தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவை தவிர சமூகத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
கல்விக்காக அகரம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார் சூர்யா.
உழவன் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார் கார்த்தி.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்திருந்தார் கார்த்தி.
இந்த நிலையில் விவசாயத்தை மையப்படுத்தி புதிய கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு போட்டிகளை அறிவித்துள்ளார் கார்த்தி.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது…
“விவசாயிகளை பாராட்டும் பொருட்டு இந்த அமைப்பின் மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும். மேலும் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு போட்டிகளை அறிவித்துள்ளோம்.
நவீன வேளாண் கருவிகளை கண்டு பிடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று சிறந்த கருவிகளுக்கு மொத்தம் ரூ1.5 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்று கூறியுள்ளார் கார்த்தி.