தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மிகவும் எளிமையான மனிதர், நடிகர் என்பதால்தான் மக்கள் செல்வன் பட்டத்தை விஜய்சேதுபதிக்கு கொடுத்தேன் என்றார் இயக்குனர் சீனுராமசாமி.
அவரும் பெயருக்கு ஏற்றார் போல் அனைவரிடமும் எளிமையாகவும் அன்பாகவும் பழகி வருகிறார்.
மேலும் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்தாலும் சம்பளத்தை உயர்த்தவில்லை என கூறப்படுகிறது.
இவரின் பண்பை நிரூபிக்கும் வகையில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.
இவர் அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இவரிடம் பேசிய மணிரத்னம் உங்களைத்தவிர இந்த படத்தில் இன்னும் 3 ஹீரோக்கள் இருக்கிறார்கள் என அவர்களின் பெயரை தெரிவித்தாராம்.
“என் கேரக்டர் எனக்கு ஓகே. அது பிடிச்சிருக்கு. நான் நிச்சயம் நடிக்கிறேன். மற்ற கேரக்டரில் யார் நடித்தாலும் பரவாயில்லை. என்றாராம்.
விஜய்சேதுபதியின் இந்த பதிலால் ஆச்சயரியப்பட்டு போனாராம் மணிரத்னம்.
அந்த 3 ஹீரோக்கள் அரவிந்த்சாமி, துல்கர்சல்மான், பகத் பாசில் என கூறப்படுகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
Mani Ratnam Vijay Sethupathi combo movie updates