என்னை எப்படி செலக்ட் செஞ்சாங்கன்னே தெரியல..?; டென்ஷனில் டேனியல் பாலாஜி

என்னை எப்படி செலக்ட் செஞ்சாங்கன்னே தெரியல..?; டென்ஷனில் டேனியல் பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கத்தில் தான்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘BP180’.

இப்பட பூஜையில் நடிகை நைனி சாவி பேசியதாவது…

எனக்கு இந்தவாய்ப்பு தந்ததற்கு ஜேபி சார் மற்றும் படக்குழுவிற்கு நன்றி. படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

நடிகர் அருள்தாஸ் பேசியதாவது…

வெளி மாநிலத்திலிருந்து இங்குப் படம் தயாரிக்க வந்துள்ள, தாயரிப்பாளர் அதுல் அவர்களுக்கு வாழ்த்துகள், படத்தின் கதையைக் கேட்டேன், படம் ஆக்சன் படமாக இருக்கும், பாக்யராஜ் சார் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், படம் நன்றாக வரும் என நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

நடிகர் டேனியல் பாலாஜி பேசியதாவது…

என்னை எப்படி இந்தப் படத்திற்குத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை, இந்தக்கதை பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது என் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது, உங்களுக்குப் பிடிக்குமாறு படம் செய்வோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

I don’t know how they selected me for BP 180 says Daniel Balaji

BP கதையை JP சொல்ல சொல்ல அட்டகாசம்.; ஜிலிர்ப்பில் ஜிப்ரான்

BP கதையை JP சொல்ல சொல்ல அட்டகாசம்.; ஜிலிர்ப்பில் ஜிப்ரான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸமியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் “BP180”. இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் அதுல் M போஸமியா பேசியதாவது…

இது எங்கள் முதல் தயாரிப்பு, குஜராத்திலிருந்து இங்கு நம்பிக்கையுடன் வந்துள்ளோம். மிகச்சிறந்த திரைப்பட குழுவினர் இப்படத்தை உருவாக்கவுள்ளனர். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது…

அதுல் சார், ராட்சசன் பார்த்துவிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றார். இயக்குநர் ஜேபியை என்னிடம் அனுப்பினார் அவர் கதை சொல்லச் சொல்ல, மிக அட்டகாசமாக இருந்தது. இந்தக்கதைக்குப் பொருத்தமான டைட்டில் இது தான், படம் இப்போது தான் துவங்கியுள்ளோம், முடிந்தபிறகு இன்னும் நிறையப் பேசலாம் நன்றி.

Music composer Ghibran speech at BP 180 movie launch

பிற்படுத்தப்பட்ட பழங்குடியின ‘நாயாடி’-களின் வாழ்வை சொல்லும் படம்

பிற்படுத்தப்பட்ட பழங்குடியின ‘நாயாடி’-களின் வாழ்வை சொல்லும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தின் கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் திரில்லர் ‘நாயாடி’ ஜூன் 16 தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியாகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்தவருமான ஆதர்ஷ் மதிகாந்தம், ‘நாயாடி’ என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனமான நாயாடிகளின் (வேட்டைக்காரர்கள் என்று பொருள்) கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் திரில்லரான இதில் அஜித்துடன் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்த காதம்பரி நாயகியாக நடிக்கிறார். பிரபல யூடியூபரான ஃபேபி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இது குறித்து பேசிய ஆதர்ஷ் மதிகாந்தம்…

“திரைத் துறையில் பங்காற்ற வேண்டும் வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. எனவே, ஆஸ்திரேலியாவில் நான் ஈட்டிய பணத்தைக் கொண்டு ‘நாயாடி’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன்.

திகில் திரைப்படங்களுக்கு என உள்ள வடிவத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்தும் அவர்கள் வரலாறு குறித்தும் இப்படம் பேசும்.

பல்லாண்டுகளாக துயரங்களை அனுபவித்து வரும் நாயாடிகள், கடந்த காலத்தில் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பில்லி சூனியம் மற்றும் வூடு எனப்படும் மாந்திரீகங்களை கற்று அதை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும், அவர்களின் இக்கால தொடர்பு குறித்தும் இத்திரைப்படம்
விவரிக்கும்,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்..

“நாயாடி இனத்தை சேர்ந்த ஒருவர் ஐஏஎஸ் படித்து முடிப்பதற்குள் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டார் என்பதை பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் தனது ‘நூறு சிம்மாசனங்கள்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர்களது வரலாறு இதுவரை திரையில் சொல்லப்படவில்லை. ‘நாயாடி’ திரைப்படம் இதை பூர்த்தி செய்யும்,” என்றார்.

மாளவிகா மனோஜ், அர்விந்த்சாமி, நிவாஸ் எஸ் சரவணன் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

‘பரிதாபங்கள்’ குழுவினரின் திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் அருண் ‘நாயாடி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை மோசஸ் டேனியலும் படத்தொகுப்பை சி எம் இளங்கோவனும் செய்துள்ளனர். புரூஸ் லீ ராஜேஷ் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

ஆத்விக் விஷுவல் மீடியா, வாரியர் பிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஆஸ்திரேலியா மற்றும் ஆதர்ஷ் மதிகாந்தம் பிக்சர்ஸ் சார்பில் ஆதர்ஷ் மணிகாந்தம் தயாரித்து, இயக்கி மற்றும் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘நாயாடி’ திரைப்படத்தை வரும் ஜூன் 16
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியாகிறது.

Aadharsh Madhikaandham produces directs and plays protagonist in Naayaadi

‘வள்ளி மயில்’ ஸ்பாட்டில் ‘பிச்சைக்காரன் 2’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

‘வள்ளி மயில்’ ஸ்பாட்டில் ‘பிச்சைக்காரன் 2’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் திரைப்படம் “வள்ளி மயில்”.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல், கொடைக்கானல்,
சிறுமலை, பழநி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தென்தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி-யின் ‘பிச்சைக்காரன் 2’ வெற்றிக்குப் பிறகு இன்று, வள்ளி மயில் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்துக் கொண்டுள்ளார்.

படக்குழுவினர் அவரை உற்சாகமாக வரவேற்று ‘பிச்சைக்காரன் 2’ வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.

1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான டிராமா த்ரில்லராக ‘வள்ளி மயில்’ திரைப்படம் உருவாகிறது.

1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியைக் கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு 24 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது.

இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ஃபரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில்,தம்பிராமையா,GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு – வாஞ்சிநாதன் முருகேசன், எடிட்டர் – ஆண்டனி, கலை இயக்கம் – உதயகுமார், ஸ்டண்ட் – மாஸ்டர் ராஜசேகர், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM ) ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடியவுள்ள நிலையில், டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Valli Mayil team celebrated Pichaikkaran 2 Success

ஈசன் இயக்கத்தில் ‘ஈடாட்டம்’.: போதை அடிமைகளின் உளவியலை சொல்லும் படம்

ஈசன் இயக்கத்தில் ‘ஈடாட்டம்’.: போதை அடிமைகளின் உளவியலை சொல்லும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஈடாட்டம்’ (EDATTAM)

சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான நடிகர் ஸ்ரீகுமார் (Shreekumar) கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஈடாட்டம்’ (EDATTAM ) எனும் திரைப்படம்.

இதில் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களின் உளவியலை புதுமையான கோணத்தில் அணுகி இருப்பதாக பட குழுவினர் பிரத்தியேகமாக தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதை களத்திற்கும், புதுமையான கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே உண்டு என்பதை நன்கறிந்து தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஈடாட்டம்’.

இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஈசன் (ESAN ). இப்படத்திற்கான திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை மற்றும் வசனத்தை கஜபதி (GAJABATHI )எழுதி இருக்கிறார்.

இதில் ஸ்ரீகுமார், நடிகர் ராஜ சூர்யா (RAJA SURYA) நடிகைகள் வெண்பா (VENBA), அனு கிருஷ்ணா (ANU KRISHNA), தீக்ஷிகா (DHIKSHIKA), விஜய் விசித்திரன் (VISITHIRAN ), ‘காதல்’ சுகுமார் (KADHAL SUKUMAR ), பவர் ஸ்டார் (POWER STAR ), ‘பூவிலங்கு’ மோகன்(POOVILANKU MOHAN ), புலிக்குட்டி, விஜய் சத்யா, சாந்தி ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜேசன் வில்லியம்ஸ் (JASON WILLIAMS ) ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜான் பீட்டர் (JOHN PETER )இசையமைத்திருக்கிறார். ஜென் முத்துராஜ் (ZEN MUTHURAJ )படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை செந்தில் (SENTHIL ) மேற்கொண்டிருக்கிறார்.

புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஈசன் மூவிஸ் (ESAN MOVIES )எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்தி அருண் கேசவன் (SAKTHI ARUN KESAVAN )தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” கதையின் நாயகனான சரவணன், யாஷிகா என்ற பணக்கார பெண்மணியின் வீட்டில் கார் டிரைவராக குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகிறார்.

இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், பணத் தேவைக்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார். பிறகு பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கவும் தொடங்குகிறார்.

இந்த சூழலில் மூவர் கொலை செய்யப்படுகிறார்கள். அதிலிருந்து அவர் தப்பிக்கிறாரா என்பதே கதை.சுவராசியம் குறையாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது.

CAST : Sreekumar, Raja Surya, Dhikshika, Venba, Anu Krishna, power star, kadhal sukumar,Visithiran, Vijaisathya, Pulikutti, Poovilanku Mohan, Santhi Anandh

Story and direction -ESAN
Dialogue, Screenplay, and Direction supervisor : Gajabathi
Producer-Sakthi Arun Kesavan
Music : John Peter
Dop- Jason williams
Editing :Zen muthuraj
ART-Senthil
Lyricst- illaya kamban,John Peter
Stunt- Suresh harse Babu
Playback singer-Grace Karunas,Karthik,Swetha Mohan,VELS
Choreographer-Radhiga,Ramesh Kamal
PRO-SIVAKUMAR

ஈடாட்டம்

EDATTAM movie story line and updates

சிறையில் வாடிய 26 கைதிகளுக்கு தலா ரூ 25 லட்சம் வழங்கிய ‘லைகா’ சுபாஸ்கரன்

சிறையில் வாடிய 26 கைதிகளுக்கு தலா ரூ 25 லட்சம் வழங்கிய ‘லைகா’ சுபாஸ்கரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஒவொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய்கள் உதவித்தொகை வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார் லைக்கா குழும தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமாகிய சுபாஸ்கரன் .

லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா 25 லட்சம் ரூபாய்களை விடுதலை செய்யப்பட்ட 26 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கடந்த செவ்வாய்கிழமை (06.06.23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்துள்ளார்.

சுபாஸ்கரன்

இந்த நிகழ்வில் லைக்கா குழும உப தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது .

இலங்கை ஜனாதிபதியுடன் விசேட சந்திப்புகளை மேற்கொண்டு விடாமுயற்சியுடன் அழுத்தங்களை பிரயோகித்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அயராது பாடுபட்டு லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விடுதலைக்கு வழிவகை செய்துள்ளார்.

சுபாஸ்கரன்

பல்லாண்டுகாலமாக சிறையில் வாடிய கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் தலா 25 லட்சம் ரூபாய்களை தனது தாயார் திருமதி ஞானாம்பிகையின் பெயரில் இயங்கி வரும் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் மொத்தம் 6 1/2 கோடி ரூபாய்களை வழங்கியுள்ளார்.

சுபாஸ்கரன்

Lyca Subaskaran donated Rs 25 lakhs for 26 prisoner

More Articles
Follows