விஜய்ன்னாலே வெற்றிதான்..; -‘வா பகண்டையா’ இசை விழாவில் பேரரசு பேச்சு

விஜய்ன்னாலே வெற்றிதான்..; -‘வா பகண்டையா’ இசை விழாவில் பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார். அவர் சில வருடங்களுக்குப் பிறகு மனதுக்கு இனிய பாடல்களைக் கொடுத்திருக்கும் படம் ‘வா பகண்டையா.’

உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இந்த படத்துக்கு கதை – திரைக்கதை – வசனம் எழுதி, இயக்கி, தனது ‘ஒளி ரெவிலேஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார் ப.ஜெயகுமார்.

புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் ஹீரோவாகவும், நிழன் வில்லனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில், ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள யோகி ராம் இன்னொரு வில்லனாக நடிக்கிறார்.

இவர்களோடு ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ நிதிஷ் வீரா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், மனோபாலா, ‘காதல்’ சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கதை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பகண்டையா என்ற கிராமத்தில் நடப்பதுபோல் அமைந்துள்ளதாம். தலைப்புக்கு அர்த்தம் புரிந்திருக்குமே…

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா 17.2.2021 அன்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

விழாவில் நாயகன், நாயகி, வில்லன் , இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருடன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி ராமசாமி, ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் விக்ரமன், இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் தினா, ‘ஸ்டண்ட் யூனியன்’ தலைவர் தவசி ராஜ், பி.ஆர்.ஓ. சங்கத் தலைவர் விஜயமுரளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் இயக்குநரும், ‘பெப்சி’ அமைப்பின் தலைவருமான ஆர்.கே. செல்வமணி பேசும்போது…

”முப்பது வருஷத்துக்கு முன்னே நான் இயக்கிய ‘புலன் விசாரணை’ படம் ரிலீஸானப்போ என்னால தியேட்டருக்குள்ளே போக முடியலை. அப்படியொரு கூட்டம்.

அந்தளவு கூட்டத்தை இன்னைக்கு இந்த விழாவுல பார்க்க முடியுது. எப்படி புலன் விசாரணை 100 நாள் ஓடி வெற்றி பெற்றுச்சோ அப்படி இந்த படமும் பெரியளவுல வெற்றி பெறணும்னு வாழ்த்தறேன்.

புலன் விசாரணையில எப்படி விஜய்காந்தோ அதே பழைய விஜய்காந்த் மாதிரி இந்த படத்தோட ஹீரோ தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருக்கார். ஒரு தமிழ்ப் பொண்ணை ஹீரோயினா அறிமுகப்படுத்திருக்காங்க. அதையெல்லாம் வெச்சுப் பார்க்கிறப்போ நல்ல தமிழ்ப் படமா வந்திருக்கும்கிற நம்பிக்கை வருது.

டிரெய்லர் பார்க்கிறப்போ, படம் சமூக அக்கறையை மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்குன்னு புரிஞ்ச்சுக்க முடிஞ்சுது. இனத்தால, மதத்தால நாட்டை துண்டாடுறவங்களுக்கு எதிரான வசனமும் இருக்கு. அது எல்லாமே சரியானதுதான். அந்த வகையில இயக்குநர் நல்ல படத்தை எடுத்திருக்கார்” என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது…

”என்னோட படங்களுக்கு ஊர் பெயர்களைத்தான் தலைப்பா வைப்பேன். அதே மாதிரி இந்த படத்தோட இயக்குநர் அவரோட பகண்டையா’ங்ககிற ஊர்ப் பெயரை தலைப்பா வெச்சிருக்கார்.

இயக்குநருக்கு ஊர்ப்பற்று மட்டுமில்லை; தேசப்பற்றும் இருக்கு. அதனாலதான், நாட்டுல இன உணர்வைத் தூண்டி, மத உணர்வைத் தூண்டி ஆதாயம் பார்க்க, அரசியல் பண்ணா நினைக்கிறவங்களை செருப்பால அடிக்கிற மாதிரி வசனம் வெச்சிருக்கார்.

யாருக்கு ஊர்ப்பற்றும் தேசப்பற்றும் இருக்கோ அவங்க நல்ல கலைஞன். அவங்கதான் உண்மையான மனிதன். அப்படி பார்க்கிறப்போ இந்த படத்தோட இயக்குநரை உண்மையான மனிதன்னு சொல்லலாம்.

டிரெய்லர் பார்த்தப்போ ‘சாதிங்கிறது மாம்பழக் கொட்டைக்குள்ள இருக்கிற வண்டு மாதிரி’ன்னு ஒரு வசனம் வந்துச்சு. மாம்பழத்தை ஏன் இழுத்திருக்கார்னு படத்தை பார்த்தாதான் புரியும். பார்க்கணும்.

அடுத்ததா, படத்தோட ஹீரோ பேரு விஜய தினேஷாம். விஜய்ன்னாலே வெற்றிதான். ஹீரோவை பார்த்து ஆர்.கே. செல்வமணி, விஜய்காந்தை பார்த்த மாதிரி இருக்குன்னார். விஜய்காந்தை மட்டுமில்லை; விஜய்ய பார்த்த மாதிரியும் இருக்கார்” என்று படக்குழுவினர் உற்சாகத்தில் மிதக்கும்படி சிலாகித்துப் பாராட்டினார்.

இயக்குநர் விக்ரமன் பேசும்போது…

”என்னோட பல படங்களுக்கு இசையமைச்ச நண்பர் எஸ்.ஏ. ராஜ்குமார் இந்த படத்துக்கு இசையமைச்சிருக்கிறது மகிழ்ச்சியா இருக்கு. சமூக அக்கறையை மையமா வெச்சு உருவாகியிருக்கிற இந்த படத்தோட ஒரு பாட்டுல ‘தமிழர்களோட சினத்தால் தனி ஈழம் உருவெடுக்கும்’கிற மாதிரி ஒரு வரி வருது.

இயக்குநரோட அந்த கனவு நனவாகணும். அதுதான் நம் எல்லோருடைய விருப்பமும் ஆசையும்கூட” என பெருமிதப்பட்டார்.

இசையமைப்பாளர் தினா பேசும்போது, ”இந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டிருக்கிற, இயக்குநரோட சொந்த ஊரான விழுப்புரத்துல இருந்து வந்திருக்கிற ரசிகர்களோட உற்சாகத்தைப் பார்த்தா படம் விழுப்புரத்துல 175 நாள் ஓடி வெள்ளிவிழா காணும்கிறது உறுதியா தெரியுது.

அங்கே மட்டுமில்லாம் எல்லா இடத்துலயும் படம் பெருசா ஓட ரசிகர்கள் ஆதரவு தரணும்” என்றார்.

எஸ்.பி.பி. பாடிய பாடல் இடம்பெற்ற கடைசித் திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ள இந்த படத்துக்கு, ஆரி ஆர்.ஜே.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.

சிவசங்கர், அக்‌ஷை ஆனந்த், விஜி ஆகியோர் நடனம் அமைக்க, இடி மின்னல் இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

Director Perarasu speech at Vaa Bagandaiya audio launch

தன் தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களை பற்றி புதுச்சேரியில் ராகுல் காந்தி உருக்கமான பேச்சு

தன் தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களை பற்றி புதுச்சேரியில் ராகுல் காந்தி உருக்கமான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல்காந்தி அவர்கள் ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரிக்கு வந்தார்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்து அதன்பின் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு சென்றால் ராகுல் காந்தி.

அப்போது மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி…

“உங்கள் தந்தை கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வியை கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி…

“எனது தந்தையை இழந்தது என் இதயத்தை பிளந்தது போல் இருந்தது.

உங்களில் யாரேனும் தந்தையை இழந்தால் எனது வலி உங்களுக்கு தெரியும்.

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை“ என தெரிவித்தார் ராகுல் காந்தி.

Rahul Gandhi talks about his father’s death

ராம் இயக்கத்தில் யுவன் இசையில் நடிகர் சிம்பு..?

ராம் இயக்கத்தில் யுவன் இசையில் நடிகர் சிம்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதனையடுத்து ‘பத்து தல’ படம் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் சிம்பு.

இந்த நிலையில் இப்படங்களை முடித்துவிட்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

STR’s next with Director Ram ?

STR Yuvan Ram

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தை வாங்கியது லைகா நிறுவனம்

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தை வாங்கியது லைகா நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RRR movieபாகுபலி 1 & பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்ற படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார்.

அல்லூரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை (1920) வாழ்க்கையை முன்வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்து வருகின்றனர்.

ராஜமெளலி & ஜூனியர் என்டிஆர் இதற்கு முன்பு 3 படங்களில் இணைந்துள்ளனர்.

ராஜமெளலி & ராம் சரண் 2வது முறையாக இணைந்துள்ளனர்.

அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கின்றனர்.

கீரவாணி இசையமைக்க கே.கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் இந்த படம் அக்டோபர் 13 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக அறவித்துள்ளனர்.

Lyca acquired TN theatrical rights of RRR movie

தனுஷ் – மாளவிகா கூட்டணியில் அடுத்து ஒரு ‘மாஸ்டர்’ நடிகர்

தனுஷ் – மாளவிகா கூட்டணியில் அடுத்து ஒரு ‘மாஸ்டர்’ நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master mahendranதுருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனருடன் இணைந்து பிரபல பாடலாசிரியர் விவேக் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி வருகிறார்.

இப்பட தலைப்பை விரைவில் வெளியிடுவோம் என அண்மையில் தனுஷ் தெரிவித்து இருந்தார்.

இப்படத்தை பிரபல சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு நடிகர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார்.

இவர்களுடன் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்திலிருந்து மற்றொரு நடிகரும் தனுஷுடன் இணைந்துள்ளார்.

விஜய் சேதுபதியின் சின்ன வயது கேரக்டர் குட்டி பவானியாக கலக்கிய மாஸ்டர் மகேந்திரனும் இதில் நடிக்கவுள்ளார் என அறிவித்துள்ளனர்.

Another master cast joins in Dhanush movie

தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு..; அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு..; அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் & கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 8-10 மாதங்களுக்கு பிறகு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றன.

இதனிடையில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

2021 ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

பின்னர் பிப்ரவரி 8 தேதி முதல் முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது.

தற்போது அரசு தேர்வுத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முழு தேர்வு அட்டவணையும் வெளியாகி உள்ளது. இந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்து வருகிறோம்.

மேலும் 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…

“பள்ளிகளில் 6 முதல் 8 வரை ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பள்ளி பாடங்களை தொடங்குவது குறித்து முடிவு செய்வோம்.

மருத்துவத் துறை, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்

Upddate on school reopening for 6th to 8th students

More Articles
Follows