பம்பர் படத்தை நான் தயாரிப்பதாக இருந்தேன்; வெற்றிக்கு தனி ரசிகர் கூட்டம் – முத்தையா

பம்பர் படத்தை நான் தயாரிப்பதாக இருந்தேன்; வெற்றிக்கு தனி ரசிகர் கூட்டம் – முத்தையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்’.

ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவினில் இயக்குநர் கே பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன், இயக்குநர் முத்தையா, இயக்குநர் கோபிநாத், அயோத்தி இயக்குநர் மந்திரமூர்த்தி, டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு, இயக்குநர் அனீஷ், இயக்குநர் ரஃபீக் முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இயக்குநர் முத்தையா பேசியதாவது…

இயக்குநர் செல்வம் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார், அனைவருடனும் சுலபமாக இணைந்து பணியாற்றுவார். செல்வத்திடம் ஒரு நல்ல கிராமத்துச் சாயல் உள்ளது , என்னிடம் வந்து கதையைச் சொன்னார், நான்தான் தயாரிப்பதாக இருந்தது.

நடிகர் வெற்றியிடம் கதை சொன்னதும் உடனே ஒத்துக்கொண்டு நடித்தார். அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் தியாகராஜா அவர்களுக்கு வாழ்த்துகள், இது போன்ற புது இயக்குநருக்கு வாய்ப்பு அளித்துள்ளார், படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது.

நாயகன் வெற்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் அவருக்கும் வாழ்த்துகள். படம் கண்டிப்பாக வெற்றியடையும், நன்றி.

இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது…

ஒரு இயக்குநர் வெற்றிப்படம் கொடுப்பதை மட்டும் வெற்றியாக நினைக்க மாட்டார்கள், தன் உதவியாளர்களும் படம் செய்வதை தான் வெற்றியாக பார்ப்பார்கள். அந்த வகையில் என் உதவியாளர் படம் செய்திருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். நடிகர் வெற்றியை தொடர்ந்து கவனித்து வருகிறேன், மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.

இயக்குநர் செல்வகுமார் என்னிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர், மிக நல்ல மனதுக்காரர். இந்தக்கதை பற்றி சொல்லியிருக்கிறார். நல்ல டீம் இதில் வேலை பார்த்துள்ளனர். அனைவருக்கும் என் வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் இயக்குநர் திருமலை பேசியதாவது…

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு வந்துள்ள அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் கொடுத்துள்ளனர், அதிலிருந்தே தெரிகிறது இந்தப்படம் அறத்தை பற்றி பேசும் என்று, இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும். தயாரிப்பாளர் தியாகராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், வெற்றி பெயரிலேயே வெற்றியை கொண்டவர். அதனால் இப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெறும் போதுதான் சினிமாத்துறை ஆரோக்கியமாக இருக்கும். இங்கு சில இளம் இயக்குநர்கள் வந்துள்ளனர், அவர்கள் இதற்கு சாட்சி. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களின் வரிசையில் பம்பர் படம் கண்டிப்பாக இடம் பெறும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை, அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

I missed chance to produce Bumper movie says Muthaiya

3 தலைமுறை பெண்கள் வாழ்வியலை சொல்லும் ‘ஸ்வீட் காரம் காஃபி’

3 தலைமுறை பெண்கள் வாழ்வியலை சொல்லும் ‘ஸ்வீட் காரம் காஃபி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் கீழ் ரேஷ்மா கட்டலா உருவாக்கிய வெப் சீரிஸ் ‘ஸ்வீட் காரம் காபி’.

இதை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர்.

மதுபாலா, லட்சுமி, சாந்தி ஆகியோர் நடித்துள்ள எட்டு எபிசோட்கள் கொண்ட தமிழ்த் தொடர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்களுடன் ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படுகிறது.

எட்டு எபிசோட்கள் கொண்ட இந்தத் தொடர், மூன்று பெண்களின் மறக்க முடியாத பயணத்தை அழகாக தொகுத்துள்ளது.

வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், வாழ்க்கையின் மீதான தங்கள் அன்பு, மேலும் தன்னம்பிக்கை மற்றும் சுய-கண்டுபிடிப்பின் இனிமையான மற்றும் நிறைவான வாசனையைக் கண்டறிகின்றனர்.

ரேஷ்மா கட்டாலாவின் உருவாக்கம் மற்றும் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்தது. இதயத்தைத் தூண்டும் தொடரை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர்.் மற்றும் லட்சுமி, மது, சாந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்வீட் காரம் காபி

Sweet Kaaram Coffee Three Women From Different Generations

சிவகார்த்திகேயன் – ஏஆர்.முருகதாஸ் கூட்டணியில் பான் இந்தியா நடிகை

சிவகார்த்திகேயன் – ஏஆர்.முருகதாஸ் கூட்டணியில் பான் இந்தியா நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் ஈவன்ட் ஜூலை 2ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படங்களை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன்.

இதில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க ஜீவி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படங்களை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ பட நாயகி மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மிருணாள் தாகூர்

Pan India Actress in Sivakarthikeyan – AR Murugadoss movie

தேவர் மகன் – சின்னக் கவுண்டர் ஜாதிப் படங்கள் பிரச்சினையில்லை.; ஆனால் இன்று..; பேரரசு ஆவேசம்

தேவர் மகன் – சின்னக் கவுண்டர் ஜாதிப் படங்கள் பிரச்சினையில்லை.; ஆனால் இன்று..; பேரரசு ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் பிரபலமான மாவட்டம் மற்றும் ஊர் பெயர்களை தன் படத்திற்கு வைத்தவர் இயக்குநர் பேரரசு.

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி என இவரது படங்களுங்கு பெயர்கள் வைக்கப்பட்டன.

சமீபகாலமாக இவர் படங்களை இயக்காமல் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு பரபரப்பான தலைப்புகளை பேசி வருகிறார்.

இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் மற்றும் தமிழகத்தில் ஊடுருவும் ஜாதி அரசியலைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

ஊரில்
நாடார் கடை
செட்டியார் மில்
ஐயர் ஹோட்டல்
என்று நாம் அழைத்தபோது
எந்த பிரச்சனையும் இல்லை!

வ.உ.சிதம்பரம்பிள்ளை
முத்துராமலிங்கத் தேவர்
உ.வே.சுவாமிநாத அய்யர்
ராமசாமி படையாச்சி
சரோஜினி நாயுடு
இப்படி வரலாறு படிக்கும்போது
நாட்டில்
எந்தப் பிரச்சினையும் இல்லை!

ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்பதைக்கூட
கோனார் தமிழ் உரையில்தானே
படித்தோம்
அப்பொழுது நமக்குள்
பேதங்கள் தோன்றவில்லை!

ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார்
வாகினி நாகிரெட்டி
தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவர்
சிவஶ்ரீ பிக்சர்ஸ் மணி அய்யர்
இப்படி தயாரிப்பாளர்களை
ஜாதியைச் சொல்லி அழைத்தபோது
திரைத்துறையில்
எந்தப் பிரச்சினையும் இல்லை!

குறத்தி மகன்
தேவர் மகன்
சின்னக் கவுண்டர்
அய்யர் தி கிரேட்
இப்படி ஜாதிப் பெயரில்
படங்கள் வந்தபோதும்
எந்தப் பிரச்சினையும் இல்லை!

இன்று
தொட்டதெற்கெல்லாம்
ஜாதிப் பிரச்சனை!
யார் காரணம்?

ஜாதி, மதம் மறந்து
கலைஞனாக மட்டுமே
தன்னை அர்ப்பணித்தவர்களுக்குள்
ஜாதி வெறியை வித்திட்டவர்கள்
யார்?

இன்று
உடன் பணிபுரிபவரின்
ஜாதியை எவனும்
ஆராய்வதில்லை!
மீண்டும் அந்த
ஆராய்ச்சியை
ஆரம்பித்து வைத்துவிடாதீர்கள்!

வாய்ப்பு கேட்பவனிடம்
எவன் ஜாதியை கேட்கிறானோ
அவனே மனிதப்பிழை!

பெரும்பாலும்
சமநிலை அமைந்துவிட்ட நிலையில்
மீண்டும் ஒற்றுமைக்கு
சமாதி கட்டிவிடாதீர்கள்!
தெளிந்த குளத்திற்குள்
பாறாங்கல்லை எறியாதீர்கள்
ஜாதிப்பற்று மனித இயல்பு
ஜாதி வெறி மனிதத்தின் அழிவு!

*பேரரசு*

Director Perarasu about Caste politics in TN

பர்வீன் கேரக்டரை செய்ய ரொம்ப பயந்தேன்..; அச்சத்தில் ஆயிரா

பர்வீன் கேரக்டரை செய்ய ரொம்ப பயந்தேன்..; அச்சத்தில் ஆயிரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VZ துரை இயக்கத்தில் சுந்தர் சி, ஆயிரா, தம்பி ராமையா, பாலக் லல்வாணி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 23ஆம் தேதி வெளியான படம் ‘தலைநகரம் 2’.

இன்று திங்கட்கிழமை ஜூன் 26 ஆம் தேதி இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஆயிரா பேசியதாவது…

இது ரொம்ப சந்தோஷமான தருணம். எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் V Z துரை சாருக்கு நன்றி. நான் இந்த பர்வீன் கதாப்பாத்திரத்தை செய்ய முடியுமா ? என பயந்தேன், ஆனால் துரை சார் ஊக்கம் தந்து செய்ய வைத்தார். சுந்தர் சி சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்தப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

இணை தயாரிப்பாளர் மதுராஜ் பேசியதாவது…

நண்பன் துரை உடன் இணைந்து, இந்தப்படத்திற்காக 2,3 வருடம் உழைத்துள்ளோம்.

பிரபாகரன், விவேகானந்தன் சார், ரவி அண்ணன் என எங்களுக்கு நல்லது நினைக்கும், நல்ல உள்ளங்கள் உடனிருந்தார்கள். இந்தப்படம் பல தடைகளைத் தாண்டித் தான் வந்தது.

ரிலீஸே ஆகாது எனப் பலர் சொன்னார்கள் ஆனால் இப்போது படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம். ஒரு படத்திற்குப் பின்னால் ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை இருக்கிறது அதை மனதில் வைத்து விமர்சனம் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை மதிக்கிறோம், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி.

Actress Ayira open talk about Thalainagaram 2 character

‘தலைநகரம் 2’ படத்திற்கு இவ்ளோ தியேட்டரா.? துரை சொல்லியும் நம்பமறுத்த சுந்தர் சி.

‘தலைநகரம் 2’ படத்திற்கு இவ்ளோ தியேட்டரா.? துரை சொல்லியும் நம்பமறுத்த சுந்தர் சி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்

இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது…

வழக்கமான இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம்.

நான் இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என துரையிடம் கேட்டேன் அவர் 350க்கும் அதிகம் என்று சொன்ன போது, பயந்துவிட்டேன்.

இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம்.

பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான் 300+ தியேட்டர் போடுகிறார்கள். அதனால் தான் பயந்தேன். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தலைநகரம் 2 திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. தலைநகரம் 2 ஒரு எமோஷனல் ஆக்சன் மூவி. ஒவ்வொரு ஆக்கனுக்குப் பின்னும் எமோஷன் இருக்கும்.

நான் நாலு பேரை அடிக்கிறேன் என்பதை நம்பும்படி எடுத்திருந்தார். தியேட்டரில் பார்த்து விட்டு நிறையப் பேர் என்னைப் பாராட்டினார்கள்.

இந்தப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் வெற்றிக்கு அவர்களே சாட்சி. இப்படத்தை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்.

Sundar C speech at Thalainagaram 2 thanks meet

More Articles
Follows