‘மிக மிக அவசரம்’ படம் எந்த வலியை பேசியதோ அதை ஸ்டாலின் மாற்றியமைத்து விட்டார்.. – ‘லிப்ரா’ ரவீந்தர்

‘மிக மிக அவசரம்’ படம் எந்த வலியை பேசியதோ அதை ஸ்டாலின் மாற்றியமைத்து விட்டார்.. – ‘லிப்ரா’ ரவீந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

miga miga avasaramபெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கும்
உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கும்

கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ என்றொரு திரைப்படத்தை காண நேரிட்டது. தனியறை இருளில் படம் பல கேள்விகளையும் சங்கடங்களையும் மனதிற்குள் ஏற்படுத்திக் கொண்டே ஓடியது.

பெண் காவலர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான, மன ரீதியான சிக்கல்களை முகத்தில் அறைந்தாற்போல் பேசியிருந்தது படம். குறிப்பாக வி.ஐ.பி க்களின் காவல் பணியில் கால்கடுக்க நிற்கும் பெண் காவலர்களின் அவசரத் தேவைகளை உணர்த்தும் காட்சிகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.

சிறு முதலீட்டில் பெரும் வலியை சொன்ன அந்த படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் பலநாட்களாக நடந்து வருவதை அறிந்தோம். உடனே அப்படத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்று தீர்க்கமாக உறுதி பூண்டோம்.

அதன்படியே அடுத்த சில மாதங்களில், அக்டோபர் பதினொன்றாம் தேதி, அத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் எங்களின் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக விநியோகித்து வெளியிட்டோம்.

திரையரங்கில் படத்தை பார்த்தவர்களின் பாராட்டுக்கள் நெஞ்சம் நிறைத்தது என்றாலும் மிக மிக அவசரம் திரைப்படத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய கவனமும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

வணிக ரீதியான வெற்றி கிடைக்கவில்லை என்பதைத் தாண்டி, மிக மிக அவசியமான ஒரு திரைப்படம் மக்களை சென்று சேரவில்லையே என்பதுதான் எங்கள் குழுவின் மிகப்பெரும் வருத்தமாக இருந்து வந்தது.

இந்த நேரத்தில்தான் ஆக்சிஜன் போன்ற ஒரு அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து வந்திருக்கிறது.

“முதல்வர் உள்ளிட்ட வி.ஜ.பி க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்” என்கிற மாண்புமிகு முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து அது உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களின் உத்தரவால் நடைமுறைக்கும் வந்திருக்கிறது என்கிற செய்தி, இந்த படம் சார்ந்து மனதில் குடிகொண்டிருந்த அத்தனை ஆற்றாமைகளையும் ஒருசேர அடித்துச் சென்றுவிட்டது.

எந்த வலியை மிக மிக அவசரம் படம் பேசியதோ, அந்த வலியை ஏற்படுத்தும் சூழலையே மாற்றியமைத்திருக்கிறது முதல்வரின் இந்த உத்தரவு.

நாம் தினந்தினம் காணும் ஒரு காட்சியில் நாம் உணராத ஒரு வலியை சொல்லி, அதை மாற்றமுடியாதா என்று ஏங்கிய எங்களுக்கு இதைவிட பெருமகிழ்ச்சி வேறென்ன இருந்துவிட முடியும்?

இந்நேரத்தில் இப்படியொரு கதையை எழுதிய திரு. ஜெகன்நாத் அவர்களையும், திரைக்கதை எழுதி இயக்கிய இயக்குனர் சுரேஷ் காமாட்சி அவர்களையும் மனதார வாழ்த்துகிறேன்.

இப்படத்தை விநியோகித்ததற்கு லிப்ரா ப்ரொடக்ஷன் என்றென்றைக்கும் பெருமை கொள்ளும்.

ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நொடியில் இருந்து, சொல்லப்போனால் வெற்றிச் செய்தி வந்த நொடியில் இருந்தே, கொரோனாவிற்கெதிரான பெரும்போரில் முன்களத்தில் நின்று சமரிட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அவரது ஓயாத செயல்பாடுகளாலும், தொலைநோக்கு திட்டங்களாலும், அதிரடி அறிவிப்புகளாலும் மாற்றுக் கட்சியினரும் வாக்களிக்காதவர்களும் கூட வியந்து பாராட்டும் ஆட்சியை செயல்படுத்தி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த அறிவிப்பு அவர் தனது ஆட்சிக்காலத்தில் இனி சூடப்போகும் மகுடங்களின் உச்சியில் வைரமாய் ஜொலிக்கும். மிக மிக அவசரம் படக்குழுவின் சார்பாகவும், அனைத்து பெண் காவலர்களின் சார்பாகவும், லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகவும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கும் எண்ணற்ற நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூக அக்கறை மிகுந்த படைப்புகள் மீதும், செந்தமிழின் மீதும் தனி அக்கறை கொண்டிருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரது அடிச்சுவட்டில் பயணிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இந்த நேரத்தில் சில கோரிக்கைளையும் வைக்க விரும்புகிறேன்.

1. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு, சென்னையில் படப்பிடிப்புகளுக்கு குறைந்த கட்டணம் என கலைஞர் அவர்கள் கொண்டு வந்த முத்தான திட்டங்களை மீண்டும் தொடர வேண்டுகிறேன்.

2. கொரோனா காலத்தில் திரையரங்குகள் இயங்காததால், அவற்றின் மின்சாரத் தொகை மற்றும் சொத்துவரியை தள்ளுபடி செய்தோ அல்லது அவற்றில் சலுகை அளித்தோ திரையரங்க உரிமையாளர்களின் சுமையை குறைக்க வேண்டுகிறேன்.

3. அடுத்தடுத்த கட்ட தளர்வுகளின் போது திரையரங்குகளை திறந்து, லட்சக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டுகிறேன்.

4. கொரோனா பாதிப்புகள் மேலும் சரிவடையத் துவங்கியதும், கட்டுப்பாடுகளுடன் கூடிய படப்பிடிப்புகளை அனுமதித்து, திரையுலகத் தொழிலாளர்களை காப்பாற்றிட வேண்டுகிறேன்.

5. பெரும் படங்கள், ஓடிடி தளங்கள் என பல போட்டிகளுக்கு மத்தியில் திரைக்கு வர சிரமப்படும் மிக மிக அவசரம் போன்ற சமூக அக்கறை மிக்க திரைப்படங்களை வெளியிட, மாநிலமெங்கும் மினி திரையரங்குகளை அமைத்து, சிறு படங்களையும் படைப்பாளிகளையும் தயாரிப்பாளர்களையும் ஊக்கப்படுத்தவும், அதன்மூலம் நல்ல திரைப்படங்கள் தொடர்ந்து உருவாகவும் உதவிட வேண்டுகிறேன்.

வாக்குறுதியளித்த திட்டங்கள் மட்டுமல்லாத சொல்லாத திட்டங்களையும் அறிவித்து சிக்ஸர் அடிக்கும் உங்கள் ஆட்சியில், சோர்ந்து கிடக்கும் திரைப்பட உலகத்திற்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு புத்துணர்ச்சி பிறக்குமென்று மனதார நம்புகிறேன்.

நன்றி.

ரவீந்தர் சந்திரசேகர்
லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ்

Libra Productions Ravinder thanked TN cm MK Stalin

சிறுவாபுரியில் நடிகரும் கல்வியாளருமான ஐசரி கணேசன் சிறைப்பிடிப்பு

சிறுவாபுரியில் நடிகரும் கல்வியாளருமான ஐசரி கணேசன் சிறைப்பிடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ishari Ganeshதிருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பாலசுப்ரமணியர் கோயில் உள்ளது.

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள இந்த கோயிலில் நடிகரும் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேசன் தரிசனம் செய்துள்ளார்.

அவருக்கு ஊரடங்கு விதிமுறைகளை மீறி விஐபி தரிசனத்திற்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலறிந்த கிராம மக்கள் செயல் அலுவலர் நாராயணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

மேலும் ஐசரி கணேசனை சிறுவாபுரி கிராம மக்கள் சிறைப்பிடித்தனர்.

இதனையறிந்த அங்கு விரைந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக
கூறியதை அடுத்து ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்

Ishari Ganesh has been imprisoned by the public in siruvapuri

தேசிய விருது வென்ற நடிகர் ‘சஞ்சாரி’ விஜய் மரணம்.; ரசிகர்கள் அதிர்ச்சி

தேசிய விருது வென்ற நடிகர் ‘சஞ்சாரி’ விஜய் மரணம்.; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanchari vijayசஞ்சாரி என்கிற நாடகக் குழுவில் நடித்து வந்தவர் கன்னட நடிகர் விஜய்.

பின்னர் சினிமா சான்ஸ்கள் இவரை தேடி வர ‘சஞ்சாரி’ விஜய் என பிரபலமானார்.

‘ரங்கப்பா ஹோக்பிட்னா’ என்ற பட மூலம் 10 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தார்.

இதனையடுத்து ‘கில்லிங் வீரப்பா’, ‘வர்த்தமானா’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

2015ல் ‘நான் அவனல்ல அவளு’ என்ற படத்தில் திருநங்கையாக நடித்து இருந்தார்.

அந்த படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய விஜய்க்கு அவ்வருடம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது.

கடந்த வருடம் ஊரடங்கில் மக்களுக்கு பெரும் உதவிகள் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ஹெல்மேட் போடாமல் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது விளக்குக் கம்பம் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

எனவே பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் விஜய் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி விஜய் மூளைச்சாவு அடைந்தார்.

சஞ்சாரி விஜய்யின் மறைவுக்கு கன்னட திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kannada actor Sanchari Vijay passes away

தளபதி ரசிகையா ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி..? கடுப்பான தல ரசிகர்கள்.!

தளபதி ரசிகையா ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி..? கடுப்பான தல ரசிகர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivaangi‘குக் வித் கோமாளி’ என்ற டிவி நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷிவாங்கி்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தன் சொந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை சிவாங்கிக்கு வழங்கினார்.

இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் ஷிவாங்கி.

அப்போது தல தளபதி படங்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதில் விஜய் நடித்து வெளியான கடைசி படம் எது? என்ற கேள்விக்கு ’மாஸ்டர்’ என சரியாக பதில் சொன்னார் ஷிவாங்கி.

ஆனால் அஜித் படங்கள் பற்றிய கேள்விக்கு தவறாக பதிலளித்தார்.

தற்போது அஜித் நடித்து வரும் படத்தின் பெயரை கூட அவர் சரியாக சொல்லவில்லை.

இதனால் ஷிவாங்கியை திட்டி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

Ajith fans slams Coocku with comali fame Sivaangi

9ம் வகுப்பு மார்க் அடிப்படையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது

9ம் வகுப்பு மார்க் அடிப்படையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn 11th admissionஒரு வகுப்புக்கு தேர்ச்சி பெற்றால் அதற்கு முந்தைய வகுப்பின் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

10 வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஆனால் கடந்தாண்டு 10ம் வகுப்புத் தேர்வு நடத்தவில்லை என்பதால் 2019 – 2020 கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஒவ்வொரு பாடப் பிரிவிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் 15% மாணவர்களை கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள இந்தாண்டு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான சேர்க்கையை ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகளை (section) ஒதுக்கீடு செய்யவுள்ளனர்.

11th admission based on 9th class marks – TN GOVT

ஸ்பெஷல் விமானத்தில் பறக்க ரஜினிக்கு சிறப்பு அனுமதியளித்த மத்திய அரசு.?

ஸ்பெஷல் விமானத்தில் பறக்க ரஜினிக்கு சிறப்பு அனுமதியளித்த மத்திய அரசு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthநடிகர் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஓரிரு முறை தன் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வார்.

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் விமானம் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே அவர் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்.

இதனையடுத்து மத்திய அரசும் அவருக்கு அனுமதி அளித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி சிறப்பு (தனி) விமானத்தில் ரஜினி அமெரிக்கா செல்ல ஏற்பாடு நடக்கிறது.

இந்த தனி விமானத்தில், 12-14 பேர் வரை பயணம் செய்யலாம் என தெரிகிறது.

எனவே தன்னுடன் தன் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார் ரஜினி.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துவிட்டு அங்கேயே சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் தான் இருக்கிறார். அங்கேயே ஒரு ஹாலிவுட் படத்திலும் (தி கிரே மேன்) நடித்து முடித்துள்ளார் தனுஷ்

எனவே தனுஷ் குடும்பத்தாருடன் இணைந்து சில நாட்கள் அமெரிக்காவில் தங்கவிருக்கிறாராம் ‘அண்ணாத்த’ ரஜினி.

Rajnikanth to travel to the US for a medical check-up in a special flight

More Articles
Follows