காஜல் அகர்வால் அறிமுகப்படுத்தும் “அசுர காதல்” மியூஸிகல் வீடியோ !

காஜல் அகர்வால் அறிமுகப்படுத்தும் “அசுர காதல்” மியூஸிகல் வீடியோ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kajal AggarwalOne clan எனும் பெயரில் சிங்கப்பூரை சேர்ந்த பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் இணைந்து பெண்களுக்கெதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து பாடல் இசை வீடியோ ஒன்றை தாயாரித்துள்ளார்கள்.

JK சரவணா மற்றும் அவரது Tantra Studios இணைந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை செய்துள்ளார்கள். சமூகத்திற்கு தேவையான அழுத்தமான கருத்தை சொல்லும் இந்த வீடியோவிற்கு Wish a Smile Foundation மற்றும் #IKilledSucide Movement ஆதரவளித்துள்ளார்கள்.

எங்கள் கோரிக்கையை ஏற்று Wish a Smile Foundation உறுப்பினர் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் கோலிவுட் தேவதை காஜல் அகர்வால் தங்கள் Facebook மற்றும் Twitter தளங்களில் இந்த வீடியோ பாடலை இன்று 2020 மார்ச் 18 மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்கள்.

பெண் வன்முறைக்கெதிரான தமிழ் ஹிப் ஹாப் வீடியோ பாடல் உலக ரசிகர்களை கவரும்படி அமைந்துள்ளது.

இன்று வெளியாகும் இந்த அழகான பாடலை கண்டு ரசிக்க தயாரகுங்கள்

பாடல் – அசுர காதல்

வகை -தமிழ் ஹிப் ஹாப் rnb

சிறப்பு – பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்துங்கள்

பாடகர்கள் – திரு TK, தர்மேனிசம்

ராப்பர்ஸ் – பாஹா மிஸ்தா B, ஸ்பைஸ்

இசை – தியோ

பாடல் வீடியோ

இயக்கம் – திரு TK

ஒளிப்பதிவு – லெவின்

படத்தொகுப்பு – JK சரவணா, குட்டி குமார் மற்றும் சிதம்பரம் S

DI – JK சரவணா

விஷுவல் எஃபெக்ட்ஸ் – சுசீல் BG

நடிச்சு காட்டுங்க சார்; போலீஸ் டார்ச்சர் செய்வதாக கமல் கோர்ட்டில் புகார்

நடிச்சு காட்டுங்க சார்; போலீஸ் டார்ச்சர் செய்வதாக கமல் கோர்ட்டில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal moves High Court Alleging Harassment by Chennai Policeகடந்த பிப்ரவரி மாதம் 19ல் ‘இந்தியன்2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கமல் & லைகா தயாரிப்பில் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.

விபத்து தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ஏற்கெனவே இயக்குநர் ஷங்கர் & கமலிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது நீண்ட நேரம் கமல்ஹாசனை காக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

‘உயிரிழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இந்த விசாரணையை பார்க்கிறேன் என கமல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக ஐகோர்ட்டில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.

இதுகுறித்து நீதிபதி இளந்திரையன் முன்பு, ஆஜரான கமல் தரப்பு வழக்கறிஞர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வரும் நிலையில் விபத்து நடந்தது எப்படி என கமல்ஹாசனை நடித்துக் காட்டுமாறு காவல்துறையினர் துன்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதுகுறித்து மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இன்று மதியம் 2.15 மணிக்கு மேல் விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

அப்போது கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது..

 “அரசியல்வாதியாக இருப்பதால், துன்புறுத்தும் நோக்கத்தோடு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளேன். மார்ச் 3-ல் 3 மணிநேரம் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் அதே இடத்திற்குச் சென்று விளக்க இயலாது.

இது கொலை வழக்கு அல்ல. விபத்து வழக்குத்தான். சம்பவ இடத்தில் நடித்துக் காட்டச் சொல்கின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது… “விபத்து நடந்தபோது நடிகர் கமல்ஹாசன் சம்பவ இடத்தில் இருந்தார்.

அவர் விபத்தை நேரில் பார்த்த சாட்சி என்பதால் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

கமல் மட்டுமல்லாமல் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவைச் சேர்ந்த 23 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

படத்தின் நாயகன் என்பதற்காக புலன் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது.

சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வருவதால் சட்டம் ஒழுங்கில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக விபத்து நடந்த இடத்தில் நேரில் கமல் ஆஜராகத் தேவையில்லை. விசாரணைக்குத் தேவைப்பட்டால் அவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானால் போதும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Kamal moves High Court Alleging Harassment by Chennai Police

மாடலிங் ஷோ நடத்தி மாற்றுத் திறனாளிகளின் கல்விக்கு உதவிய நிறுவனங்கள்

மாடலிங் ஷோ நடத்தி மாற்றுத் திறனாளிகளின் கல்விக்கு உதவிய நிறுவனங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madarase Mr and Mrs India 2020 Season 3 Modelling ShowMadarase Entertainment மற்றும் Greenmedows Resorts நிறுவனம் இணைந்து Madarase Mr & Mrs India 2020 season 3 ஐ நடத்துகிறார்கள்.

மூன்றாவது சீசனாக தென்னிந்தியாவின் மிகப்பெரிய திறமையின் தேடலாக, புது திறமைகளை அடையாளப்படுத்தும் நிகழ்வாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி மாற்று திறனாளி குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர் கல்விக்காக நடத்தப்பட்டது.

Madarase Entertainment மற்றும் Greenmedows Resorts வழங்க Gframes நிறுவனம் JKP Fashion Studio இணைந்து இந்தப்போட்டியினை நடத்தியது.

ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் அவர்களது திறமையினை நிரூபிக்க வாய்ப்பாக நடத்தப்படும் இப்போட்டி 2020 மார்ச் 15,16 தேதிகளில் நடத்தப்பட்டது.

இதன் மூலம் வரும் வருவாய் மாற்றுத் திறனாளி குழந்தைகள் கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது. மூன்று வருடங்களாக தொடர்ந்து இந்நிகழ்ச்சியினை Madarase Entertainment நடத்தி வருகிறது.

Madarase Mr and Mrs India 2020 Season 3 Modelling Show

 

கொலைக்கார ‘கொரோனா’ குறித்து லொஸ்லியா சொன்ன அட்வைஸ்

கொலைக்கார ‘கொரோனா’ குறித்து லொஸ்லியா சொன்ன அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Losliyas awareness advice of Corona virus கமல் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படு பிரபலமானவர் லொஸ்லியா.

தற்போது நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் Friednship படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொலைக்கார கொரோனா வைரஸ் குறித்து தன் கருத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் “Please stay safe” என மாஸ்க் அணிந்திருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

Actress Losliyas awareness advice of Corona virus

முன்னழகை காட்டி நடுரோட்டில் முத்தம்..; அமலாபால் அடங்க மாட்டார் போலவே..!!

முன்னழகை காட்டி நடுரோட்டில் முத்தம்..; அமலாபால் அடங்க மாட்டார் போலவே..!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala Pauls recent kiss photo goes viral சிந்து சமவெளி படம் தொடங்கி கடந்த ஆண்டு வெளியான ஆடை படம் வரை வித்தியாசமாக நடித்து சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் நடிகை அமலாபால்.

இதனிடையில் மைனா, தலைவா, தெய்வ திருமகள், பசங்க 2 படங்களில் அருமையாக நடித்து கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல படம் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

அண்மையில் தன் தோழிக்கு கண்ட இடங்களில் தடவி முத்தமிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டார்.

கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை “ஹாட்”டாக்கும் அமலாபால்

மேலும் தன் பாய் ப்ரெண்டுடன் காற்று போக முடியாத படி கட்டியணைத்து ஒரு போட்டோவை வெளியிட்டார்.

இவை அனைத்துமே சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

இந்த நிலையில் அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டியபடி மும்பை நகர் வீதியில் நின்றபடி முத்தம் கொடுக்கிறார்.

அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

அந்த முத்தத்தை அமலா பால் யாருக்கு கொடுத்திருப்பார் என்பது தான் கேள்வி.?

Amala Pauls recent kiss photo goes viral


View this post on Instagram

Have A Good Time While There’s Still Time. #gypsylife #artoftheday #lifeinmumbai

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

அய்யப்பனும் கோஷியும் பட தமிழ் உரிமையை வாங்கிய 5 ஸ்டார் கதிரேசன்

அய்யப்பனும் கோஷியும் பட தமிழ் உரிமையை வாங்கிய 5 ஸ்டார் கதிரேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

5 Star Kathiresan acquires Ayappanum Koshiyum Tamil remake rightsநடிகர் ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு பெற்று பெரு வெற்றி அடைந்துள்ளது. வசூலிலும் விநியோகஸ்தர்களை பெரிய அளவில் திருப்தி படுத்தியிருக்கிறது இந்த திரைப்படம்.

மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியுள்ள இந்தப்படம் போன்று தமிழில் ஒரு படம் வெளியாகுமா என ரசிகர்கள் ஏங்கிய நிலையில், அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தும் ஒரு ஆச்சர்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் மிகச்சிறந்த படங்கள் தந்த, மிக முக்கிய தயாரிப்பாளராக விளங்கும் 5 ஸ்டார் கதிரேசன் “அய்யப்பனும் கோஷியும்” படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் கூறியதாவது…

மிகச்சாதாரண சினிமா ரசிகன் போலவே இந்தப்படம் பார்த்து நானும் பிரமித்து போனேன். அரிதிலும் அரிதாக, வெகு சில திரைப்படங்களே தொடக்கம் முதல் முடிவு அனைத்து அம்சங்களும் பொருந்தி வந்து நம்மை முழுதாக பரவசப்படுத்தும்.

படத்தின் திரைக்கதை, கதை சொல்லப்பட்டிருக்கும் பின்னணி களம், அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அனைத்தையும் தாண்டி கதையை தாங்கும், ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பிரமிப்பான நடிப்பு, இவையனைத்தும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றியது மகிழ்ச்சி என்றாலும் இப்போது மிகப்பெரும் பொறுப்புணர்வு உருவாகியிருக்கிறது.

இப்படத்தை அதன் சாரம் கெடாமல், தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு, மலையாளப் பதிப்பின் மதிப்பு கெட்டுவிடாமல், ரீமேக் செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

தமிழின் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இப்படத்தின் ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிக விரைவில் தமிழ் பதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

5 Star Kathiresan acquires Ayappanum Koshiyum Tamil remake rights

More Articles
Follows