நம் பேராசைதான் உணவை விஷமாக்கியது… உலகநாயகன் கமல்

நம் பேராசைதான் உணவை விஷமாக்கியது… உலகநாயகன் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maaruvoom Matruvom event photos (10)பாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து கின்னஸ் சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சியை ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அமைப்பு திண்டிவனம் அடுத்த ஆவணிபூர் கிராமத்தில் வரும் 26-ம் தேதி நடத்த உள்ளது.

‘நானும் ஒரு விவசாயி’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதற்கான மோஷன் போஸ்டர், இலச்சினை (லோகோ) வெளியிடப்பட்டது. அவற்றை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியதாவது:

நம் நாட்டில் சுமார் 70 சதவீத பாரம்பரிய நாட்டு விதைகள் அழிந்துவிட்டன. 30 சதவீத பாரம்பரிய விதைகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று கூறப்படுகிறது. மாற்று விதையால் உருவாகும் செடியில் பூச்சிகள் உட்காராமல் இருக்க வேரில் விஷம் பாய்ச்சுகிறோம்.

இதனால் மறைமுகமாக நாமும் விஷம்தான் உண்கிறோம். உண்மையில், உண்ணும் உணவு விஷமானதற்கு எதிரிகள் காரணமல்ல; நம் பேராசையும், உணவுப் பொருட்கள் வியாபாரமானதும்தான் காரணம். இந்த நிலை மாறவேண்டும்.

இயற்கை உரம் கொண்டு பாரம்பரிய நாட்டு விதைகளால் உருவான உணவுகளை உண்போம். எஞ்சியுள்ள 30 சதவீத பாரம்பரிய நாட்டு விதைகளைக் காக்க ஒவ்வொருவரும் விவசாயியாக மாறுவோம்.

அடிப்படையில் நானும் ஒரு விவசாயிதான். என் புதிய வீட்டின் மாடியில் இயற்கை உரங்கள் போட்டு, இயற்கை விதைகளைக் கொண்டு மாடித் தோட்டம் அமைக்கத் தொடங்கியுள்ளேன்.

உலக சாதனைக்காக மட்டுமல்ல; இயற்கை சார்ந்த உணவுக்காகவும் நாம் ஒன்றிணைய வேண்டும். இப்பணியில் ‘மாறுவோம் மாற்றுவோம்’ குழுவினரோடு என் நற்பணி மன்றத்தினரையும் ஈடுபடுத்த உள்ளேன்.

இவ்வாறு கமல் கூறினார். நடிகர் ஆரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Kamal and Actor Aari Promotes Heirloom Seeds

Maaruvoom Matruvom event photos (14)

தனுஷ்-சௌந்தர்யா ரஜினி கூட்டணிக்கு வெற்றியை தந்த திருவள்ளுவர்

தனுஷ்-சௌந்தர்யா ரஜினி கூட்டணிக்கு வெற்றியை தந்த திருவள்ளுவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vip2 Success meet photos (13)சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், விவேக், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த வேலையில்லா பட்டதாரி2 படம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இப்படம் மாபெரும் வெற்றி பெறவே, இப்படக்குழுவினர் மற்றும் இணைத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டோர் படக்குழுவினரை சந்தித்தனர்.

அப்போது தனுஷ் பேசியதாவது…

‘வேலையில்லா பட்டதாரி 2’ கதையை முழுமையாக முடித்து செளந்தர்யாவிடம் கொடுக்கும் போதே, இப்படத்தின் வெற்றி முதல் பாகம் அளவுக்கு அல்ல, ஆனால் நன்றாக இருக்கும் என்று முதல் நாளிலேயே கூறித்தான் பணிகளைத் தொடங்கினோம்.

முதல் பாகத்தோடு தான் அனைத்து விஷயங்களையும் ஒப்பிடுவார்கள் என்பது தெரியும். ரீமேக் படங்கள் செய்யும் போதும், ஒரிஜினல் படத்தில் நடித்தவர்களின் நடிப்புதான் சிறப்பாக இருந்ததாக கருதுவார்கள். இது இயல்புதான்.

இப்படத்துக்கு என ஒரு வெற்றியை வைத்திருந்தோம். ஆனால், அதைத் தாண்டி படம் வெற்றிடையந்ததில் சந்தோஷம். நல்ல விஷயங்கள் சொல்கிறோம், இப்படத்தின் மூலம் நேர்மறையான விஷயங்களை எடுத்துரைக்கிறோம் என நினைத்தேன்.

ஒரு சிலர் திறக்குறளுக்கு அர்த்தம் சொல்லியிருக்கலாமே என்றார்கள். அப்படி சொல்லியிருந்தால் யாருமே அதற்கான அர்த்தம் என்னவென்று பார்த்திருக்க மாட்டார்கள்.

வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களுமே திருக்குறளில் இருக்கிறது என மக்களுக்கு தெரிந்து, படித்துப் பார்க்க வேண்டும். எனது நண்பர்கள் பலர் இப்போது திறக்குறள் புத்தகம் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறேன்.

எனது திரையுலக வாழ்வில் முதன்மையான 3 வெற்றிப் படங்களில் இப்படமும் இருக்கப் போகிறது. அதற்கு முக்கியமான காரணம் நேர்மறையான விஷயங்களைச் சொன்னது மட்டுமே.

அன்பைப் பரப்பியதால் மட்டுமே மக்கள் குடும்பமாக வந்து படத்தைப் பார்க்கிறார்கள்.

இப்படத்தின் கதையைத் தாண்டி, முதுகெலும்பு என்றால் தாணு சார் வைத்திருந்த நம்பிக்கை மட்டுமே. ஒரு நடிகராக எனக்கொரு மார்க்கெட் இருக்கிறது.

அதைத் தாண்டி கதையின் மீது நம்பிக்கை வைத்து செலவு செய்தார் தாணு சார். இந்தளவுக்கு பிரம்மாண்டமான வெற்றி என்பது தாணு சார் இல்லாமல் நடந்திருக்குமா என்று தெரியவில்லை.

எப்போதும் அன்பு மட்டுமே இந்த உலகத்திற்கு தர வேண்டும். அது மட்டுமே நிரந்தரம். ஒருவரைப் பிடித்திருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், பிடிக்கவில்லை என்றால் எதுவுமே பேசாமல் இருக்கலாம்.

பிடிக்கவில்லை என்பதற்காக வெறுப்பை விரும்ப வேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக அன்பு செலுத்துங்கள், அது மட்டுமே இந்த உலகிற்கு அதிகம் தேவை. உலகம் நிறைய எதிர்மறையான விஷயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பெரிய பிரச்சினைகளைத் தாண்டி மற்றவர்களிடம் அன்பைச் செலுத்தினாலே, இயற்கை நம்மீது அன்பு செலுத்தும்.
‘வேலையில்லா பட்டதாரி 3’ கண்டிப்பாக வெளிவரும். எப்போது என்பது சரியாக தெரியவில்லை.

இரண்டாம் பாகத்துக்கு இருந்த பிரச்சினை, 3-ம் பாகத்துக்கு இருக்காது. அப்படத்தையும் நான் எழுதி முடித்தவுடன் தான் மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும்.”

இவ்வாறு தனுஷ் பேசினார்.

Thirukural Thiruvalluvar is reason behind success of VIP2

Vip2 Success meet photos (17)

தமிழ் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த இரண்டு பிரபலங்கள்

தமிழ் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த இரண்டு பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil bigg boss show

50 நாட்களுக்கு முன்பு கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதில் பங்கேற்ற நடிகை ஓவியா பிரபலமானார்.

ஆனால் இவர் தற்போது அதிலிருந்து வெளியேறிவிட்டார்.

இவரைப் போல ஜீலி, சக்திவாசு உள்ளிட்ட பலரும் வெளியேறிவிட்தால், அதன் சுவாரஸ்யம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை சுஜா வருணி நேற்றுமுதல் இந்த வீட்டில் நுழைந்துள்ளார்.

இவரையடுத்து நடிகர் ஹரிஷ்கல்யாண் இன்றுமுதல் இந்த வீட்டில் நுழைகிறார்.

இதனிடையில் மெட்ரோ சிரிஷ் கலந்துக் கொள்வார் என செய்திகள் வந்தன. ஆனால் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார் சிரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில போட்டியாளர்களையும் இந்த வீட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Suja varunee and Harish Kalyan entered in Tamil Bigg Boss house

suja varunee and harish kalyan in tamil bigg boss

ஹீரோவாகிறார் இசையமைப்பாளர் இமான்; இயக்குனர் இவரா?

ஹீரோவாகிறார் இசையமைப்பாளர் இமான்; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suseenthiranஇன்றைய மெலோடி பாடல்களுக்கு சொந்தக்காரர் இசையமைப்பாளர் இமான் என்று சொன்னால் அது மிகையல்ல.

கிட்டதட்ட 70 படங்களுக்கு மேல் இவர் இசையமைத்திருந்தாலும் முழுநேர நடிகராக ஆனதில்லை.

ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நமீதாவுடன் நடித்திருந்தார். ஒரு சில படங்களில் பாடியிருக்கிறார்.

இந்நிலையில் சுசீந்திரன் இயக்கவுள்ள ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம்.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Music composer D Imman going to act as Hero in Suseenthiran direction

மெர்சல் ஆடியோ விழாவை தொகுத்து வழங்கும் ரம்யா

மெர்சல் ஆடியோ விழாவை தொகுத்து வழங்கும் ரம்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ramya vjவருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதால் இதை 3 டிவி சேனல்களில் நேரடியாக ஒளிப்பரப்ப உள்ளனர்.

இந்நிலையில் இதனை தொகுத்து வழங்கவிருக்கிறாராம் விஜய் டிவி புகழ் ரம்யா.

இவருடன் மற்றொரு பிரபலமும் தொகுத்து வழங்கவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

ஆனால் அது யார்? என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

VJ Ramya will host Mersal audio launch event

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை; வேதா இல்லம் நினைவிடமாகும்… முதல்வர் அறிவிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை; வேதா இல்லம் நினைவிடமாகும்… முதல்வர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cm jayalalithaமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அவரது நினைவிடமாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது…

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும்.

மேலும் அவரது மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும்’என அறிவித்துள்ளார்.

இதனிடையில் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் அறிவித்து இருந்த்து குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

TN CM announced there will be Inquiry Commission for Jayalalitha death and Memorial for Vedha illam

sasikala ops and eps admk

TN CM statement

More Articles
Follows