PSBB பாலியல் விஷயத்தில் ராஜகோபாலனை விட்டுட்டாங்க.. மதுவந்திய திட்டுறாங்க.. – பேரரசு

PSBB பாலியல் விஷயத்தில் ராஜகோபாலனை விட்டுட்டாங்க.. மதுவந்திய திட்டுறாங்க.. – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director perarasuசென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது என்பதை நேற்றே நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளதாவது…

“பத்மசேஷாத்ரி பள்ளியில்
ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள்.

சட்டப்படி கடும் தண்டனை வேண்டும். அவர் இனி எங்கும் ஆசிரியர் பணி தொடரக் கூடாது.

இது சம்பந்தமாக நிறையப்பேர் குரல் கொடுக்கிறார்கள் அதில்
பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொடுக்கும் குரலை விட, பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது,

பலரின் எழுத்துப்பதிவுகள், வீடியோ பதிவுகள் குவிகின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால் அதில் பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டுவிட்டனர்.

மதுவந்தி! மதுவந்தி ,மதுவந்தியைத் தூக்கி உள்ளே போடு! என்று அவர் மீதான பாய்ச்சலே அதிகமாக இருக்கிறது.

அவரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக குடுக்கும் குரலில் தாயின் குரல், தந்தையின் குரல், அண்ணனின் குரல்
இப்படி அக்கறையோட, சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும்.

இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக் குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம்.

உங்களின் அரசியல் பழிவாங்களுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

இது மாணவிகளின் மானப்பிரச்சணை.
இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.

நிர்வாகத்தின் மீது தவறு இருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும். இது மட்டுமல்ல
மீண்டும் பொள்ளாச்சி வழக்கை அரசு கையில் எடுத்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும்.

பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவுதாட்சண்யம் பார்க்காதீர்கள்.
அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் பெண்ணின் மானம்.

இவ்வாறு டைரக்டர் பேரரசு தன் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

Director Perarasu on PSBB issue

கொரோனாவினால் பலியான பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணம்.; ஊக்கத்தொகை 5 ஆயிரமாக உயர்வு

கொரோனாவினால் பலியான பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணம்.; ஊக்கத்தொகை 5 ஆயிரமாக உயர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalin (5)கொரோனா காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பல சிரமங்களைத் தாண்டி பணி புரிந்து வருகின்றனர்.

இதனால் பத்திரிகையாளர்களை முன்களப்பணியாளர்கள் என அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிலையில் ஊடகத் துறையினருக்காக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர்.

அதில்..

கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப்பங்காற்றி வருகிறார்கள்.

மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை / மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை / இலவசப் பேருந்துப் பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு.

அதிமுக ஆட்சியின் போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை 3 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை தற்போது உயர்த்தி வழங்கக் கோரி இருந்தனர்.

இதனை பரிசீலித்த முதல்வர், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிவுடன் பரிசீலித்து, அதனை ரூபாய் 10 லட்சமாக
உயர்த்தி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பத்திரிகைத் துறை மற்றும் அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினை கவனமுடன் மேற்கொள்ள முதல்வர் இத்தருணத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்”

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

#TamilNadu government to provide special incentive of Rs 5000 to #journalists and photographers of government-recognized news organizations. Rs 10 lakh to be provided to families of deceased journalists or photographers due to #COVID19.

#MKStalin #coronavirus #TNGovt

Tamil Nadu government to provide special incentive of Rs 5000 to journalists

ஒரு வழியாக புதுச்சேரியில் புது(மை)..; சபாநாயகர் அறையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு

ஒரு வழியாக புதுச்சேரியில் புது(மை)..; சபாநாயகர் அறையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pondy MLAமே மாதம் 7ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சராக என். ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார்.

ஆனால் இவரை தவிர எவருமே அமைச்சர்களாக பங்கேற்கவில்லை.

பாஜக துணை முதல்வர் & 2 அமைச்சர்கள் பதவி கேட்டதால் என்ஆர் காங் தரப்பில் அதிருப்தி நிலவியது.

இதனிடையில் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார் முதல்வர் ரங்கசாமி.

இதனால் புதுச்சேரி அரசியலில் குழப்பமே நீடித்து வந்தது. கொரோனா சூழலில் கூட அரசு நிவாரணமோ நலத்திட்டமோ அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஒரு வழியாக 3 வாரங்களுக்கு பிறகு புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகரான லட்சுமி நாராயணனுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி ஏற்கும் விழாவும் நடைபெற்றது.

சட்டசபையில் உள்ள சபாநாயகர் அறையில் நடந்தது. வழக்கமாக சட்டசபையில்தான் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெறும்.

ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக சட்டசபையில் உள்ள சபாநாயகர் அறையில் எளிய முறையில் விழா நடந்தது.

முதல் நபராக முதலமைச்சர் ரங்கசாமி எம்எல்ஏவாக பதவி ஏற்று செய்து கொண்டார்.

அவருக்கு தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இவரை தொடர்ந்து எம்எல்ஏக்கள் தனித்தனியே சபாநாயகர் அறைக்கு வந்து எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, திமுக, காங்கிரஸ், சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆகியோரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களோடு மத்திய அரசால் (பாஜக) நியமிக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

எம்எல்ஏக்கள் பதவியேற்பையொட்டி சட்டசபை வளாகத்துக்குள் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை.

எம்எல்ஏக்கள் பதவியேற்கும்போது அவர்களின் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பதவியேற்பு விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newly elected Pondy MLA’s sworned

அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகள் லிஸ்ட்..: டிடி ஷிவானி பவித்ரா ஆல்யாவை முந்தி முதலிடத்தில் ரம்யா

அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகள் லிஸ்ட்..: டிடி ஷிவானி பவித்ரா ஆல்யாவை முந்தி முதலிடத்தில் ரம்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RamyaPandian2020ம் ஆண்டில் தமேல் சேனல் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகளின் பட்டியலை சென்னை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் ரம்யா பாண்டியன் இடம் பெற்றுள்ளார்.

ராஜூ முருகன் இயக்கி தேசிய விருது பெற்ற திரைப்படமான ‘ஜோக்கர்’ படத்தில் நடித்து பிரபலமானவர் இவர்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப்போவது யாரு மற்றும் பிக் பாக்ஸ் 4-வது சீசன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் உள்ளார்.

2. பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷ்னி ஹரிபிரியன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

3. உங்களில் யார் அடுத்த பிரபு தேவா மற்றும் குக்வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பவித்ரா லட்சுமி.

4. டிவி தொகுப்பாளினி & நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.

5. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலில் அசத்தும் ஆயிஷா.

6. பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஷிவானி நாராயணன்.. பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமானார்.

7. சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா. இவர் சீரியல் நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

8. விஜய் டிவியில் ஆங்கரிங் செய்து ரசிகர்களை கவர்ந்தவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

9. கிகி விஜய்… மானாட மயிலாட, நம்ம ஊரு கலரு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.

10. தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன்.

11. அஞ்சனா ரங்கன், சைத்ரா ரெட்டி , பிரியங்கா குமார், வித்யா பிரதீப், ஆஷா கெளடா, ஷபனா ஷாஜகான், டெல்னா டேவிஸ், ஸ்ரேயா அஞ்சன், சம்யுக்தா மற்றும் ஹேமா பிந்து உள்ளிட்ட 20 நடிகைகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

Ramya Pandian wins most desirable tv artist in 2020

ட்விட்டர் பக்கமே வர முடியல..; சூர்யா ரசிகர்களுக்கு பயப்படும் பாண்டிராஜ்

ட்விட்டர் பக்கமே வர முடியல..; சூர்யா ரசிகர்களுக்கு பயப்படும் பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya pandirajபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை தற்காலிகமாக ‘சூர்யா 40’ என்றே அழைக்கின்றனர்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

மேலும் நடிகர் சத்யராஜ், திவ்யா துரை, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இமான் இப்படத்துக்கு இசையமைப்பதன் மூலம் முதன் முறையாக சூர்யாவுடன் இணைகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று சூர்யாவின் தம்பி கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு TWITTER SPACEல் கலந்துக் கொண்டார் இயக்குனர் பாண்டிராஜ்.

அப்போதும் சூர்யா ரசிகர்கள் அவரிடம் ‘சூர்யா 40’ அப்டேட் குறித்து கேட்டுக் கொண்டே இருந்தனர்.

படத்தை பற்றி எதுவும் சொல்லக்கூடாது.
படத்தின் தலைப்பு முதல் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது.

சூர்யா சார் ரசிகர்கள் அப்டேட் கேட்டுட்டே இருக்காங்க.. ட்விட்டர் பக்கமே வர முடியல..” என தெரிவித்தார் பாண்டிராஜ்.

Director Pandiraj reply to Suriya fans

கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க..; பிரபல ஊடகத்திற்கு கொரோனாவிலிருந்து மீண்ட காளி வெங்கட் அட்வைஸ்

கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க..; பிரபல ஊடகத்திற்கு கொரோனாவிலிருந்து மீண்ட காளி வெங்கட் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யுடன் தெறி, தனுஷுடன் மாரி, கொடி, சிம்புவுடன் ஈஸ்வரன், சூர்யாவுடன் சூரரைப்போற்று, ஜெயம்ரவியுடன் மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் காளி வெங்கட்.

45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவர்.

இவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர் கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்…

“இது ஒரு விழிப்புணர்வு வீடியோ தான். நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்.

இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே அறிகுறிகளும் இருந்தன. ஆக்ஸிஜன் லெவல் ரொம்ப கம்மியா இருந்ததால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக சொன்னாங்க.

சரி அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி ஹாஸ்பிட்டல்ல இடமில்லை.

டாக்டர் முருகேஷ் பாபுதான் ரொம்ப உதவியா இருந்தாரு. அவரோட அட்வைஸ் கேட்டு தான் நான் நடந்துகிட்டேன்.

கொரோனா வராம பார்த்துக்குறதுதான் முக்கியம். பதற்றமாக கூடாதுனு சொல்றாங்க. அதானல வராம பாதுகாத்துக்குங்க, பத்திரமா இருங்க”

என வீடியோ பதிவிட்டுள்ளார் காளி வெங்கட்.

இதை ஒரு ஊடகம் பகீர் பரபரப்பு தகவல் என செய்தியாக வெளியிட்டது.

அதை பார்த்த நடிகர் காளி வெங்கட் தன் ட்விட்டரில் இதை கண்டித்துள்ளார்.

இதோ அந்த பதிவு..

1.8M followers இருக்காங்க கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க,முதல்ல வீடியோவ பாருங்க,தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம்,அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன்,அதுல என்ன #பகீர் இருந்தது உங்களுக்கு,எனக்கு தெரிஞ்ச மருத்துவர் இருக்கிற மருத்துவமனைக்கு போனேன் அங்க படுக்கை இல்ல அவ்ளோதான் https://t.co/JtVUcPQYfg

Actor Kaali Venkat shared experience of battling covid 19

IMG_20210526_142122

More Articles
Follows