தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலேசியாவைச் சேர்ந்தவர் நடிகை சாந்தினி (வயது 36). இவர் நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.
இவர் மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் பணிபுரிந்திருக்கிறார்.
இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று வந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில் “நான் மலேசியா குடியுரிமை பெற்றவள். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.
சென்னையில் 2017-ம் ஆண்டு முதல் வசிக்கிறேன்.
நான், மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் பணிபுரிந்த போது அடிக்கடி என் பணி நிமித்தமாக இந்தியா வருவேன்.
கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க அமைச்சரவையின் தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், சுற்றுலா வளர்ச்சி துறை சம்பந்தமாக என்னைப் பார்க்க விரும்புவதாக எனக்கு தெரிந்த நண்பர் பரணி என்பவர் மூலமாக பேசினார்
அந்த அமைச்சர் மலேசியாவில் தொழில் முதலீடு செய்ய போவதாக கூறினார்.
தொழில் சம்பந்தமாக பேச வேண்டும் என கூறி என்னுடைய செல்போன் நம்பரை வாங்கினார்.
சில நாட்களில் தனிப்பட்ட முறையில் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.
நான் அழகாக இருப்பதாக கூறினார்.
என்னை ரொம்ப பிடித்து விட்டதால் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகினார்.
அவர் மனைவியால் எந்த சந்தோஷமும் இல்லை என்றார்.
அவருடைய மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு விரைவில் என்னை சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாக கூறி உறுதியளித்தார்.
ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். சென்னையில் இருந்தால் இரவில் என்னுடன்தான் தங்குவார். நான் எங்கு சென்றாலும் அமைச்சர் காரைத் தான் பயன்படுத்துவேன்.
கடந்த 2019-ம் வருடம் சட்டமன்றத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசியபோது நான் அவருடைய மனைவி என்ற முறையில் சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டேன்
அவர் என் வீட்டிற்கு வந்து தங்கி சென்றதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.
அவரால் நான் மூன்று முறை கருவுற்றேன். மூன்று முறையும் கருவை கலைக்க சொன்னார்.
பின்னர் கருத்தடுப்பு உறை காப்பர்டியை போட வலியுறுத்தினார்.
இதனால் நான் பலமுறை உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளேன். அந்த நேரத்தில் கூட என்னை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
என்னை திருமணம் செய்ய நான் வற்புறுத்திய போது 2019ல் என்னை அடித்தார். என் கண்களை சேதப்படுத்தினார். அதற்கு நான் சிகிச்சை பெற்றேன்.
இந்தநிலையில் கடந்தாண்டு ஊ
கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் சொந்த ஊருக்கு சென்ற பிறகு திடீரென என்னை மிரட்ட ஆரம்பித்தார்.
`ஒழுங்கா நீ உன் சொந்த நாட்டிற்கு சென்றுவிடு இல்லையென்றால் உனக்கு தெரியாமல் எடுத்த அனைத்து அரை நிர்வாண படங்களை இன்டர்நெட்டில் விட்டுவிடுவேன்’ என்றார்.
நான் குளிக்கும் சமயம் எனக்கு தெரியாமல் எடுத்த போட்டோவை எனக்கு டெலிகிராம் மூலம் அனுப்பினார்.
தொடர்ந்து அவரை தொலைபேசியில் அழைத்தபோது என் அழைப்பை ஏற்காமல் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதற்கான அனைத்து ஆதாரங்களையும் துணை கமிஷனர் நாகஜோதியிடம் கொடுத்துள்ளோம்.
விசாரணை நடத்தி விட்டு நடவடிக்கை எடுப்பதாக நாகஜோதி தெரிவித்துள்ளார்” என்றார் நடிகை சாந்தினி.
Actress Chandini accuses minister of blackmailing with intimate photos