தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தோனி படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தை அடுத்து மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணருவதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார்.
இதற்கு மகாராஷ்டிரத்தில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இனி கங்கனா மும்பைக்கு வரக்கூடாது என்று சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் கோபமடைந்த கங்கனா ‘மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா, நான் வரக் கூடாது என்பதற்கு? நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிஞ்சா என்னை தடுத்துப் பாருங்கள்’ என சவால் விடுத்தார்.
இதனையடுத்து கங்கனாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்தனர்.
ஆனாலும் சிவசேனா அவருக்கு மிரட்டல் விடுத்து வந்த்து.
இது அரசியல் மற்றும் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையில்… சஞ்சய் ரௌத் இது தொடர்பாக கூறியதாவது: அந்தப் பெண் (கங்கனா) மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
ஏனெனில், மும்பையை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அவா் பேசியுள்ளாா். இது ஒட்டுமொத்த மகாராஷ்டிர மக்களையும் அவமதிக்கும் செயல். தனது பேச்சுக்காக அவா் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டால், அவரை மன்னிப்பது தொடா்பாக யோசித்து முடிவெடுப்போம். ஆமதாபாத் நகரை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசும் துணிவு அவருக்கு உண்டா என்று அவா் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பிரபலங்களுக்கு அவர்களின் தகுதிகளுக்கு ஏற்ப எக்ஸ், ஒய், இசட் பிரிவுகளில் காவல் பாதுகாப்பு வழங்கப்படும்.
கங்கனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் செப்டம்பர் 9 அன்று மும்பைக்கு வரும் கங்கனாவுக்கு 24 மணி நேரமும் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்கவுள்ளார்கள்.
மேலும் இமாசலப் பிரதேச அரசும் கங்கனாவுக்குத் தனியாகப் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. கங்கனா மும்பை செல்லும்போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என இமாசலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தனது ஆஃபிஸின் புகைப்படத்தைப் பதிவிட்ட கங்கனா, மாநகராட்சி நிர்வாகத்தினர் இடித்து விடுவார் என்று அச்சம் தெரிவித்திருந்தார். அதற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்… அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி கங்கனாவின் அலுவலகக் கட்டடத்தை மும்பை மாநகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டுள்ளது.
Kangana Ranaut granted Y-plus category security