‘ரகு தாத்தா’ மூலமாக தமிழில் நுழையும் ‘KGF – காந்தாரா’ பட நிறுவனம்

‘ரகு தாத்தா’ மூலமாக தமிழில் நுழையும் ‘KGF – காந்தாரா’ பட நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புரட்சி தொடங்கும் இடம் வீடு’. இக்கருத்தை மையமாக கொண்ட திரைப்படத்தின் முதல் பார்வையே பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது.

கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தின் முதல் பார்வை வெளியீடு, ‘ரகு தாத்தா’-

ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக்கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்திரம்.

இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, வெற்றியையும் விருதுகளையும் வாரி குவித்த ‘பேமிலி மேன்’ வலை தொடரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார்.

கோடை 2023-ல் திரையரங்குகளை சிரிப்பொலியாக்க, இம்மாதத்திலிருந்து விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தில் தேசிய விருது பெற்ற, தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகங்களில் புகழின் உச்சத்தில் திகழும் நாயகியான கீர்த்தி சுரேஷுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம்.

ஹோம்பாலே பிலிம்ஸ் இவ்வாண்டில் கே.ஜி.எஃப்-2, காந்தாரா வெற்றி படங்களை கொடுத்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக தனது அடுத்த படைப்பான ரகு தாத்தாவை அறிவித்துள்ளனர்.

இப்படமானது, நாயகியை மையமாக கொண்ட கதை களம் மட்டுமின்றி பலரின் உள்ளங்களை கொள்ளைக் கொள்ளும் நகைச்சுவை அம்சமும் கொண்டது. இத்திரைப்படத்தில் அமைதியுடன் கூர் மதி கொண்டு, கொள்கையில் உறுதியுடன், தேவையெனில் புயலாக மாறும் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் பார்வை வெளியீட்டில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது…

‘ரகு தாத்தா நகைச்சுவை பட மட்டுமின்றி, தைரியமிக்க, துணிச்சலான பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தில் தன் தனித்துவத்தை கண்டுக்கொள்ளும் களமானது, மற்றவர்களுக்கும் ஓர் உத்வேகமாக திகழும்.

நாயகி எதிர்கொள்ளும் சவால்கள் அவரின் அடையாளத்தை எவ்வாறு வெளிக்கொணர்கிறது என்பதை நகைச்சுவை கலந்து, குடும்பத்திலுள்ள அனைவரையும் ரசித்து சிரிக்க வைக்கும் படி இருக்கும்.

இக்கதாபாத்திரத்திற்கு உயிர் தர கீர்த்தியை போன்ற திறமைமிக்க ஓர் நடிகையால் தான் முடியும். அவருடன் இணைந்து பணிபுரிவதில் மட்டற்ற மகிழ்ச்சி’.

ஹோம்பாலே பிலிம்ஸ் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், இந்திய திரை ரசிகர்களுக்கு புது புது அனுபவங்களை கொடுக்கவும் ஒருபோதும் தயங்கியதில்லை. காந்தாராவின் வெற்றியானது நிரூபித்தது கே.ஜி.எஃப்-2 வைப்போல் நல்ல கதையம்சம் கொண்டு நேர்த்தியாக எடுக்கப் படும் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவிக்கும்.

ஹோம்பாலே பிலிம்ஸ் வருமாண்டில் மேலும் 4 பிரமாண்ட படைப்புகளை வெளியிட தயாராக உள்ளது. பிரபாஸுடன் ‘சலார்’, செப்டம்பர் 2023, பாஹத் பாஸிலுடன் ‘தூமம்’, ஸ்ரீமுரளியுடன் ‘பகிரா’ 2023 இறுதிக்குள். இதை தவிர்த்து, மேலும் ஒரு பான் இந்திய திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவிருக்கிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் வரவிருக்கும் இரு ஆண்டுகளில் 14 திரைப்படங்களை வெளியிட உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் கனவிலும் நினைக்க முடியாத திட்டமிது.

ஹோம்பாலே பிலிம்ஸின் வெற்றி ரகசியமான திறமை மிக்க குழுவும், தகுதியான நடிகர்களும் ரகு தாத்தாவிற்கும் கிடைத்துள்ளனர்.

M. S. பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவில், ராம்சரண்தேஜ் லாபானி கலை இயக்கத்தில், ‘ஜெய் பீம்’ புகழ் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில், தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி வடிவமைப்பில், T. S. சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகிறது ரகு தாத்தா.

இனி வடிவேலு என்கிட்ட வர மாட்டார்.. கமல் ஒரு தீர்க்கதரிசி.; வடிவேலு ஓபன் டாக்

இனி வடிவேலு என்கிட்ட வர மாட்டார்.. கமல் ஒரு தீர்க்கதரிசி.; வடிவேலு ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னன் மீம்ஸ்களின் தலைவன் என்று சொன்னால் அது வைகை புயல் வடிவேலு தான்.

சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு தற்போது மீண்டும் அதே பழைய வேகத்துடன் படங்களில் நடித்து வருகிறார்.

‘சந்திரமுகி 2’ படத்தில் காமெடியனாகவும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ டிசம்பர் 9ல் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பான பிரமோஷன் பணிகள் ஈடுபட்டு வருகிறார் வடிவேலு.

இந்த நிலையில் அவரது சமீபத்தில் பேட்டியில் கமல்ஹாசன் குறித்து பேசியுள்ளார்.

“கமல் சார் தான் என் வாழ்க்கையில் யுடர்ன் போட்டவரு.. எனக்கு புதிய பரிமாணத்தை காட்டியவர். அவர நான் சாகுற வரைக்கும் மறக்கமாட்டேன்.

தேவர்மகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பின்னர் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்க முடியாமல் போய்விட்டது.

அப்போதே கமல் சொல்லிவிட்டார் வடிவேலு இனி பிஸியாகி விடுவார். நான் அழைத்தாலும் வரமாட்டார் என சொன்னார்.

அவர் ஒரு தீர்க்கதரிசி அப்படியே நடந்துச்சு, அவருக்கு கடவுள் புடிக்காது ஆனா கடவுளுக்கு அவர புடிக்கும். அவர் ஒரு மகான்.. சினிமாவில் சிவாஜிக்கு பிறகு கமல் தான். எனக்கு இருவரின் ஆசியும் கிடைத்துவிட்டது” என தெரிவித்துள்ளார்

#KamalHaasan #Vadivelu

தீ தளபதி.. பேரை கேட்டா விசிலடி.. உங்க அதிபதி.; இணையத்தை பற்ற வைத்த விஜய் – சிம்பு

தீ தளபதி.. பேரை கேட்டா விசிலடி.. உங்க அதிபதி.; இணையத்தை பற்ற வைத்த விஜய் – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ராஷ்மிகா முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘வாரிசு’.

வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். அந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 4ம் தேதி இந்தப் படத்தில் இடம்பெற்ற 2வது பாடலான ‘தீ தளபதி…’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இப்பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி இருக்கிறார். விஜய் ரசிகர்களை கவரும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன.

தீ தளபதி.. பேரை கேட்டா விசிலடி.. உங்க அதிபதி… அனல் பறக்க ஒவ்வொரு வரியும் உள்ளன.. எனவே இந்த பாடல் ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை.

மேலும் விஜய் சினிமா துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆன நிலையில் #30YearsOfVijayism & #3DecadesOfVIJAYism என்பதையும் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

18 வயது கனவு இப்போ நிறைவேறிடுச்சு.; பூரிப்பில் 32 வயது நடிகை பிரியா

18 வயது கனவு இப்போ நிறைவேறிடுச்சு.; பூரிப்பில் 32 வயது நடிகை பிரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் அதிகமான படங்களை கைவசம் வைத்திருப்பவர் யார் என்று கேட்டால் அது பிரியா பவானி சங்கர் தான்.

இவரது நடிப்பில் ‘இந்தியன் 2’ ‘பொம்மை’, ‘அகிலன்’, ‘ருத்ரன்’, ‘பத்து தல’, ‘டிமான்ட்டி காலனி 2’ போன்ற படங்கள் வெளியாக உள்ளன.

இவரது இவர் தனது நீண்ட நாள் பாய்பிரண்டை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தனது காதலரை சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோவுடன் வெளிப்படுத்தியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

தன் இன்ஸ்டாகிராம் பதிவில்… “18 வயதில் ஒன்றாக கடற்கரைக்குச் சென்றோம்.

இப்போது சந்திரனைப் பார்த்துக்கொண்டு, இங்கே ஒரு வீடு வேண்டும் என்ற கனவில் நாங்கள் இதேபோல் மாலைப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம்.

தற்போது அந்தக் கனவின்படி, எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்” என அதில் பதிவிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தியை ஐஏஎஸ் படிக்க 40 லட்சம் அனுப்பிய வாலிபர் போலீசில் புகார்.?!

நடிகை கீர்த்தியை ஐஏஎஸ் படிக்க 40 லட்சம் அனுப்பிய வாலிபர் போலீசில் புகார்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் விஷால் தனுஷ் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும் இளம் வயதிலேயே தேசிய விருதையும் வென்றார்.

இந்த நிலையில் இவரது பெயரில் பேஸ்புக்கில் ஒரு பெண் மோசடி செய்துள்ளார். கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை தனது டிபி ஆக வைத்துள்ள அந்த பெண் வாலிபர் ஒருவரிடம் நைசாக பேசியுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த வாலிபரிடம் நைசாக பேசி உள்ளார். நாளடைவில் இவர்கள் நெருக்கமாக பேச பேச.. “தனக்கு நடிப்பு துறையில் ஆசை இல்லை தான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் அந்த பெண்.

மேலும் ஐஏஎஸ் படிக்க பணம் தேவைப்படுகிறது என தெரிவிதக்கு இதனை நம்பி அந்த வாலிபர் முதற்கட்டமாக 10 லட்சம் அனுப்பியுள்ளார்.

மேலும் இவர்களுக்கு நாளடைவில் நெருக்கமாகி தங்களது நிர்வாண புகைப்படங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் உங்களை பார்க்க வேண்டும் உங்களிடம் பேச வேண்டும் என அந்த வாலிபர் தெரிவிக்கவே அந்த பெண் சுதாரித்து கொண்டுள்ளார்.

அப்போது அந்த வாலிபர் அனுப்பிய நிர்வாண படங்களை வெளியே விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

இதனை சொல்ல வெளியே சொல்ல பயந்து அந்த வாலிபர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் கேட்ட பணத்தை எல்லாம் கொடுத்துள்ளார். மொத்தமாக ரூபாய் 40 லட்சம் வரை அந்த வாலிபர் கொடுத்து ஏமாந்துள்ளார்.

மேலும் அந்தப் பெண் பணம் கேட்டு மிரட்டவே வேறு வழியில்லாமல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

தற்போது அந்த மோசடி பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில் அந்த பெண்ணுக்கு உடந்தையாக இருந்த அவரது கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோடி கணக்கில் சம்பாதிக்கும் ஒரு நடிகை பணம் கேட்டுள்ளார்.. அதை உண்மை என அதை நம்பி ஒரு படித்த பட்டதாரி இன்ஜினியர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்க்காக சிம்பு பாடிய ‘தீ தளபதி..’ சாங்; டிரெண்டிங்கில் 3 Decades Of VIJAYism

விஜய்க்காக சிம்பு பாடிய ‘தீ தளபதி..’ சாங்; டிரெண்டிங்கில் 3 Decades Of VIJAYism

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ராஷ்மிகா முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘வாரிசு’.

வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். அந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் நாளை டிசம்பர் 4ம் தேதி இந்தப் படத்தில் இடம்பெற்ற 2வது பாடலான ‘தீ தளபதி…’ என்ற பாடல் வெளியாக உள்ளது.

இப்பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருக்கிறார்.

இந்த அறிவிப்பு வெளியானது முதலே விஜய் & சிம்பு ரசிகர்களும் இந்தப் பாடலை வரவேற்க தயாராக உள்ளனர்.

இப்பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் விஜய் சினிமா துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆன நிலையில் #30YearsOfVijayism & #3DecadesOfVIJAYism என்பதையும் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

#SilambarasanTR | #TheeThalapathy | #Varisu | #Vijay

More Articles
Follows