தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா, கருணாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “சங்கத்தலைவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட நடிகர் கருணாஸ் பேசுகையில்,
“இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்கள் கூடிய விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்.
மேலும் அவர் பேசுகையில்…
“யாரோ கொடுத்த குரல் என்னோட குரல்னு சொல்றாங்க. வாட்ஸ் ஆப்பில் வருவதெல்லாம் உண்மைன்னு நினைச்சிக்கிறாங்க.
சட்டமன்றத்துல என்னைவிட எல்லாரும் பயங்கரமாக நடிக்கிறாங்க. அதனால மறுபடியும் நடிக்கவே வந்துவிட்டேன்.
தேனப்பனும் நானும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் இரவில் ஒன்றாக இருப்போம், அதனை மெரினா கடற்கரை அறியும்“ என்று பேசினார் கருணாஸ்.