தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெற்று மீண்டும் முதல் அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.
எனவே பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரபலங்கள் பலரும் முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இவர்களுடன் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் முதல்வருக்கு வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தார்.
எனவே, தனக்கு வாழ்த்து தெரிவித்த பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தினை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
இத்துடன் தனது பாணியில் சில வரிகளையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வரிகள் இதோ…
“கபால்-ன்னு ஒரு மகிழ்ச்சி தபால் கண்டதும் குழந்தை கடத்தல் தடுக்கப்பட்ட என்ற நற்செய்தியும் வரும் என்பது நம்பிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.