தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார் நாடோடிகள் பட நடிகை சாந்தினி.
தனக்கு மூன்று முறை அமைச்சர் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது அரை நிர்வாண புகைப்படங்களை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுப்பதாக பேட்டியளி்தார்.
எனவே அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் பாலியல் பலாத்கார புகார் கொடுக்கப்பட்டிருப்பதால் நடிகை சாந்தினிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மணிகண்டனுக்கு சொந்தமான இடங்களில், போலீசார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நடிகை சாந்தினியை அறிமுகம் செய்து வைத்த பரணி என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையில் சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த மருத்தவர் அருணுடன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே சாந்தினிக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த மருத்துவர் அருணுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி வசந்தி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில்.. “தன் கணவர் மீது பொய்யான தகவலை பரப்பி, தங்கள் குடும்பத்திற்கு அவமரியாதையையும் , மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளார் நடிகை சாந்தினி.
நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தற்போது்அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.
EX minister Manikandan wife against Actress Chandini