தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு & சுசீந்திரன் கூட்டணியில் விறுவிறுப்பாக தயாராகியுள்ள படம் ‘ஈஸ்வரன்’.
சூட்டிங் தொடங்கிய 40 நாட்களிலேயே ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டனர்.
இப்படத்தில் சிம்புவுடன் பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இப்பட படப்பிடிப்பு காட்சிகள் சமூகவலைதளங்களில் லீக்கானது.
அதில், உயிருடன் உள்ள பாம்பை மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் சிலம்பரசன் போடுவது போல காட்சி இருந்தது.
இவ்வாறாக வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதாலும் சிம்பு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை மீறியிருப்பதாலும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து படக்குழுவை அழைத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் ‘ஈஸவரன்’ பட இயக்குநர் சுசீந்திரன்.
“உண்மையில் அந்தக் காட்சி போலியான பிளாஸ்டிக் பாம்பு ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராஃபிக்ஸ் செய்யப்படவுள்ளது.
இந்தக் காட்சி கணினி கிராஃபிக்ஸ் செய்யும் போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது.
எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் அதைப்பற்றி விசாரித்து வருகின்றோம்.
சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார்.
நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவுபடுத்தினோம். அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம்.” இவ்வாறு நடிகர் சுசீந்திரன் விளக்கமளித்துள்ளார்.
Eeswaran Director Suseenthiran explained over snake cruelty