கூத்தடிப்பது பிடிக்கல.; பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கண்டிசன் போடும் மன்சூர் அலிகான்

கூத்தடிப்பது பிடிக்கல.; பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கண்டிசன் போடும் மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் மன்சூர் அலிகான்.

இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசியதாவது…

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், ‘நான் தான் பிக்பாஸாக இருப்பேன்’ என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்!

மேலும்… “பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், ‘விவசாயத்திற்கு முக்கியத்துவம்’ கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸாக இருந்து நடத்துவேன் என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட விதவை பெண்ணுக்கு உதவிய தயாரிப்பாளர் தாணு

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட விதவை பெண்ணுக்கு உதவிய தயாரிப்பாளர் தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான கலைப்புலி எஸ் தாணு.

கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு வருடங்களாக இடைநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அவரது நுரையீரலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அவர் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் (TRANSTAN) பதிவும் செய்யப்பட்டு இருக்கிறார்.

தயாரிப்பாளர் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு, நோயாளியின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் காவேரி மருத்துவமனையின் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் ஆகியோர், நோயாளியின் குடும்பத்தினர் சார்பாக இந்த தொகையை பெற்றுக்கொண்டதோடு, அவரது உன்னத செயலுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

காவேரி மருத்துவமனை இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவை மானியமாக வழங்கியுள்ளதுடன் மேலும் பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது.

வாய் பேசாத காது கேளாத நடிகையை திருமணம் செய்யும் விஷால்.?!

வாய் பேசாத காது கேளாத நடிகையை திருமணம் செய்யும் விஷால்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

45 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டி முடித்த பின் தான் தனது திருமணம் என சபதம் எடுத்தவர் இவர்.

நடிகர் சங்க கட்டிடமும் முடிந்தபாடில்லை.. விஷால் கல்யாணமும் முடிந்தபாடில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் இவர்கள் உறவில் பிரச்சினை வந்ததால் இருவரும் பிரிந்தனர்.

அதன்பின்னர் ஒரு தொழிலதிபரின் பெண் அனீஷா என்பவரை நிச்சயதார்த்தம் செய்தார். அந்த திருமணமும் நடைபெற வில்லை.

இந்த நிலையில் தற்போது நடிகை அபிநயா என்பவரை விஷால் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஈசன், நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபிநயா. குற்றம் 23 படத்தில் அருண் விஜய்க்கு அண்ணியாக நடித்து பாராட்டுகளையும் பெற்றார். அழகும் திறமையும் நிறைந்தவர் இவர்.

அதே சமயம் அபிநயா காது கேளாதவர் மற்றும் வாய் பேச முடியாதவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுபற்றி நாம் விசாரித்த வரையில் இது உறுதியான தகவல் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

nadodigal-abinaya-stills-pics

Actor Vishal marriage news updates

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் ஹீரோ – ஹீரோயின் இவர்கள் தான்.!?

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் ஹீரோ – ஹீரோயின் இவர்கள் தான்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்க்ஷி இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.

இவர்கள் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.

இந்த படம் சாக்ஷியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும்.

இந்த படத்தை ‘அதர்வா – தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Who will be Hero and Heroine in Dhoni Entertainments first movie

கதிர் நரேன் நட்டி ஆகியோருடன் 3 நாயகிகள் இணைந்த ‘யூகி’

கதிர் நரேன் நட்டி ஆகியோருடன் 3 நாயகிகள் இணைந்த ‘யூகி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர் – ஆனந்தி மீண்டும் ஜோடியாக இணைந்துள்ள படம் ‘யூகி’.

இந்த ஜோடி ஏற்கெனவே இணைந்து நடித்த படம் ‘பரியேறும் பெருமாள்’.

அந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது இணைந்துள்ளனர்.

இவர்களுடன் நரேன், நட்டி, பவித்ரா லக்ஷ்மி, ஆத்மியா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படம் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 11:11 புரொடக்ஷன்ஸ் சார்பாக Dr.பிரபு திலக் வெளியிடுகிறார்.

Kathir Anandhi Narain Natty starrer Yugi

@am_kathir @natty_nataraj @itsNarain @anandhisocrates @itspavitralaksh @athmiyainsta @prabhuthilaak @ranjinraj_ @FilmUan #JuvisProduction @aaarproductions @ZacHarriss @shijualex09 @DoneChannel1

‘AK 62’ படத்தில் மீண்டும் அஜித்துடன் இணையும் பிரபல நடிகை…

‘AK 62’ படத்தில் மீண்டும் அஜித்துடன் இணையும் பிரபல நடிகை…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61வது படமான ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்.

இப்படம் 2023 இல் பொங்கலுக்கு முன்னர் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ‘ஏகே 62’ என்ற தற்காலிகத் தலைப்பில் அஜித் ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது, ​​நடிகை த்ரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‘ஏகே 62’ படத்தின் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவை தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்துடன் ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களில் இணைத்துள்ளார் நடிகை த்ரிஷா.

த்ரிஷா

Ajith starring ‘AK 62’ joins trisha

More Articles
Follows