தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் சர்ச்சையான இயக்குனர்களில் ஒருவர் வேலு பிரபாகரன்.
இவர் ‘நாளைய மனிதன்’, ‘அதிசய மனிதன்’, ‘ராஜாளி’, ‘கடவுள்’ போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கியிருக்கிறார்.
அதே சமயம், நடிகையின் டைரி என்ற பெயரில் கவர்ச்சியான படங்களையும் இயக்கியுள்ளார்.
தற்போது ‘கடவுள் 2’ பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார் வேலு பிரபாகரன்.
இப்படம் பற்றி அவர் கூறுகையில்…
‘‘சிவன், விஷ்ணு கடவுள்கள் பல்வேறு அவதாரங்கள் எடுத்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
புத்தர், ஏசு, நபிகள் நாயகம் இறைவன் அவதாரங்களாக பார்க்கப்படுகின்றனர்.
அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப எடுக்கப்பட்ட கடவுள் அவதாரங்கள் மூலமாக அன்பு, ஒழுக்கம் போன்ற வாழ்வின் நெறிமுறைகள் போதிக்கப்பட்டன.
தற்போதுள்ள காலகட்டத்தில் இறைவன் மீண்டும் ஒரு அவதாரம் எடுத்தால் என்ன அவதாரமாக இருப்பார் என்று தோன்றியது.
அது ஒரு திரைப்பட இயக்குனரின் அவதாரமாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதே இப்படத்தின் கதை கரு.
இதில் முக்கிய கேரக்டர்களில் சத்யராஜ், சீமான் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது.