படிக்க வசதியில்லாத சுகன்யாவை கல்லூரிக்கு அனுப்பிய ஜிவி பிரகாஷ்

படிக்க வசதியில்லாத சுகன்யாவை கல்லூரிக்கு அனுப்பிய ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash helpநடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமூக சேவை பணிகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் நடத்திய போது அவர்களுடன் கலந்துக் கொண்டவர்.

மேலும் நெடுவாசல் போராட்டத்திலும் திரையுலகின் சார்பாக முதல் ஆளாக கலந்து கொண்டார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதா மரணத்திற்கு முதல் ஆளாக நேரில் சென்று அனிதா தந்தைக்கு ஆறுதல் கூறியிருந்தார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இரண்டு வருட மருத்துவ படிப்பை மேற்கொண்ட மாணவி சுகன்யா படிக்க போதிய வசதியில்லாத காரணத்தால் கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.

இந்த செய்தி ஓரிரு நாட்களாகவே பல நாளிதழ்களில் வெளியானது.

இதனையறிந்த ஜிவி. பிரகாஷ் அந்த ஏழை மாணவியின் படிப்பிற்கு தேவையான மொத்த தொகையையும் ஏற்றுக்கொண்டார்.

GV Prakash helps Medical student Suganya with financial support

gv prakash help medical student suganya

ஜீவா-நிக்கி இணைந்துள்ள கீ பட டீசரை வெளியிடும் வெங்கட்பிரபு

ஜீவா-நிக்கி இணைந்துள்ள கீ பட டீசரை வெளியிடும் வெங்கட்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat Prabhu will reveal Kee movie teaserசெல்வராகவனின் உதவி இயக்குநர் காலீஸ் இயக்கியுள்ள படம் கீ.

சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்‘ படத்தை தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதில் ஜீவா, நிக்கி கல்ராணி. அணைகா சோடி, R.J. பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையைமத்தார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட்டார்.

தற்போது கீ பட டீசரை இன்று அக். 7ஆம் தேதி 7.20 மணிக்கு வெங்கட்பிரபு வெளியிட உள்ளார்.

Venkat Prabhu will reveal Kee movie teaser

kee movie poster

அஜித்-விஜய்சேதுபதி படத்தயாரிப்பாளர் ஐஸ்வர்யா பாடகியானார்

அஜித்-விஜய்சேதுபதி படத்தயாரிப்பாளர் ஐஸ்வர்யா பாடகியானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vedhalam Karuppam movie producer Aishwarya became Play back singer“என்னை அறிந்தால்” “வேதாளம்” மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டுக்யிருக்கும் “கருப்பன்” ஆகிய திரைப்படங்களின் இளம் வெற்றி தயாரிப்பாளர் “ஐஸ்வர்யா”.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் தயாரித்து வருகிறார். “ஐஸ்வர்யா” இன்று நில்க்ரிஸ் ட்ரீம் என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் “கூத்தன்” என்ற திரைப்படத்தில் பாலாஜி இசையில் இரண்டு பாடல் பாடியுள்ளார்.

இது குறித்து அந்த குழுவிடம் கேட்ட பொது. படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்.இதில் பிரபல நடிகை “ரம்யா நம்பீசன்” ஒரு குத்து பாடல் பாடியது நீங்கள் அறிந்ததே.

“ஐஸ்வர்யா” அவர்கள் கர்னாடிக் கிளாசிக்கல் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைல் டூயட் பாடி அசத்தியிருக்கிறார்.

முதலில் ஒரு பாடல் பாட வேண்டும் என்று தான் நாங்கள் அழைத்தோம் ஆனால் அவர் அந்த பாடல் பாடிய விதம் குரலின் இனிமை, மெட்டை கற்பூரம் போல் பற்றி கொள்ளும் தன்மை இந்த திரைபடத்தின் தயாரிப்பாளர் நில்க்ரிஸ் முருகனுக்கும் இசை அமைப்பாளருக்கும் மிகவும் பிடித்துப்போனது.

மற்றோரு பாடலையும் சேர்த்து இவரே பாடட்டும் என்று முடிவு செய்தனர்.

“கூத்தன்” திரைப்படம் இயக்குனர் “எ.ல்.வெங்கி” இயக்கி புதுமுக நடிகர் “ராஜ்குமார்” நடிப்பில் “நில்க்ரிஸ் முருகன்” தயாரிப்பில் நவம்பர் மாதம் வெளிவர இருக்கிறது.

ஐஸ்வர்யா சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் “Oxygen” என்ற தெலுங்கு படத்தில் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vedhalam Karuppam movie producer Aishwarya became Play back singer

producer cum singer aishwarya

டோனி ரசிகர் விக்ரம் பிரபு-ரஜினி ரசிகை நிக்கி கல்ராணி கலக்கும் பக்கா

டோனி ரசிகர் விக்ரம் பிரபு-ரஜினி ரசிகை நிக்கி கல்ராணி கலக்கும் பக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram prabu sathishஅதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “பக்கா“

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

இப்படம் குறித்து விக்ரம்பிரபு கூறியதாவது…

திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

கிரிக்கெட் ரசிகரான நான் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன்.

ரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா ( நிக்கி கல்ராணி) கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா(பிந்து மாதவி) இப்படி மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான பக்கா படம்.

நம்மால் மறக்கப் பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக பக்கா இருக்கும்.

இது வரை நான் ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் எனக்கு புதிய பரினாமத்தை வெளிக் கொண்டு வரும் படமாக அமையும்.

கமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும் என்றார் விக்ரம்பிரபு.

படப்பிடிப்பு முழுவதும் சென்னை, பாண்டி, குற்றாலம், ஹைதராபாத் போன்ற இடங்களில் நடை பெற்றிருக்கிறது.

தயாரிப்பாளர் T.சிவகுமார் பேசியதாவது…

நாங்கள் தயாரித்த அதிபர் படம் நல்ல படம் என்ற பெயரை பெற்றுத் தந்தது.

பக்கா படம் நல்ல கமர்ஷியல் வெற்றிப் படமாக வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நான் ஒரு நல்ல வேடத்திலும் நடித்திருக்கிறேன். இந்த படத்தை தொடந்து “ தர்மன் “ என்ற படத்தை தயாரிக்க உள்ளோம். நடிகர் நடிகை மற்றும் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கிறோம் என்றார் T.சிவகுமார்.

Nikki Galrani as die hard fan of Rajinikanth in Pakka movie

Pakka-movie

நடிகர் ஜெய் தலைமறைவு; 2 நாட்களில் கைது செய்ய கோர்ட் ஆர்டர்

நடிகர் ஜெய் தலைமறைவு; 2 நாட்களில் கைது செய்ய கோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Jai must be arrested within two days Court Order

கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய், இரவு பார்ட்டியை முடித்துவிட்டு போதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது அந்த கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதுசம்பந்தமாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.

அதாவது காரை வேகமாக ஓட்டுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் பின்னர் கைது செய்யப்பட்ட ஜெய் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் நடிகர் ஜெய் இன்று ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் அவர் ,இன்று ஆஜராகவில்லை.

அவர் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்த 2 நாட்களுக்குள் நடிகர் ஜெய்யை கைது செய்து ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான வழக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Actor Jai must be arrested within two days Court Order

சினிமாவில் இணையும் பிக்பாஸ் ஜோடி ஆரவ்-ஓவியா..?

சினிமாவில் இணையும் பிக்பாஸ் ஜோடி ஆரவ்-ஓவியா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aarav oviyaகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து இவர் தன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடினார்.
அப்போது பலரும் ஓவியாவுடனான காதல் குறித்து கேள்வி கேட்டனர்.

விரைவில் என் முதல் பட அறிவிப்பை வெளியிடுவேன்.

ஓவியா எனக்கு நல்ல நண்பர். பிக்பாஸ்க்கு பிறகு அவரை நான் இன்னும் சந்திக்கவில்லை.

அவரை சந்தித்தபின் அந்த படத்தை இணையத்தில் பகிர உள்ளேன்.

அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்.” என்று தன் பதில்களை பதிவிட்டுள்ளார் ஆரவ்.

More Articles
Follows