தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கலக்க போவது யாரு? என்ற நிகழ்ச்சி மூலம் யார் இந்த பாலா..? என பலரையும் கேட்க வைத்தவர்.
இவரை பற்றிய சிறிய அறிமுகம்.
காரைக்கால் அருகில் உள்ள நெடுங்காடு என்ற கிராமம் தான் பாலா பிறந்த ஊர்.
மிமிக்ரி திறமையை கொண்டிருந்த இவரை தயாரிப்பாளர் அமுதவாணன் விஜய் டி.விக்கு அழைத்து வந்தார்.
கலக்க போவது யாரு? என்ற நிகழ்ச்சி இவரை தமிழகமெங்கும் கொண்டு சென்றது.
தற்போது இவரை ஜூங்கா படம் மூலம் சினிமாவுக்கு கொண்டு வந்துவிட்டார் விஜய் சேதுபதி.
இவரது அறிமுகம் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது…
பாலா திறமையானவர். தனக்கான காமெடி ஸ்கிரிப்டுகளை அவனே எழுதுகிறான்.
நல்ல காமெடி நடிகனாக வலம் வருவான். அவனை அறிமுகப்படுத்துவதில் எனக்கு பெருமையே.” என்றார்.
பாலா கூறியதாவது: எங்கள் காரைக்காலில் விஜய் சேதுபதி அண்ணாவுக்கு ரசிகர் மன்றம் வைத்து அதன் தலைவராக இருந்தேன். அவரது படத்தில் நான் சினிமாவில் அறிமுகமாவது பெருமை” என்றார்.
Karaikal Bala entering into Tamil Cinema by Vijay Sethupathis Junga