தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தல் சமயத்தின் போது சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டனர்.
மேலும் தபால் வாக்குகள் அளிக்கப்படாதது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தபால் வாக்கு பிரச்சினையால் ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சங்க தேர்தலுக்கு ரூ.30 லட்சம் செலவிடப்பட்டுள்ளதால் மறுதேர்தல் நடத்துவது என்பது சாத்தியம் இல்லை.
மேலும், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என விஷால் தரப்பு வாதிட்டது.
ஆனால் தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால் நியாயமான முறையில் மறுதேர்தல் நடத்த தயார் என ஏழுமலை தரப்பில் கூறப்பட்டது.
இருதரப்பினர் வாதத்தை கேட்ட நீதிபதி…
சட்ட போராட்டம் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் நடத்துவதா; வாக்கு எண்ணிக்கை நடத்துவதா நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர்தரப்பினர் செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
High courts asks vishal team for sangam election issue