தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
15க்கும் மேற்பட்ட மொழிகளில் 45000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் பல படங்களில் நடித்தும் இருக்கிறார். ஒரு சில படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.
மேலும் சென்னை 28, உன்னைச் சரணடைந்தேன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
இந்த நிலையில் இன்றோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்த மண்ணை விட்டு மறைந்து ஓராண்டு நிறைவடைகிறது.
இதனை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள் எஸ்.பி.பி பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
மலையாள நடிகர்கள் மம்மூட்டி மோகன்லால் உள்ளிட்டோரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் எஸ்பிபி பற்றி நினைவு கூர்ந்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில்.. ‘ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார்.
சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்’ என்று பதிவு செய்துள்ளார்.
Kamal Haasan remembers SPB on his death anniversary