா கூட்டணி எப்போதும் வெற்றிகரமான திரைப்படங்களையே தந்துள்ளது.

இவர்கள் கூட்டணியில் வெளியான ‘ சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு’ திரைப்படங்கள், தோல்வியை சந்தித்தது.

இப்போது இந்த கூட்டணி மீண்டும் ‘வீரன்’ திரைப்படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

ஓடிடி-க்கு ஓடிய ஹிப் ஹாப் ஆதி..; சிவகுமாரின் சபதம் (சாபம்) காரணமா.?

ARK சரவணன் இயக்கும் “வீரன்” படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 25, 2022) காலை பொள்ளாச்சியில் எளிமையான சடங்குகளுடன் இனிதே தொடங்கியது.

படக்குழுவினர் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்புவார்கள்.

இந்த திரைப்படம் ஒரு ஃபேன்டஸி காமெடி ஆக்‌ஷன் என்டர்டெய்னர், இதில் ஆதிரா ராஜ் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

வீரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது மட்டுமின்றி ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தொழில்நுட்பக் குழுவில் தீபக் D மேனன் (ஒளிப்பதிவு), G.K.பிரசன்னா (எடிட்டர்), NK ராகுல் (கலை), மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்ஸ்), ட்யூனி ஜான் (பப்ளிசிட்டி டிசைனர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), அமீர் (ஸ்டில்ஸ்), மற்றும் கீர்த்தி வாசன் (ஆடை வடிவமைப்பாளர்).

வீரன் படத்தை Sathya Jyothi Films T.G.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

Satyajothi films & Hip Hop Aadhi joining for the 3rd time

21 வயது இளைஞர் கட்டிய ‘மாலைநேர மல்லிப்பூ’-வை வாழ்த்திய வசந்த் & கேஎஸ் ரவிக்குமார்

21 வயது இளைஞர் கட்டிய ‘மாலைநேர மல்லிப்பூ’-வை வாழ்த்திய வசந்த் & கேஎஸ் ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாக பேசுகிறது.

பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி நாராயணன் தயாரித்திருக்கிறார்.

பாலியல் தொழிலாளியின் ஆட்டோகிராஃப்பை சொல்லும் 21 வயது இளம் இயக்குநர்

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த் கலந்து கொண்டு பேசும் போது,…

“எல்லோருக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பத்திரிக்கைத் துறை நண்பர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருப்பதில் சந்தோசம் அடைகிறேன். இந்தப் படத்தோட இயக்குநர் சஞ்சய் நாராயணன் 21 வயசுலயே நினைக்க முடியாத ஒரு சப்ஜெக்ட பர்ஸ்ட் படத்துல எடுத்ததுக்காகவே நீங்கெல்லாம் கை தட்டலாம்.

என்னோட கேளடி கண்மணி படத்துக்கு ஆனந்த விகடன்ல அப்ப துணை ஆசிரியராக இருந்த மதன் சார் விமர்சனத்துல ஒரு வரி எழுதி இருந்தாரு. “ஒரு குழந்தை டிராக்டர் ஓட்டுகிறது” அப்டின்னு. எனக்கு அப்ப அது புரியல..

ஏன் சார் அப்டி எழுதியிருக்கீங்கன்னு கேட்டேன்.. அப்ப அவரு சொன்னாரு, மத்த வண்டியெல்லாம் ஓட்டிரலாம். டிராக்டர் ஓட்டுறது ரொம்ப கஷ்டம்.

அதனால தான் அந்தப் பாராட்டுன்னு சொல்லிருந்தாரு. அந்தப் பாராட்டு இந்தப் படத்துக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன். நான் இன்னும் முழுப் படமும் பார்க்கவில்லை. ஆனாலும் இங்கு காட்டிய சின்ன சின்ன க்ளிப்ஸ் பார்க்கும் போது முதல் பட இயக்குநர் போலத் தெரியவில்லை. பல படங்களை எடுத்த அனுபவமிக்க இயக்குநர் எடுத்த மற்றொரு படம் போலத்தான் இது இருக்கிறது.

இதைத்தான் நான் இயக்குநரும் நண்பருமான கே.எஸ்.ரவிக்குமார் அவர்களிடமும் கூறினேன். “நாமெல்லாம் ரொம்ப காலம் உதவி இயக்குநராகவே கழித்து விட்டோம்” என்று சிரித்துக் கொண்டோம்.

இந்தப் படத்தோட இயக்குநரைப் பாராட்டுவது போலவே இப்படத்தை தயாரித்திருக்கும் இயக்குநரின் தாய் விஜயலெக்ஷ்மி அவர்களுக்கும் என் பாராட்டுக்கள். ஏன் என்றால் மகனின் முதல் படம், தலைப்பு ‘மாலை நேர மல்லிப் பூ” அதைப் புரிந்து கொண்டு அவர்களின் தாய் அதை தயாரிப்பதென்பது மிகப் பெரிய விசயம். வினித்திரா மிகச் சிறந்த நடிகை. இப்படத்திற்கு அவர்களும் மிகப் பெரிய சப்போர்ட்டாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

Maalai Nera Malipoo Trailer

எனக்கு கதை எழுதும் போது ஏதாவது ப்ளாக் ஏற்பட்டா சென்னை கிறிஸ்டின் காலேஜ் தான் போவேன். அங்க இருக்குற ஏராளமான மரங்கள் தான் எனக்கு கதை சொல்லும். அந்தக் காலேஜ்ல தான் இந்த இயக்குநர் படிச்சிட்டு வந்திருக்காரு, அதனால அந்த மரங்கள் அவருக்கு ஏராளமான கதைகளை சொல்லி இருக்கும். இது போன்ற மிகச் சிறந்த படங்களை அவர் எடுக்க வாழ்த்துகிறேன்.

இந்தப் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று பேசினார்.

’நெடுநல்வாடை’ பட இயக்குநர் செல்வக்கண்ணன் பேசும் போது,…

“அனைவருக்கும் வணக்கம், இந்தப் படத்தோட கிளிப்பிங்க்ஸ் விஷ்வல்ஸ் பார்க்கும் போது ரொம்ப சர்ப்ரைஸ் ஆக இருந்தது. நிச்சியமாக இளம் இயக்குநர் சஞ்சய் நாராயணனிடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு சப்ஜெக்ட் எடுத்துக்கிட்டு அதை ஒரு உப்புமா படம் போல பல பேர் எடுத்து வைப்பாங்க… ஆனா இந்தப் படம் அப்டி இல்லை.

டெக்னிக்கலாவும் நல்ல ஸ்டிராங்கான படமாத் தெரியுது. ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க.. நான் இந்தப் படத்தோட ஒளிப்பதிவாளரப் பாத்து சிரிச்சிக்கிட்டே இருந்தேன்.. ஏன்னா எல்லாரும் பாக்குறதுக்கு ரொம்ப சின்ன பசங்களா இருக்காங்க.. அப்டியே ஸ்கூல்ல இருந்து வந்தவுங்க மாதிரியே இருக்காங்க.. பட் அவுங்க படைப்பை பார்த்தால் பிரமிப்பாக இருக்குது.

நம்பவே முடியல. டிரைலர் பாக்கும் போதே இந்தப் படத்தோட Depth என்னென்னு தெரியுது. எடுத்த கதைக்கருக்கு படம் கண்டிப்பா நியாயம் சேர்க்கும்னு தோணுது. அம்மாவுக்கும் பையனுக்குமான உறவை சொல்லுகிற படத்தை இயக்குநரின் அம்மாவே தயாரித்து இருக்கிறார். அது மிகவும் அழகான விசயம். மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏனென்றால் இது போன்ற அம்மா எல்லாருக்கும் கிடைக்காது. இயக்குநர் மிகவும் அதிர்ஷ்டசாலி அவர்களுக்கு என் நன்றிகள். மொத்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள்.

படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் பேசும் போது….

, “ இது ஒரு சின்ன படம். ரொம்ப ரொம்ப சின்னப் படம். இதற்கு நீங்கள் இவ்வளவு ஆதரவு தருவது, இந்த ஹால் முழுக்க நிரம்பி இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எங்கள் படத்தின் டிரைலரை ஆன்லைனில் வெளியிட்ட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் சாருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கு வந்திருக்கும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவை எங்களுக்குக் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் படக்குழுவினர் அனைவருமே எனக்கு மிகச் சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். அவர்களுக்கும் என் தாய்க்கும் நன்றிகள்.” என்று பேசினார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் பேசும் போது….

, பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் PRO-க்கள், யுவராஜ் போன்ற அனைவருக்கும் வணக்கம். இப்படத்தின் தயாரிப்பாளர் விஜயலெக்ஷ்மி அவர்கள் என் கல்லுரி விரிவுரையாளர் Mr.ராஜேந்திரன் அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் என்னை சந்திக்க வந்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள சொல்லி அழைப்பு விடுத்தார்கள். நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரம் இருப்பதில்லை என்பதால் புறக்கணிக்க நினைத்தேன். படத்தின் தயாரிப்பாளர் யார் என்று இயக்குநரைக் கேட்டேன். அவர் என் அம்மா தான் என்று சொன்னார். அவர்கள் நல்ல பணக்காரர்களா என்று கேட்டேன். இயக்குநர் இல்லை சார், என் அம்மா எனக்காக அவர்களின் நகைகளை எல்லாம் விற்று படம் தயாரித்திருக்கிறார் என்று கூறினார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இவர்கள் தான் இப்படத்தை முன்னெடுத்தவர், அதனால் தான் அவரை முன்னால் அமரச் சொல்லிக் கேட்டேன்.

இயக்குநர் பாலச்சந்தர் அரங்கேற்றம் படம் எடுப்பதற்கு முன்னர் பல படங்கள் எடுத்துவிட்டார். ஆனால் இப்படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் தன் முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையில் தாய் மகனுக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பை தன் கதையாக எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அந்த தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன். இயக்குநரை முதலில் நேரில் பார்க்கும் போது, அவருக்குள் என்ன மாதிரியான விசயங்கள் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. இன்று அவர் மேடையில் பேசும் போதும், அவரின் படைப்பைப் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருக்கிறது. இவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. பார்ப்பதற்கு கார்த்திக் சுப்புராஜ் போல இருக்கும் இந்த இயக்குநர் அவரைப் போலவே பெரும் புகழ் அடைய வாழ்த்துகிறேன். இயக்குநர் வசந்த் கூறியது போல், ஒவ்வொரு காட்சியிலும் கணம் இருந்தது. கதைக்கருவிற்கு காட்சிகள் வலு சேர்க்கிறது. நாயகி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்பொழுது கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளம் வளர்ந்து வருகிறது. எனவே யார் மூலமாக இப்படத்தை வெளியிடுவது என்பதில் கவனமாக இருக்கவும். எனக்குத் தெரிந்து இதை ஓடிடி தளத்தில் வெளியிடுவது சிறந்தது” என்று கூறினார்.

நாயகி வினித்ரா மேனன் பேசும் போது, “இந்த படக்குழுவைப் பார்க்கும் போது இவர்களை நம்பலாமா..? என்று தோன்றியது. ஏனென்றால் என்னைவிட அனைவரும் இளையவர்களாக இருந்தார்கள். ஆனால் கதையை படித்ததும் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. அது போல் இயக்குநரின் அம்மா இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டும் இல்லை. இப்படத்தின் எல்லா துறைகளிலும் அவர்கள் பணியாற்றினார்கள். உணவு தயாரிப்பது, ஆர்ட் டிப்பாட்மெண்டில் உதவுவது, காஸ்ட்யூம் ரெடி செய்வது இப்படி இப்படத்தின் முதுகெலும்பாக இருந்தவர்கள் அவர்கள் தான். மொத்தமே எங்கள் யூனிட்டில் ஒரு பத்து பேர் தான் இருப்போம். நான் எனது கதாபாத்திரத்தை மிகவும் விரும்பி செய்திருக்கிறேன். மிகவும் சவால் நிறைந்த கதாபாத்திரம். அதை எடுக்கும் போது பல தருணங்களில் நாங்கள் எல்லோருமே உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினோம். இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. என்னால் முடிந்த அளவிற்கு இப்படத்தில் நான் சிறப்பாக நடித்திருக்கிறேன். இப்படத்திற்கு நீங்கள் அனைவரும் உங்கள் ஆதரவை கொடுத்து உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.” என்று பேசினார்.

இயக்குநர் சுப்ரமணிய சிவா பேசும் போது, “ஊரில் ‘டேய் இதெல்லாம் சின்னப் பசங்க பாக்குற வேலையாடா..? என்று பேசுவார்கள். ஆனால் இது போன்ற படங்களை சின்ன வயதில் தான் எடுக்க வேண்டும். ஏனென்றால் சின்ன வயதில் காமம் காதல் வந்தால் தான் அது சரி. ஒரு வயதுக்கு மேல் காதல் காமம் வந்தால் அது மனநோய். ஆக இது தான் காதல் மற்றும் காமத்திற்கான வயது. எனவே அந்த வயதிற்கான படத்தையே சஞ்சய் நாராயணன் எடுத்திருக்கிறார். நம் தமிழ் திரையுலகின் கமர்ஸியல் மாஸ்டர் என்றால் அது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சார் தான். அவர்களுடைய பாராட்டும் இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் கிடைத்திருக்கிறது. அது அவ்வளவு எளிதான விசயம் அல்ல.. அது போல கிளாசிக் மாஸ்டரான இயக்குநர் வசந்த் சார் அவர்களின் பாராட்டும் இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் கிடைத்திருக்கிறது. ஆக கமர்ஸியல் மற்றும் கிளாசிக் இயக்குநர்கள் இருவரின் பாராட்டையும் இப்படம் ஒருங்கே பெற்றிருப்பதால் இந்தநாள் சிறப்பு வாய்ந்தது.

தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்தியாவில் 30 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக புள்ளியல் விவரம் கூறுகிறது. இதற்கு முழுக் காரணம் வறுமை. இதனால் பாதிக்கப்படும் ஆண் வன்முறையை நோக்கியும் பெண் பாலியல் தொழில் நோக்கியும் போகிறாள். பாலியல் தொழில் என்பது ஆதித் தொழில். பைபிளில் இது குறித்த கதைகள் இருக்கின்றது. நம்முடைய தமிழ் புராணமான சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி கதாபாத்திரம், புகார் நகரில் இருந்த பெரிய பாலியல் தெருக்கள் போன்ற குறிப்புகள் எல்லாம் நாம் அறிவோம். ஆக அப்போது இருந்த ஒரு ஆதித் தொழில் இன்றைய 5G யுகத்தில் எப்படி இருக்கிறது என்பதைத் தான் இயக்குநர் கூறியிருக்கிறார். ஒவ்வொரு சமூகத்திலும் தாய் என்பவள் மிகவும் வலிமையானவள்; அவளை நாம் அடக்கித் தான் வைத்திருக்கிறோம். அவள் தாயோ, மனைவியோ, மகளோ, தோழியோ நாம் அடக்கித் தான் வைத்திருக்கிறோம். இப்படத்திலும் அப்படித்தான் வலிமையான தாய் தன் மகனின் சிறந்த எதிர்காலத்திற்காக எப்படி போராடுகிறாள் என்பதே கதை.

சிலப்பதிகாரத்தில் மாதவியும் தன் மகள் மணிமேகலைக்கும் அதையேதான் செய்தாள். ஆக பாதிக்கப்படும் பெண்களின் சார்பாக பேச வேண்டியது ஒரு எழுத்தாளனின் ஒரு படைப்பாளியின் கடமை. அந்த கடமையை நிறைவேற்றும் படைப்பாகத்தான் இப்படம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த இயக்குநரின் முதல் படத்திலேயே இவரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. இதனை பணமாக மாற்ற வேண்டும். அரசு கல்லூரிகள் இருக்கும் வரை மாணவர்களிடம் போராட்டக் குணமும், சமூக அக்கறையும் இருந்தது. ஆனால் எப்பொழுது இன்ஜினியரிங் கல்லூரிகளாக அவை மாறியதோ அப்போதே அவர்களிடம் போராட்டக் குணம், சமூக அக்கறை போன்றவை தொலைந்து போய் காசு சேர்க்கும் ஆசை மட்டுமே எஞ்கி இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இந்த இயக்குநர் தாயின் பிள்ளையாக இருப்பதால் இவர் மனித நேயத்தோடு தான் படம் எடுத்திருப்பார். இப்படம் நிச்சயமாக பேசப்படும் என்று நம்புகிறேன். இப்படத்திற்கும் இப்படக் குழுவினருக்கும் மிகப் பெரிய வாழ்த்துக்கள்.” என்று பேசினார்.

Vasanth and KS Ravikumar praised Maalai Nera Mallipoo

ஒரே படத்தில் தங்கர்பச்சான் ஜிவி.பிரகாஷ் பாரதிராஜா யோகிபாபு கௌதம் மேனன் கூட்டணி

ஒரே படத்தில் தங்கர்பச்சான் ஜிவி.பிரகாஷ் பாரதிராஜா யோகிபாபு கௌதம் மேனன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனித உறவுகளை மய்யமாகக் கொண்ட அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான அழுத்தமான திரைப்படங்களை தந்த தங்கர் பச்சான் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார்.

அதற்கு ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்று பெயரிட்டுள்ளார்.

இப்படத்தை, வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் D.வீரசக்தி பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

தரகர்களால் தரங்கெட்ட தனியார் கல்வி நிறுவனங்களை எச்சரிக்கும் ‘செல்ஃபி’ – தங்கர் பச்சான்

இப்புதிய திரைப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவருமே இது வரை நடித்திராத அழுத்தமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

மற்றொரு முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையை, பிரபல நாயாகியாக தேர்வு செய்து வருகிறார்கள்.

மிக முக்கியமாக கருதும் இப்படத்தின் இசை அமைக்கும் பொறுப்பை ஜி.வி.பிரகாஷ் ஏற்றுள்ளார். முதன் முறையாக தங்கர் பச்சானுடன் இணைந்து பணிபுரிகிறார்.

பிரபலங்கள் N.K.ஏகாம்பரம் ( சோனி ஓடிடி -க்கு சேரன் இயக்கி வரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் ) ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் தங்கவேல் ( இந்தியன் 2, அயலான் ) கலையை அமைக்கிறார்.

ஜூலை மாதம் 25 முதல் இரு கட்டங்களாக படப்பிடிப்புகள் தொடங்குகின்றன.
ஜி. வி. பிரகாஷ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் உருவாகி கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பிறர் அறியாத பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டு குற்ற உணர்வில் நிம்மதி இழந்து மன்னிப்புத்தேடி அலைபவனின் மனநிலைக்கு ஏற்ப பாடல் ஒன்றை எழுதி முடித்து ஈரம் காயாத விழிகளுடன் வைரமுத்து டிவிட்டரில் ..

“தங்கர்பச்சான் இயக்க
ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம்
‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ பாட்டெழுதும்போதே சொல்லோடு கசிந்தது கண்ணீர்.
விழுமியங்கள் மாறிப்போன சமூகத்திற்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை.. கண்களாவது இருக்குமா?..

என அழுத்தமான மன உணர்வுகளை பதிவிட்டுள்ளார்.

வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் D.வீரசக்தி இப்படம் குறித்து,

“மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. இக்கதையை கேட்ட மாத்திரத்திலேயே கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன்.

அடுத்த நொடியே படத்தை தயாரிக்க முடிவெடுத்துவிட்டேன். இது தங்கர் பச்சானின் அழுத்தமான மற்றொரு படைப்பு. தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இது இருக்கும்..”

என்று சொல்லியுள்ளார்.

‘திரௌபதி’ பிடிக்கல.. ‘ருத்ர தாண்டவம்’ படத்தை மக்கள் பார்க்க அதிகமாக பேசும் மோகன்…; தங்கர் பச்சான் கடிதம்

தங்கர் பச்சான் இயக்கத்தில் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் “டக்கு முக்கு டிக்கு தாளம்” திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளுக்கிடையில் இப்புதிய திரைப்படத்தின் பாடல்களை உருவாக்கும் பணிகளை துவக்கியுள்ளார் தங்கர் பச்சான்.

G.V.Prakash is joining hands with Thangar Bachan for a film called ‘Karumegangal yaen Kalaiginrana ?’

More Articles
Follows