தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகவிருந்த படம் ‘அருவா’.
இந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார். எனவே அருண் விஜய்யை நயகனாக வைத்து படத்தை இயக்கி வருகிறார் ஹரி.
இது சூர்யாவுக்கான கதையா? அல்லது புதிய கதையா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பழனி மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்த்துள்ளது.
எனவே AV33 படக்குழுவில் உள்ள அனைவருக்குமே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையில் இயக்குனர் ஹரி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் ஹரிக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Director Hari admitted to hospital