தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலுக்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பலரும் இதுவரை கரை திரும்பவில்லை.
ஒரு சில மீனர்வர்கள் சில தீவுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சிலர் கடலில் அடித்து செல்லப்பட்டு சடங்களாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இன்னும் பல மீனவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே தெரியவில்லை என அந்த பகுதி மக்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதிக்கு நேரடியாக சென்றார் ஜிவி. பிரகாஷ் என்பதை பார்த்தோம்.
தற்போது அவர் ட்விட்டரில் மீனவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது..
நம் தமிழ் மீனவர்களுக்கு GPS, Radar, Satellite phone போன்ற கருவிகள் மானியத்திலும் தவனை முறையிலும் அரசு வழங்க வேண்டும். இதை பொருத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசிடம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன். இதில் அனைத்து மீனவ கூட்டமைப்புகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.