கலியுகத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் .. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கலியுகத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் .. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தனது அனைத்து திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பிற்காக சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இயக்குநர் பிரமோத் பேசுகையில், “மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கலியுகம் எதிர்கொள்ளும்.

போரின் பின் விளைவுகள் மற்றும் அதன் விளைவாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சந்திக்கப் போகும் இழப்புகள் உட்பட பல சமகால நெருக்கடிகளை திரைக்கதை நிவர்த்தி செய்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சில பகுதிகளில் ‘அவதார் 2’ வெளியீட்டில் சிக்கல் . ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் சில பகுதிகளில் ‘அவதார் 2’ வெளியீட்டில் சிக்கல் . ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர்’ இன்று இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

டிஸ்னி நேரடியாக இந்தியாவில் ‘தி வே ஆஃப் வாட்டர்’ விநியோகம் செய்கிறது.

தற்போது, ​​திரையரங்கு உரிமையாளர்களுக்கும் டிஸ்னி நிறுவனத்துக்கும் இடையேயான வருவாய்ப் பகிர்வு பிரச்னையால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உட்பட இந்தியாவின் சில முக்கிய இடங்களில் அவதார் 2 வெளியாகவில்லை .

பிரபல மல்டிபிளக்ஸ்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படத்தை வெளியிடுவதில்லை.

இந்த விவகாரத்தை அறிந்த ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகம்: சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் முதல் போஸ்டர் அவுட்!

‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகம்: சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் முதல் போஸ்டர் அவுட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017ஆம் ஆண்டு வெளியான ‘மாயவன்’ ​​படத்தின் மூலம் இயக்குநராக மாறினார் தயாரிப்பாளர் சி.வி.குமார் .

தற்போது, ​​’மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சி.வி.குமார்.

‘மாயவன் ரீலோடட்’ என்ற தலைப்பில், தயாரிப்பாளர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார்.

முதல் பாகத்தில் நாயகனாக நடித்த சந்தீப் கிஷன், இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இரண்டாம் பாகம் அதிக பட்ஜெட்டில் பன்மொழித் திரைப்படமாக உருவாக உள்ளது.

தமிழ் நாட்டில் விஜய் தான் நம்பர் 1 .. வாரிசு தயாரிப்பாளர் ஓபன் டாக்

தமிழ் நாட்டில் விஜய் தான் நம்பர் 1 .. வாரிசு தயாரிப்பாளர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஸ்டார் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் தில் ராஜு.

“பொங்கலுக்கு, ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகிய இரண்டு பெரிய தமிழ் வெளியீடுகள் வரவுள்ளன. தமிழகத்தில், 800 திரைகள் உள்ளன.

இரண்டு படங்களுக்கும் சம அளவில் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விஜய் பற்றி அனைவரும் அறிந்ததே நம்பர் 1 ஸ்டார் அவர்.

அதற்கு அடுத்து தான் அஜித் வருகிறார்.

இரண்டு படங்களுக்கும் சம எண்ணிக்கையில் திரையிடுவது எப்படி? ‘துணிவு’ படத்தை விட ‘வாரிசு’ படத்திற்கு குறைந்தது 50 திரைகள் அதிகம் தேவை” என்று தில் ராஜு பேட்டியின் போது குறிப்பிட்டார்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ ரிலீஸ் தேதி மீண்டும் அறிவிப்பு

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ ரிலீஸ் தேதி மீண்டும் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தனது நீண்ட கால தாமதமான திரைப்படமான ‘தமிழரசன்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏறக்குறைய இரண்டு வருட ஒத்திவைப்புக்குப் பிறகு, படம் நவம்பர் 18 அன்று வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அது மீண்டும் தாமதத்தை எதிர்கொண்டது.

தற்போது, ​​தமிழரசன் டிசம்பர் 30-ம் தேதி திரைக்கு வரவுள்ளது, பாக்ஸ் ஆபிஸில் திரிஷாவின் ராங்கியுடன் மோதுகிறது.

இசைஞானி இளையராஜா இசையில் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள படம் தமிழரசன்.

ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி சமூகத்திற்காக போராடும் சாதாரண மனிதனாக நடித்துள்ளார்.

8 வருடங்களுக்கு பிறகு அட்லீ & பிரியா-வின் ‘வீட்ல விசேஷங்க..’

8 வருடங்களுக்கு பிறகு அட்லீ & பிரியா-வின் ‘வீட்ல விசேஷங்க..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ.

அடுத்தடுத்து தொடர் பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் அட்லீ.

ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லீ, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு பிளாக்பஸ்டர்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கான பிடித்தமான இயக்குனர் வரிசையில் இணைந்தார்.

இப்பொழுது இந்தியாவே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் “ஜவான் ” படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குவது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து ‘A for Apple Productions’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் முனைப்பிலும் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.

இயக்குனர் அட்லீ, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளின் காதல் வாழ்கை, இவர்களை தாண்டி ரசிகர்களுக்கும் வியக்கும் வண்ணம் இருக்கிறது.

இவர்களது காதல் வாழ்கையின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகும் போது, அதை பார்த்த ரசிகர்கள், அவர்களது காதலை கண்டு சந்தோசத்தில் பூரிக்கும் நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது.

இப்படி காதலில் திளைத்த இந்த தம்பதி தங்களது வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர். தங்களது குடும்பத்திற்கு புதிதாக ஒரு உறுப்பினரை சேர்க்க போகும் மகிழ்ச்சியில் இருவரும் திளைத்து இருக்கின்றனர்.

பலவித உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இந்த தருணத்தில், இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை ரசிர்கர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டு கொள்கின்றனர்..

“சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு இருக்கிறோம். ” –

அட்லீ & பிரியா அட்லீ

More Articles
Follows