இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனர் லோகேஷ்.; சினிமா பைத்தியம் அப்பாஸ்.. – விஜயகுமார்

இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனர் லோகேஷ்.; சினிமா பைத்தியம் அப்பாஸ்.. – விஜயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்”. திரைப்படம்.

ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக, இணையதள, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா பேசியதாவது…

ஃபைட் கிளப், மிகப்பெரிய அனுபவம். முதலில் லோகேஷ் பிரதருக்கு நன்றி. இந்தப்படம் பற்றி பேச நிறைய இருக்கிறது. ரீல் குட்ஸ் ஃபிலிம்ஸ் ஆரம்பித்ததிலிருந்தே விஜய்குமாரும் நானும் படம் செய்யப் பேசி வந்தோம். இப்போது இந்த கட்டத்திற்குப் படம் வந்துள்ளது மகிழ்ச்சி.

இந்தப்படம் கடந்த ஆண்டு பாதி முடித்திருந்தபோது விஜய் குமார் லோகேஷ் பிரதருக்கு படம் காட்ட வேண்டும் என்றார். அப்போது விக்ரம் சக்ஸஸில் இருந்தார் லோகேஷ். படம் பார்ப்பதற்கு முன்பாகவே விஜய்குமார் பண்ணியிருந்தால் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் நான் வெளியிடுகிறேன் என்றார்.

எங்களை நம்பி, ஜி ஸ்குவாட் முதல் படைப்பாக எங்கள் படத்தை வெளியிடுவதற்கு நன்றி. நண்பர் ஜெகதீஷ் அவர்களுக்கு என் பெரிய நன்றி இப்படத்தைப்பற்றிச் சொல்ல வேண்டும், அப்பாஸ் இந்தக்கதை சொன்னதிலிருந்து இன்று வரை இப்படத்திற்காக உழைத்து வருகிறார். அவரது டீம் கடின உழைப்பைத் தந்திருக்கிறார்கள். விஜய் குமார் உறியடி வந்ததிலிருந்து இன்று வரை அவரை வியந்து பார்க்கிறேன். அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி.

ஒரு திரைப்படமாக புதிய அனுபவத்தைத் தரும்படி இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ரீல் குட் ஃபிலிம்ஸ் தொடர்ந்து நல்ல படங்களை வழங்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகை மோனிஷா மோகன் மேனன் பேசியதாவது…

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு பெரிய மேடையில், இப்படிப்பட்ட படத்தில் இருப்பதை ஆசீர்வாதமாக நினைக்கிறேன். இந்தப்படம் சினிமா காதலர்கள் விரும்பும் படம். மிகவும் அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம்.

இங்குள்ளவர்களைச் சந்திப்பதே பாக்கியம் என நினைக்கிறேன், இவர்களோடு பணியாற்றியது மகிழ்ச்சி. திரைப்படம் தான் என் கனவு, உதவி இயக்குநராக இரண்டு படங்கள் மலையாளத்தில் வேலைப்பார்த்திருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு வந்த போது, உறியடி விஜய்குமார் என்று சொன்னார்கள், உடனே எனக்குத் தெரிந்த எல்லோரும் கண்டிப்பாக நீ நடிக்க வேண்டும் எனச் சொன்னார்கள்.

விஜய்குமாருக்குக் கேரளாவில் நிறைய ஃபேன்ஸ் இருக்கிறார்கள். லோகேஷ் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தியா முழுக்க பிரபலமானவர் எங்கள் படத்தை வெளியிடுகிறார் நன்றி. அப்பாஸ் அட்டகாசமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். உங்களுக்கு இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் பேசியதாவது…

2020ல் இப்படத்தை அறிவித்தோம் கொரோனா, ஷீட்டிங், லோகேஷன் என நிறையப் பிரச்சனை படம் 3 வருடங்கள் ஆகிவிட்டது. விஜய்குமார் சார் நினைத்திருந்தால் வேறு படம் இயக்கப் போயிருக்கலாம்.

ஆனால் எங்களுக்காகவும் தயாரிப்பாளருக்காகவும் காத்திருந்து, இப்படத்தில் வேலை செய்த விஜய்குமார் சாருக்கு நன்றி. தான் மட்டுமில்லாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் லோகேஷ் சாருக்கு நன்றி. ஆதித்யா சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த படக்குழுவினருக்கு நன்றி. படத்தை அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

நாயகன் விஜய்குமார் பேசியதாவது…

இந்த டைட்டில் ஒரு ஆங்கில பட டைட்டில் மிகப்புகழ் பெற்ற டைட்டில் கல்ட்கிளாசிக், அந்தக்கதை வேறு இந்தக்கதை வேறு ஆனாலும் அதை நம் படத்திற்கு வைக்கலாமா என யோசித்தோம்.

நாம் ஆத்மார்த்தமாகக் காதலுடன் உருவாக்கியுள்ள படம் அந்தப்படத்திற்குத் தரும் மரியாதையாக இருக்கும் என்பதால் வைத்தோம். நாம் நினைத்த மாதிரி படத்தை உருவாக்க வேண்டும் எனும்போது, அதில் நிறையப் பிரச்சனைகள் வரும் அதற்கான உழைப்பை, நம் அர்ப்பணிப்பைத் தந்து தான் ஆக வேண்டும். லோகேஷ் என் நெருங்கிய நண்பர்.

நான் எது செய்தாலும் அதைக் கவனித்துப் பாராட்டுவார். இந்தப்படம் விக்ரம் சக்ஸஸ் டைமில், 20 நிமிடம் தயாராகியிருந்தது.

அப்போது பார்த்தார். பின்னர் லியோ வெளியீட்டு டைமில் முழுசாக முடித்துவிட்டுக் காட்டினோம்.. அவர் பேனரிலேயே இந்தப்படம் வெளியாவது மகிழ்ச்சி. அவர் இந்தியாவின் மிகப்பெரிய இயக்குநராக இருக்கிறார்.

எப்போதும் நாங்கள் சினிமா பற்றித் தான் பேசுவோம். அவர் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. நண்பர் ஜெகதீஷ் மற்றும் சக்திவேலன் சார் இப்படத்திற்கு மிகப்பெரும் ஆதரவாக இருக்கிறார்கள் அவர்களுக்கு என் நன்றி. இப்படத்தில் நிறையப் புதுமுகங்கள் அர்ப்பணிப்போடு வேலை பார்த்துள்ளனர். தயாரிப்பாளர் சினிமா மேல் உள்ள காதலால் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

அவருக்காக இந்தப்படம் பெரிதாக ஜெயிக்க வேண்டும். அப்பாஸ் ஒரு சினிமா பைத்தியம், சினிமா தவிர அவனுக்கு எதுவும் தெரியாது. தீவிரமான மணிரத்னம் ஃபேன் அவனை இயக்குநராக இந்த உலகம் பாராட்டுவதைக்காண நானும் காத்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

Lokesh is big director in India says Vijayakumar

இந்தியத் திரையுலகில் சாதனை படைத்த ‘டங்கி டிராப் 4’ டிரைலர்

இந்தியத் திரையுலகில் சாதனை படைத்த ‘டங்கி டிராப் 4’ டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தை டங்கி திரைப்படத்தின் மனம் வருடும் பயணத்துடன் முடிப்பதற்காக, ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது.

இந்த டிரெய்லர் மனதின் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் படைப்பாக்கத்தின் திரை அழகை எடுத்துக்காட்டுகிறது.

போமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர், மற்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, இன்னும் பல திறமையான நடிகர்களால் சித்தரிக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், பார்வையாளர்களை ஒரு ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு இந்த வீடியோ நம்மை அழைத்துச் செல்கிறது.

ஷாருக்கின் வசீகரத்துடன் ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங்களுடன் மாயாஜாலத்தை நிகழ்த்தும் டங்கி டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் அனைத்து தளங்களிலும் 103 மில்லியன் பார்வைகளை பெற்று, சாதனை படைத்துள்ளது.

இது ஒரு ஹிந்தி படம் இதுவரை செய்யாத உச்சபட்ச சாதனை இதுவாகும்.

டங்கி டிராப் 4

தனது சொந்த சாதனைகளை முறியடிப்பதில் திரையுலகின் வல்லவராக அறியப்படும் ஷாருக், சமீபத்தில் மெகா ஹிட்டான ஜவானிலும் இதையே செய்திருந்தார், தற்போது டங்கி மூலன் மீண்டுமொரு முறை அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியானதிலிருந்தே பார்வையாளர்களின் அன்பைப் பெற்று, எட்டுதிக்கும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது.

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் வசீகரமான படைப்புலகில் நம்மை அழைத்துச் செல்வதுடன், நான்கு நண்பர்களின் இதயத்தைத் தூண்டும் கதையையும் வெளிநாட்டுக்கு செல்லும் கனவில் அவர்களின் தேடலையும் நமக்குச் சொல்கிறது.

நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டங்கி திரைப்படம் அன்பு மற்றும் நட்பின் பெருமையை விவரிக்கும் காவியமாகும்.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘டங்கி’ திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பரில் வெளியாகிறது.

டங்கி டிராப் 4

https://x.com/redchilliesent/status/1732317879180439989?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

Dunki Drop 4 Trailer 103 Million Views cross in 24 Hours

அன்பு நிறைந்த உலகம்..; ஷாரூக்கானின் ‘டங்கி டிராப் 4’ வெளியானது

அன்பு நிறைந்த உலகம்..; ஷாரூக்கானின் ‘டங்கி டிராப் 4’ வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் & அவரது ‘சார் உல்லு தே பத்தே’ – ஆகியவை இணைந்து வாழ்நாள் பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறது
தி டங்கி:

இந்த ஆண்டின் மிகவும் இதயத்தைத் தூண்டும் படமாக அமைந்துள்ள தி டங்கியின் டிராப் -4 ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காட்சியை அளித்துள்ளது.

ராஜ்குமார் ஹிரானியால் படம் உருவாக்கப்பட்டுள்ளது. டாப்ஸி பன்னு, நடிகர்கள் போமன் இரானி, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட டங்கி படத்தின் டிராப்-4, ராஜ்குமார் ஹிரானியின் அன்பான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது.

ரயிலில் ஷாருக்கான் (SRK) பயணிப்பதுடன் தொடங்கும் கதையானது, அதைத் தொடர்ந்து படத்தில் நடைபெறும் சாகசத்துக்கான தொனியில் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.

பஞ்சாபில் உள்ள ஒரு அழகிய கிராமத்துக்குச் சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகிய இருவரும் லண்டனுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவைச் சந்திக்கும் ஹார்டியுடன் (நடிகர் ஷாருக் கானின் கேரக்டர்) தொடங்கிறது.

ஷாருக்கானின் பிறந்தநாளில் டங்கி டிராப்-1 (Dunki Drop 1) வெளியானது. இதைத் தொடர்ந்து அர்ஜித் சிங்கின் இனிமையான குரலில் லுட் புட் கயா என்ற தலைப்பில் டங்கி டிராப் 2 வெளியானது.

டிராப்-3-ல் சோனு நிகாமின் ஆன்மாவைத் தூண்டும் பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே, ஒரு கூர்மையான மெல்லிசையுடன் அமைந்த பாடல் இதயங்களைக் கவர்ந்தது.

தற்போது டங்கி டிராப் 4, நட்பு மற்றும் அன்பின் அடுக்குகளை அழகாக விரித்து, டங்கி படத்தின் பாதையில் பார்வையாளர்களை பரபரப்பான பயணத்துக்கு அழைத்துச் செல்கிறது.

ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் இணைந்து வழங்கும் டங்கி படத்தை ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் தயாரித்துள்ளனர்.

அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் ஆகியோரால் எழுதப்பட்ட இப்படம் 21 டிசம்பர் 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

https://bit.ly/DunkiDrop4-Trailer

Shahrukh starrer Dunki Drop4 song goes viral

சென்னை MLAs வெளியே வாங்க.. இது கேவலம்..; அரசை கண்டித்த வாக்காளர் விஷால்

சென்னை MLAs வெளியே வாங்க.. இது கேவலம்..; அரசை கண்டித்த வாக்காளர் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 4ஆம் தேதி நள்ளிரவு சென்னையை கடப்பதற்கு முன்பு பகலில் சென்னையில் பேய் மழை கொட்டிக் கொண்டிருந்தது.

தற்போது வரை சென்னை பெரு வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கிறது. பல ஏரியாக்களில் கழுத்தளவு நீரில் மக்கள் தங்கள் உயிரை காப்பாற்ற நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

மேடு ஏது.? பள்ளம் ஏது.? தெரியாமல் வாகன ஓட்டிகள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

தொலைபேசி அழைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை கரண்ட் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

இதனால் தமிழகத்தின் தலைநகரம் ஸ்தம்பித்துள்ள நிலையில் நடிகர் விஷால் இந்த நிலவரம் குறித்து வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அவரின் வீடியோவில்.. கடந்த 2015 ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது அதைவிட தற்போது 2023 ஆண்டில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டோம் என சொன்னாலும் ஆனால் மேலும் பாதிப்புள்ளாகியுள்ளது.

இதை நான் ஒரு நடிகன் என்ற முறையில் சொல்லவில்லை.. நானும் அரசுக்கு ஓட்டு அளித்து இருக்கிறேன். ஒரு வாக்காளர் என்ற முறையில் பதிவிடுகிறேன்.

இதில் அரசியல் எதுவுமில்லை. சென்னை எம்எல்ஏக்கள் வெளியே வாருங்கள். மக்களுக்கான நிவாரண பணிகளை செய்து கொடுங்கள்.

இது ஒரு கேவலமான விஷயம்.. மக்களுடன் கலந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்” என வேதனையுடன் வீடியோ பதிவிட்டுள்ளார் நடிகர் விஷால்.

Vishal emotional video about 2023 Chennai flood conditions

மிக்ஜாம் புயல்.. சென்னையில் பெரு வெள்ளம்..; சூர்யா – கார்த்தி பண உதவி

மிக்ஜாம் புயல்.. சென்னையில் பெரு வெள்ளம்..; சூர்யா – கார்த்தி பண உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிசம்பர் 3 – 4 ஆம் தேதி சென்னை மக்களின் மனநிலை.. என்ன ஆகுமோ? ஏதாகுமோ.? என்பதுதான்.

மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது பலத்த காற்றும் பேய் மழையும் பெய்துக் கொண்டிருக்கையில் தற்போது வரை சென்னை பெருவெள்ளத்தில் மிதக்கிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது மக்கள் பட்ட அவஸ்தைகளை விட இந்த ஆண்டில் வெள்ளம் அதிகமாகி அவஸ்தையும் அதிகமாகியுள்ளது.

இந்த முறை 34 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நிவாரண பணிகளை தமிழக அரசு ஒரு பக்கம் மேற்கொண்டு இருந்தாலும் பல பகுதிகளில் கரண்ட் இல்லை என்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் பேரிடர் பணிகளுக்காக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ரூபாய் 10 லட்சத்தை கொடுத்து ரசிகர்களை நிவாரண பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி சூர்யா – கார்த்தி ரசிகர்கள் சென்னை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

Suriya Karthi donated rs 10 lakhs for 2023 Chennai floods

‘ரஜினிகாந்த் 170’ பட சூட்டிங்கில் நடிகைக்கு காயம்

‘ரஜினிகாந்த் 170’ பட சூட்டிங்கில் நடிகைக்கு காயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை ‘ஜெய் பீம்’ புகழ் ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ரஜினியுடன் இந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

அபிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை ரித்திகா சிங்குக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“இது பார்க்க ஓநாயுடன் சண்டைபோட்டது போல இருக்கிறது? கண்ணாடி இருக்கிறது. கவனமாக இருக்கும்படி என்னை எச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். பரவாயில்லை. இது நடக்கூடியது தான்.

சில நேரங்களில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது. அதனால் ஏற்பட்ட விபத்து இது. ஆனால் காயம் மிகவும் ஆழமாக இருப்பதால் வலிக்கிறது.

சிகிச்சைக்காக சூட்டிங் செட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்கிறேன். இது விரைவில் சரியாகவிடும் என நம்புகிறேன்”.

என பதிவிட்டுள்ளார் ரித்திகா சிங்.

Actress Ritika Singh met accident at Thalaivar 170 shooting spot

More Articles
Follows