தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமூக சேவை பணிகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் நடத்திய போது அவர்களுடன் கலந்துக் கொண்டவர்.
மேலும் நெடுவாசல் போராட்டத்திலும் திரையுலகின் சார்பாக முதல் ஆளாக கலந்து கொண்டார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதா மரணத்திற்கு முதல் ஆளாக நேரில் சென்று அனிதா தந்தைக்கு ஆறுதல் கூறியிருந்தார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில் இரண்டு வருட மருத்துவ படிப்பை மேற்கொண்ட மாணவி சுகன்யா படிக்க போதிய வசதியில்லாத காரணத்தால் கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.
இந்த செய்தி ஓரிரு நாட்களாகவே பல நாளிதழ்களில் வெளியானது.
இதனையறிந்த ஜிவி. பிரகாஷ் அந்த ஏழை மாணவியின் படிப்பிற்கு தேவையான மொத்த தொகையையும் ஏற்றுக்கொண்டார்.
GV Prakash helps Medical student Suganya with financial support