தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா நிறுவனம் சார்பாக, நரேந்தரா தயாரித்துள்ள படம், ’கெளதமி புத்ர சாதர்கணி’.
தெலுங்கில் வெளியான இந்தப் படம், டப் செய்யப்பட்டு தமிழில் ரிலீஸ் ஆகிறது. பாலகிருஷ்ணா, ஹேமாமாலினி, ஸ்ரேயா, கபீர்பேடி, தணிகலபரணி உட்பட பலர் நடித்துள்ளனர்.
வசனத்துடன் தமிழாக்கப் பொறுப்பேற்றிருப்பவர் மருதபரணி. கிரிஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
,இப்பட பாடல்களை கார்த்தி வெளியிட, கே.எஸ்.ரவிகுமார் பெற்றார்.
விழாவில் பாலகிருஷ்ணா பேசும்போது,
‘தமிழ்நாட்டு தண்ணி குடிச்சி, சென்னையில் வளர்ந்தவன் நான். இது நம்மளை ஆண்ட ஒரு மன்னனின் கதையை கொண்ட படம்.
இந்த கதையை கேட்டவுடனே எங்கப்பா என்.டி.ஆர், பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி… இவங்களை நினைச்சுக்கிட்டேன்.
இவங்க இன்ஸ்பிரேசன் இல்லாம எந்த படங்களும் பண்ண முடியாது.
இதன்பின்னர் கே.எஸ் ரவிகுமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதன் சூட்டிங் கும்பகோணத்தில் 40 நாட்கள் நடக்கிறது’ என்றார்.
KS Ravikumar Karthi joins Gautami Putra Satakarni tamil audio launch