ஜிப்ரானுக்காக மீண்டும் இணைந்த கமல்-அனிருத் கூட்டணி

ஜிப்ரானுக்காக மீண்டும் இணைந்த கமல்-அனிருத் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indian 2 duo Kamalhaasan and Anirudh joins againகமல் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்திற்கு

இசையமைத்து வருகிறார் அனிருத்.

கமல் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறை.

அதே போல் இதுநாள் வரை ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் பணியாற்றி வந்த ஷங்கர் முதன்முறையாக அனிருத்துடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் கமலுடன் இணைந்துள்ளார் அனிருத்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலை கமலும் அனிருத்தும் இணைந்து பாடியுள்ளனர்.

இப்பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

Indian 2 duo Kamalhaasan and Anirudh joins again

ட்விட்டரை ஒழிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ஜெயலலிதா

ட்விட்டரை ஒழிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ஜெயலலிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indian Govt should demolish Twitter says Thalaivi Kangana Ranautபுரட்சித் தலைவி ஜெயலலிதா தான் இறந்துவிட்டாரே அவர் எப்போது ட்விட்டருக்கு எதிராக வேண்டுகோள் விடுத்தார்? என நீங்கள் யோசிக்கலாம்.

இது ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரனாவத் பற்றிய தகவல் தான்.

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக 3 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.

இவரின் சகோதரி ரங்கோலி தான் கங்கனாவின் ட்விட்டர் கவனித்து வருகிறாராம்.

சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களைப் பற்றி ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

அதற்கு பாலிவுட் பிரபலங்கள் கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனால் கங்கனா கணக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது .

இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் கங்கனா ரனாவத்.

அதில்… “மருத்துவரையும், காவல்துறையினரையும் தாக்கியவர்களைத் தான் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று தான் என் சகோதரி கருத்து தெரிவித்திருந்தார்.

எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றியும் அவர் பேசவில்லை.

பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களை டுவிட்டர் ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறது.

உண்மையான தீவிரவாதிகளை தீவிரவாதிகள் என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கிறது.

எனவே ட்விட்டர் போன்ற தளங்களை இந்தியாவில் இருந்து ஒழிக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக நம் இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் என தலைவி கங்கனா கூறியுள்ளார்.

Indian Govt should demolish Twitter says Thalaivi Kangana Ranaut

அம்மா உணவகத்திற்கும் லட்சங்களை அள்ளி கொடுத்த வள்ளல் லாரன்ஸ்

அம்மா உணவகத்திற்கும் லட்சங்களை அள்ளி கொடுத்த வள்ளல் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence donates Rs 50 lakhs to Amma Unavagamகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு சில இடங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், பேச்சுலர்ஸ் உள்ளிட்டவர்கள் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

உணவகங்கள் திறக்கலாம். ஆனால் பார்சல் மட்டுமே வழங்கப்படும் வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அம்மா உணவகங்களும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒரு சில அம்மா உணவகங்களில் இலவசமாகவே உணவுகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையின் கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களின் செயல்பாட்டிற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் சார்பில், தொகைக்கான காசோலையை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகர், நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் வழங்கினார். இதனை அடுத்து, மாநகராட்சி சார்பில் ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரன்ஸ் ஏற்கெனவே துப்புரவு தொழிலாளர்கள், நடிகர் சங்கம், பெப்சி சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம், பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றிற்கு ரூ. 4 கோடிக்கு மேல் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Raghava Lawrence donates Rs 50 lakhs to Amma Unavagam

கொரோனாவினால் இறந்தவர்களின் உடலை புதைக்க இடமளித்த விஜயகாந்த்

கொரோனாவினால் இறந்தவர்களின் உடலை புதைக்க இடமளித்த விஜயகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dmdk vijayakanthகொரோனா வைரஸ் காரணமாக நிறைய பேர் தினம் உயிரிழக்கின்றனர்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர்களும் இறக்கும் செய்தியை நாம் அறிந்து வருகிறோம்.

இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக இறந்த மருத்துவரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த இறந்தவர்களின் உடலை புதைக்க இடம் தர முன்வந்துள்ளார்.

தனது ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் நேரத்தில் நமக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்தவர்களுக்கு இப்படி நடப்பது குறித்தும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்வதால் பாதிப்பு ஏற்படாது என்பதை மக்களுக்கு அரசு புரிய வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

விஜயகாந்தின் இந்த செயல் தமிழக மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vijayakanth gave his land to bury corona died patients

Vijayakanth gave his land to bury corona died patients

குரங்கு மாடு நாய்களுக்கு உணவளித்த நடிகர் அபி சரவணன்

குரங்கு மாடு நாய்களுக்கு உணவளித்த நடிகர் அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan donates food to animals at Madurai இது மதுரைக்கு சித்திரை திருவிழா காலம் என்பதால் மதுரையும் அழகர்மலையும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து இருக்க வேண்டிய காலம்.

ஆனால் கொரோனாவினால் ஊரடங்கு போடப்பட்டதால் சித்திரை திருவிழா கொண்டாட்டம் இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த திருவிழா நிறுத்தம் மக்கள் மகிழ்ச்சியை மட்டும் பாதிக்கவில்லை. மதுரை அழகர்மலையிலும் அங்கு சுற்றி இருக்கும் வாயில்லா பிராணிகளையும் வாட்டி எடுத்து கொண்டு இருக்கிறது.

ஆம் .. மதுரை அழகர்மலை வாழ் வானரங்கள் பக்தர்களால் வழங்கப்படும் உணவு வகைகளை மட்டுமே உண்டு பழக்கப்பட்டவை.

கொரோனாவினால் கோயில் நடை அடைப்பு காரணமாக வானரங்கள் பசியால் வாடி வருவதாக அபி சரவணன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக நடிகர் அபி சரவணன் அவரது நண்பர்கள் பாலகுரு, ராஜ்குமார் ஏகே ரெட்டி மற்றும் ஜெகன் அவர்களுடன் இணைந்து பழங்கள் மற்றும் காய்கனிகளுடன் அழகர்மலைக்கு சென்று அங்கிருக்கும் வானரகங்கள், பசு மற்றும் நாய்களுக்கும் உணவளித்தனர்.

முன்னதாக ஊரடங்கு காரணமாக மதுரை காக்கை பாடினார் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வரும் இருநூறு ஆதரவற்றோர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்கள் வழங்கினர்.

இந்த ஊரடங்கு முடியும் வரை தன் நண்பர்கள் மூலம் இங்கு வாழும் வாயில்லா பிராணிளுக்கு உணவளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மக்களும் தங்களால் முடிந்த உணவினை தங்கள் பகுதியிலுள்ள வாயில்லா பிராணிகளுக்கு பாதுகாப்புடன் வழங்குங்கள் எனவும் அபிசரவணன் கேட்டு கொண்டார்.

Actor Abi Saravanan donates food to animals at Madurai

BREAKING கொரோனா கூட சாதி மதம் பார்க்காது.. ஆனால்…; அரக்கர்களை கண்டித்த கமல்

BREAKING கொரோனா கூட சாதி மதம் பார்க்காது.. ஆனால்…; அரக்கர்களை கண்டித்த கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal talks about Corona died patients and burial place issueஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் எண்ணற்ற பல உயிர்களை நாம் இழந்து வருகிறோம்.

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர்களும் இறக்கும் செய்தியை நாம் அறிந்து வருகிறோம்.

இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக இறந்த மருத்துவரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடலை தங்கள் வசிக்கும் பகுதிகளில் புதைப்பதால் அந்த வைரஸ் தங்களுக்கு தொற்றக்கூடும் என்ற அறியாமையால் இவ்வாறு போராடி வருகின்றனர்.

இதனையறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த இறந்தவர்களின் உடலை புதைக்க தனது ஆண்டாள் அழகர்
கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மக்களின் அறியாமையை கண்டித்து கமல் ட்வீட் செய்துள்ளார்.

கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ, நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்.
என கமல் பதிவிட்டுள்ளார்.

Kamal talks about Corona died patients and burial place issue

More Articles
Follows