தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கிய படம் ‘வர்மா’.
இப்படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கும் வேளையில் படம் திருப்தியில்லை என்றும் நஷ்டம் அடைந்தாலும் படத்தை ரிலீஸ் செய்ய விருப்பம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது.
இதுகுறித்து இனி பேச விரும்பவில்லை என அறிவித்தார் பாலா.
இதனால் நடிகர் விக்ரம் மீதும் கோபத்தில் இருக்கிறார் பாலா.
இதனையடுத்து தன் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார்.
இப்படத்தில் நாயகர்களாக ஆர்யா மற்றும் அதர்வா இருவரும் நடிப்பார்கள் என தகவல்கள் வந்துள்ளன.
இந்த இருவரையும் வெவ்வெறு படங்களில் இயக்கியுள்ளார் பாலா.
ஆர்யாவை நான் கடவுள் மற்றும் அவன் இவன் ஆகிய 2 படங்களில் இயக்கியுள்ளார். அதர்வாவை பரதேசி படத்திற்காக இயக்கியுள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
நாயகியாக பிந்து மாதவி நடிப்பார் என்றும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.
பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் ஜிவி. பிரகாஷ் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.