தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் சென்னைக்கு வந்தவர் இயக்குனர் சேரன்.
“புரியாத புதிர்” படத்தில் உதவி இயக்குனராகவும், “சேரன் பாண்டியன்” “நாட்டாமை” போன்ற படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர் இவர்.
பார்த்திபன் & மீனா நடித்த “பாரதி கண்ணம்மா” என்ற படத்தையும் இயக்கி யார் இந்த சேரன்.? என தமிழ் சினிமாவையே தன் பக்கம் திருப்பியவர்.
இந்த படம் விருதுகளை அள்ளியது. அதன்பின்னர் முரளி மீனா நடித்த ‘பொற்காலம்” என்ற திரைப்படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றார்.
தொடர்ந்து “வெற்றிக்கொடிகட்டு” போன்ற படங்களை இயக்கி வந்த சேரன் முதன்முதலாக “ஆட்டோகிராஃப்” என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் சேரன்.
இதில் மல்லிகா, கோபிகா, சிநேகா, கனிகா என நான்கு தாயகிகள் நடிக்க ஒரு மனிதனின் நான்கு கட்ட காதல் வாழ்க்கையை காவியமாக சொல்லியிருந்தார்.
‘தவமாய் தவமிருந்து’ படத்தில் தந்தை மகன் பாசத்தை படைத்திருந்தார்.
இதன் பின்னர் நடிப்பு இயக்கம் என இரட்டை குதிரையில் பயணிக்கத் தொடங்கினார்.
பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, மூன்று பேர் மூன்று காதல், யுத்தம் செய்” போன்ற படங்களில் இயக்கத்தை விட்டு நடிகராகவே தோன்றினார்.
தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் கௌதம் & வெண்பாவுடன் நடித்து வருகிறார்.
இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சேரன் தன் ட்விட்டரில் பாரதிராஜா அழைப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில்…
காலை பாரதிராஜா அப்பாவிடமிருந்து அழைப்பு.. எடுத்து பேசுகிறேன்.. அவர் குரல் தழுதழுக்கிறது. “என்னப்பா” என சற்று பதட்டம் .
ஆட்டோகிராஃப் பார்க்கிறேன்.. எங்கடா அந்த சேரன்… நீ திரும்ப வரணும்டா என அக்கறையோடு சொல்கிறார்.
இதோ வந்துட்டேன்ப்பா என அவர் இல்லம் சென்றேன்.. ஆசீர்வதித்தார்.. https://t.co/LGEUbMMMYu
Director Cheran met legendary director Bharathi raja