தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது தமிழகமே ஏன் உலகமே எதிர்பாராத வகையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் எந்த ஒரு தலைவனும் இல்லாமல் இளைஞர்கள் தானாகவே முன்வந்து ஜல்லிக்கட்டு புரட்சியை ஒழுக்கமான முறையில் 2 வாரங்கள் நடத்தினர்.
தற்போது இந்த மெரினா புரட்சி பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.
இந்த ‘மெரினா புரட்சி’ திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், இதன் இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இப்படத்தை நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் சி ஜே பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
Marina Puratchi directors next movie titled Uranga Puli