கஜா தாக்கிய டெல்டா பகுதிக்கு ஜிவி.பிரகாஷின் நிவாரண பொருட்கள்

கஜா தாக்கிய டெல்டா பகுதிக்கு ஜிவி.பிரகாஷின் நிவாரண பொருட்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashநாகை, வேதாரண்யம் மற்றும் டெல்டா பகுதி மக்களுக்காக கஜா புயல் நிவாரண உதவிகளை 2-லாரிகளில் அனுப்பி வைத்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில்படத்தின் டப்பிங் பணிகளில் இருந்த ஜி.வி.பிரகாஷ் டப்பிங்கை தற்காலிகமாக நிறுத்தி விட்டு இப்படி ஒரு அதிரடி பணியில் ஈடுபட்டதை சோசியல் மீடியாக்களும், பொது மக்களும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இது பற்றி ஜி.வி.பிரகாஷ் பேசும் போது……

கஜா புயல் ஈவு இரக்கமற்ற பேரிடர் மற்றும் பேரழிவு . மக்கள் மீது தொடுக்கப்பட்ட இயற்க்கை சீற்றம் மனதுக்கு வேதனையை தந்தது. தென்னை மரங்கள், மா மரங்கள். வீடுகள், கால்நடைகளை இழந்து நிற்கும் அந்த விவசாயிகளை நினைக்கும் போதும், படகுகளை இழந்து நிற்கும் மீனவர்களை நினைக்கும் போதும் நிலை குலைந்து போனேன்.

அவர்களுக்கு தேவை அனுதாபமோ,ஆறுதலோ அல்ல. முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவோம்.

பேரிடரில் சிக்கி தவிக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அன்பை விதைத்து மனித நேயம் காப்போம் என ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

ஒக்கி புயலின் போதும் ஜி.வி.பிரகாஷ் களத்தில் இறங்கி சேவை செய்ததை குமரிமக்கள் பெரிதும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இணையும் படத்தை தொடங்கிய ராஜமௌலி

ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இணையும் படத்தை தொடங்கிய ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RRR shootபாகுபலி படத்திற்கு முன்பே ராஜமௌலி படங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு நாம் அறிந்த ஒன்றுதான்.

அதுவும் உலகையை கலக்கிய ‘பாகுபலி 1 மற்றும் 2’ பாகங்கள் வந்த பின்னர் இந்த எதிர்பார்ப்பு இரட்டிப்பாகி விட்டது.

அந்த படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று திங்கள் (நவ., 19) முதல் ஆரம்பமாகியுள்ளது.

ஹைதராபாத் அருகில் உள்ள கொக்க பேட் என்ற இடத்தில் இதன் சூட்டிங்கை தொடங்கியுள்ளனர்.

படத்தின் ஹீரோக்கள் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் மோதும் சண்டைக் காட்சிகள் இன்று படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

முதன் முதலாக ராஜமௌலி இயக்கிய ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ படத்தின் நாயகன் ஜுனியர் என்டிஆர் நடித்திருந்தார்.

அதன் பின் ‘சிம்ஹாத்ரி, யமதொங்கா’ ஆகிய படங்களிளிலும் அவரை இயக்கினார்.

‘மகதீரா’ படத்தில் ராம் சரணை இயக்கினார்

தற்போது இவர்கள் மூவரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலி படங்களுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு இருப்பதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகிறது.

இப்படத்தின் ஹீரோயின்கள் விவரம் இதுவரை தெரியவில்லை.

ஜான்வி கபூர், ஆலியா பட் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிக்க வாய்ப்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

கஜா பாதிப்புக்கு ரூ. 50 லட்சத்தை அள்ளிக் கொடுத்த சிவகுமார் குடும்பம்

கஜா பாதிப்புக்கு ரூ. 50 லட்சத்தை அள்ளிக் கொடுத்த சிவகுமார் குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sivakumarகடந்த சில தினங்களுக்கு முன்னர் கஜா புயல் தமிழக மாவட்டங்களை தாக்கியது.

இதில் புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால் மாவட்டமும் பாதிப்புக்குள்ளாகியது.

மேலும் நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களும் கடும் சேதத்தை சந்தித்து உள்ளன.

இவற்றை மீட்டெடுக்க தமிழக அரசு நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. இருந்தபோதிலும் அரசு பொறுமையாக செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

நான்கு நாட்களாகியும் அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது.

குடிக்க தண்ணீர் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகுமார் குடும்பத்தை சேர்ந்த நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ. 50 லட்சத்தை நிதியாக அளித்துள்ளனர்.

இது குறித்து சூர்யாவின் படத்தயாரிப்பு நிறுவனமான 2டி என்டெர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியுள்ளதால் வாழ்வாதாரங்களாக விளங்கிய மரங்கள் பேரழிவுக்கு ஆளாகியுருக்கின்றன.

புயல் மற்றும் கனமழை காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர்.

இது தொடர்பாக வரும் புகைப்படங்கள் யாவுமே நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.

“தமிழ்நாட்டின் மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவை வழங்குவது காவிரிப் படுகை” என்று நெல் ஜெயராமன் தெரிவித்திருப்பது நூறு சதவீதம் உண்மை. அந்தப் பகுதிகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் வழங்கியுள்ளனர். திரு.சிவகுமார், திரு.சூர்யா, திரு.கார்த்தி, திருமதி.ஜோதிகா ஆகியோர் இணைந்து மொத்தமாக 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக கொடுத்திருக்கிறார்கள்.

இதனை அப்பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் என்ன உதவிகள் தேவை என்பதை தெரிந்து செய்யவுள்ளார்கள்.

நமீதாவின் *அகம்பாவம்*.; கொடூர அரசியல்வாதியாக வாராகி

நமீதாவின் *அகம்பாவம்*.; கொடூர அரசியல்வாதியாக வாராகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

agam pavamஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் ‘அகம்பாவம்’.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார்.

திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்தார் நமீதா. பல கதைகள் கேட்டும் மீண்டும் நடிக்கும்போது வலிமையான கதையில் நடிக்க வேண்டும் எனக் காத்திருந்தவருக்கு ஸ்ரீமகேஷ் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஓகே சொன்னவர் அதற்காக 10 கிலோவுக்கு மேலும் உடல் எடையைக் குறைத்துள்ளார்.

அவருடன் கொடூரமான வில்லனாக மிரட்ட இருக்கிறார் வாராகி. தான் தயாரிக்கும் படத்தில் பலர் கதாநாயகனாகவே விரும்புவர்.

ஆனால் வாராகி கதையின் முக்கியத்துவத்தை தூக்கி நமீதாவின் தோளில் வைத்துவிட்டு அதின் பிரம்மாதமான கதாபாத்திரமான வில்லன் ரோலை ஏற்றுள்ளார்.

இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் கஷ்யப்பை கழித்துவிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி அகம்பாவத்தில் வாராகி ஏற்றிருக்கும் வில்லன் பாத்திரமும் இருக்கும்.

இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு ஜெகதீஷ் வி.விஸ்வம்,

ஸ்டண்ட் ; இந்தியன் பாஸ்கர்,

நடனம் ; ராபர்ட்,

படத்தொகுப்பு ; சின்னு சதீஷ்

கதை மற்றும் தயாரிப்பு ; வாராகி,

இணை தயாரிப்பு சுஜிதா செல்வராஜ்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சத்ரபதி ஸ்ரீமகேஷ்.

இவர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கியவர்.

வாராகி தன் நிஜ வாழ்க்கையில் சந்தித்த கொடூரமான நிகழ்வுகளை கதையாக்கியிருக்கிறார். அதற்கு தனது வலிமையான வசனங்கள், திரைக்கதை யுக்தியின் மூலம் உயிர் கொடுத்துள்ளார் ஸ்ரீமகேஷ்.

பரபரப்பான சமூக போராட்டம் கொண்ட விதையாக உருவாக இருக்கிறது அகம்பாவம்.

பெண் போராளிக்கும் ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த அகம்பாவம் படத்தின் கதை.

இதற்கு மத்தியில் அழகான ஒரு காதலும் இருக்கிறது.

இதில் நமீதா கதையின் நாயகியாக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க உள்ளார்.

தயாரிப்பாளரும் நடிகருமான வாராகி மிகக் கொடூரமான அரசியல்வாதியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்க இருக்கிறது.

துவக்க நாளன்றே படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ்.

இந்த க்ளைமாக்ஸ் காட்சி தொடர்ந்து நான்கு நாட்கள் படமாக்கப்படுகிறது.

காரணம் நீண்ட நாட்கள் கழித்து, தமிழ்சினிமாவில் நீதிமன்றம் ஒன்றில் ஒரு பெண் ஒருவரின் துணிச்சலான வாதம், இருபது நிமிட க்ளைமாக்ஸ் காட்சியாக இந்தப் படத்தில் இடம்பெறுகிறது.

இந்த க்ளைமாக்ஸ் காட்சி முழுதும் நமீதாவின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவரும் என அடித்து சொல்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ்.

இந்த காட்சி முழுக்க முழுக்க வசனங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நமீதா இதன் வசனங்களை ஒரு வாரம் முன்பே எழுதி வைத்துக்கொண்டு பயிற்சி எடுத்துக்கொண்டு நடிக்கத் தயாராகியிருக்கிறாராம்.

இப்படி ஒரு கதாபாத்திரத்திற்காகத்தான் நான் காத்திருந்தேன் என உற்சாகமான நமீதா இதற்கான ஒத்திகையிலும் கலந்துகொண்டு பக்காவாக தயாராகியுள்ளாராம்…

“இதுவரை நமீதா நடித்துள்ள 60 படங்களில் அவரிடம் நாம் பார்த்திராத புதுவிதமான நடிப்பை இதில் நாம் பார்க்கலாம். அந்த அளவுக்கு நடை, உடை, ஒப்பனை, ஹேர்ஸ்டைல் என எல்லாவற்றிலும் புதிய நமீதாவை நீங்கள் பார்க்கலாம்.

அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் ஆக்சனிலும் அசத்த இருக்கிறார்.

இந்தப்படம் நமீதாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஒரு வெற்றிகரமான ரீ என்ட்ரியாக இருக்கும்” என்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ் நம்பிக்கையுடன்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பண்ருட்டி, தேனி, கல்வராயன் மலை, சேலம் ஆகிய பகுதிகளில் சுமார் 40 நாட்களுக்கு மேல் நடைபெற இருக்கிறது.

அனிதாவை பலி வாங்கிய நீட் தேர்வு தேவையில்லை..: ஜிவி. பிரகாஷ்

அனிதாவை பலி வாங்கிய நீட் தேர்வு தேவையில்லை..: ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash and Thirumurugan Gandhi praises Aneethi short filmநீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது.

இதில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்து இருக்கிறது இப்படம். ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கும் இப்படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கதிர், சமூகப்போராளி திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படத்தைப்பார்த்த பின் பேசிய இயக்குநர் பாலாஜி சக்திவேல்…

“இன்றைக்கு ஒரு பொறுப்பான தலைமுறையை பார்க்க முடிகிறது. இந்தப்படத்தைப் பற்றி இதன் இயக்குநர் என்னிடம் சொல்லும் போது படத்தை பார்க்க ஆவல் கொண்டேன். படத்தின் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜி.வி.பிரகாஷ், இளன், கதிர் போன்ற இளம் படைப்பாளிகள் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதுபோல் இக்குறும்படத்தின் இயக்குநர் பேசும்போது சொன்னார், நான் திருமுருகன் காந்தி அவர்களைப் பார்த்து தான் புத்தகங்கள் வாசிக்க கற்றுக்கொள்கிறேன். என்று. அது பெரிய சந்தோஷம். எனக்கும் திருமுருகன் காந்தி தான் பெரிய இன்ஷ்பிரேஷன்’ என்றார்.

நடிகர் கதிர் பேசும்போது…

“இந்தப்படத்தின் வெற்றியை நான் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக பார்க்கிறேன். இந்த கான்செப்டை கையில் எடுத்தபோதே இயக்குநர் ஸ்ரீராம் வெற்றி பெற்று விட்டார். இந்தவிழாவிற்கு வந்ததிற்கு நான் மிகவும் பெருமைப்படுறேன். திருமுருகன் காந்தி சார் பக்கத்தில் இருப்பதை பாக்கியமாக நினைக்கிறேன்.

அவர் பேசும் காணொளிகள் தான் இன்றைய இளைஞர்களுக்கு பல உண்மைகளை விளக்குகிறது. திருமுருகன் காந்தி போன்றவர்கள் தொடர்ந்து இதுபோல செயலாற்றுவது அவசியம். இந்த குறும்படம் நிச்சயம் பல விவாதங்களை முன்னெடுக்கும்” என்றார்

ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, அநீதி குறும்படம் ரொம்ப முக்கியமான படம். இந்தப்படத்தைப் பாதிக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் முடிவை பாசிட்டிவாக அமைத்தது சந்தோஷமாக இருந்தது.

நீட் என்பதை யார் கொண்டு வந்தார்களோ அவர்களே அதை வைத்துக்கொள்ளட்டும் தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை. நான் அனிதாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்.

அதனால் அந்த வலி எனக்கு அதிகமாக இருக்கிறது. அந்த கலக்கம் இன்னும் என்னை விட்டு போகவில்லை. இந்தப்படத்தின் கதையோட்டம் எப்படி இருந்தாலும் படத்தின் முடிவு மிக முக்கியமானது’ என்றார்.

திருமுருகன் காந்தி பேசுகையில், “இங்கு இருக்கும் அனைவரையுமே தோழர்களாக தான் பார்க்கிறேன். இந்தக்குறும்படம் விருதுகள் வாங்கியதற்காக நான் வரவில்லை.

இந்தப்படத்தின் கதை தாங்கி நின்ற துயரம் நம் அனைவருக்கும் தெரியும். இந்தப்படத்தில் வந்த ஒருகாட்சி, “காவி உடை அணிந்த ஒருவர் பஸ்ஸில் போகும்போது எச்சில் துப்புகிறார். அந்த எச்சில் தமிழன்டா என்ற பனியன் போட்டிருந்த பையன் மீது விழுகிறது.

இந்த ஒரு காட்சியே உண்மையை உணர்த்தி விட்டது. அனிதாவின் மரணத்தின் போது நான் சிறையில் இருந்தேன். சிறையிலே ஒரு கொந்தளிப்பான மனநிலையில் இருந்தேன்.

சிறையில் பல்வேறு குற்றங்களுக்காக கைதாகி இருந்த கைதிகள் ஒன்றுகூடி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தோம். சிறையில் இருந்தவர்களையே அந்த அளவுக்கு பாதிக்க செய்த சம்பவம் அது.

ஒரு தேசத்தில் அறம் இல்லாவிட்டால் அந்தத் தேசத்தின் மொழியில் உயிர் இருக்காது என்று ஒரு இலங்கை கவிஞர் சொன்னார். படைப்புலகம் இதுபோன்ற கொலைகளை பதிவு செய்யும் போதுதான் அது பரவலாகப் போய்ச்சேரும். எனக்கு ஒரு வருத்தம் உண்டு. 9 ஆண்டுகள் கடந்துவிட்டது

ஈழத்தில் படுகொலைகள் நடந்து. இதுவரை அதைப்பற்றி ஒரு படைப்புகூட வரவில்லை என்ற வருத்தம் உண்டு. இந்தக் குறும்படத்தை கொங்கு மண்டலத்தில் எடுத்திருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் ஒரு அம்பேத்கர் சிலையை கூட பார்க்க முடியவில்லை.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே மனுதர்மத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் கொஞ்சம் படித்தாலே நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். ஊரும் சேரியும் இருக்கும் வரை இந்தச்சமூகம் முன்னேறும் தகுதியற்றது” என்றார்.

இயக்குனர் ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் பேசும்போது..

‘நீட் தேர்வு பற்றி திருமுருகன் காந்தி பேசும் வீடியோக்களை பார்த்துதான், இந்த படம் இயக்கும் எண்ணம் ஏற்பட்டது. இந்த படம் பற்றி திருமுருகன் காந்தியிடம் பேச சென்றபோதுதான், அவர் கைதானார். அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷன். எனக்கு உறுதுணையாக இருக்கும் நான்கு பேருக்கு மிகவும் நன்றி’ என்றார்.

GV Prakash and Thirumurugan Gandhi praises Aneethi short film

அநீதி குறும்படம் பெற்ற விருதுகள்

சிறந்த படம் – 5வது நொய்டா இண்டர்நேஷனல் பிலிம் விருது
சிறந்த படம் – லேக் வியூ இண்டர்நேஷனல் பிலிம் விருது
சிறந்த படம் – கொல்கத்தா இண்டர்நேஷனல் கல்ட் பிலிம் விருது
சிறந்த அறிமுக இயக்குனர் – கொல்கத்தா இண்டர்நேஷனல் பிலிம் விருது
8வது தாதா சாயிப் பால்கே ஜூரி விருது
சிறந்த திரைக்கதை – 7வது பெங்களூரு பிலிம் விருது
சிறந்த நடிகர் – டீகடை சினிமா விருது
சிறந்த படம், (சிறப்பு விருது) – 5வது நொய்டா இண்டர்நேஷனல் பிலிம் விருது

1. Best film award -5th Noida International Film Festival,
2. Best film award-Lake View International Film Festival ,
3. Best film award- Calcutta International Cult Film Festival,
4. Best debut director – Calcutta International Film Festival,
5. Honourable Jury Mention – 8th Dada Saheb Phalke Film Festival,
6. Best Screenplay Award – 7th Bangalore Shors Film Festival
7. Best Actor – Teakadai Cinema Awards,
8. Special Festival Mention – 5th Noida International Film Festival

aneedhi short film

தில் சத்யா இயக்கத்தில் போலீஸாக அசத்தும் ஆண்ட்ரியா

தில் சத்யா இயக்கத்தில் போலீஸாக அசத்தும் ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andrea Jeremiah will be doing cop role in new movieபவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன் நம்பர் 2.

இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார்.

இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர்.

மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

ஆக்ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

Andrea Jeremiah will be doing cop role in new movie

More Articles
Follows