தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரூஸோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் துப்பறியும் திரில்லர் ஜானரிலான இணையத் தொடர் ‘சிட்டாடல்’.
இந்த இணையத் தொடரின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரத்யேக காட்சி மும்பையில் திரையிடப்பட்டது.
இதன் போது இந்த இணைய தொடரில் நடித்த நடிகர் ரிச்சர்ட் மேடன், நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோருடன் இந்திய திரைப்படத்துறை, தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்கு துறையின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மும்பையை தொடர்ந்து ரோம் மற்றும் லண்டன் போன்ற மாநகரங்களில் இதன் பிரத்யேக சிறப்பு திரையிடல் நடைபெறவிருக்கிறது.
இதன் போது நடைபெறும் சிவப்பு கம்பள வரவேற்பில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
‘சிட்டாடல்” தொடரின் பெயரிடப்படாத இந்திய பதிப்பில் நடித்து வரும் நடிகர் வருண் தவான், அதன் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி கே, கதாசிரியரும், எழுத்தாளருமான சீதா ஆர். மேனன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இவர்களுடன் நடிகைகள் ரேகா, அதிதி ராவ் ஹயாத்ரி, ரசிகா துஹல், சானியா மல்ஹோத்ரா, ஸ்வேதா திருபாதி ஆகியோரும் இந்த பிரத்யேக திரையிடலை பார்வையிட வருகை தந்திருந்தனர்.
பாலிவுட் படைப்பாளிகள் மதூர் பண்டார், கபீர் கான், சித்தார்த் ராய் கபூர், விக்ரமாதித்யா மோத்வானி, புஷ்கர்- காயத்ரி உள்ளிட்ட பல படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும் இந்த பிரத்தியேக திரையிடல் விழாவில் கலந்து கொண்டனர்.
‘வசீகரமான கதைக்களம்.. எதிர்பாராத அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள்.. வியப்பூட்டும் ரகசிய நடவடிக்கைகள்.. துப்பறிவதில் வித்தியாசம். விசுவாசம்.. என ஏராளமான பார்வையாளர்கள் விரும்பக்கூடிய விசயங்கள் நிரம்பியதாக சிட்டாடல் இணைய தொடர் இருக்கிறது’ என இந்தத் தொடரைப் பாராட்டினர்.
சிட்டாடல் இணைய தொடரில் ஆறு அத்தியாயங்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் முதலிரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28ஆம் தேதியன்று பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.
இதனைத் தொடர்ந்து வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என.. மே 26 ஆம் தேதி வரை வெளியாகவிருக்கிறது. இந்த தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டுசி, லெஸ்லி மான்விலே, ஆஷ்லே கம்மிங்ஸ் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
சிட்டாடல் பற்றி…
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்டாடல் எனும் உலகளாவிய சுதந்திரமான உளவு நிறுவனம் வீழ்த்தப்பட்டது. உலகில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நிலை நிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட இந்த உளவு நிறுவனம், நிழல் உலகிலிருந்து உலகை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த மாண்டி கோர் எனும் குழுவினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.
சிட்டாடலில் பணியாற்றிய உயர் அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் ( பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) ஆகிய இருவரின் நினைவுகள் அழிக்கப்பட்டதால், அவர்கள் உயிருடன் தப்பினர். அன்றிலிருந்து தலைமறைவு வாழ்க்கையை புதிய அடையாளங்களுடன் வாழத் தொடங்கினர்.
ஒரு நாள் இரவில் அவரது முன்னாள் நண்பரான பெர்னாட் வொர்லிக் ( ஸ்டான்லி டுசி), மாண்டிக்கோர் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக அவரது உதவியை கோருகிறார். மேசன் தனது முன்னாள் கூட்டாளியான நதியாவை தேடுகிறார். இரு உளவாளிகளும் இணைந்து உளவு பணியை மீண்டும் தொடங்குகின்றனர்.
Indias most admired celebrities attended Citadel screening