தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி, கமல், அஜித் ஆகியோருக்கு மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்.
இவர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து ஜெய் சிம்ஹா என்ற படத்தை இயக்கியுள்ளார்.
விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இதன் புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார் படம் குறித்து பேசினார்.
நான் இதுவரை 47 படங்களை இயக்கியுள்ளேன். விரைவில் 50வது படத்தை நெருங்கவுள்ளேன்.
என் கதை, படம், சூட்டிங் என எல்லாவற்றையும் பற்றி என் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நிறைய கேட்டு தெரிந்துக் கொள்வார்கள்.
ஆனால் இதுவரை இரண்டு நடிகர்கள் மட்டும் என்னிடம் எதையும் கேட்பதில்லை.
என் விஷயத்தில் அவர்கள் தலையிட்டதே இல்லை. ஒருவர் இந்த பட நாயகன் பாலகிருஷ்ணா, மற்றொருவர் அஜித்.” என்றார்.