தழுதழுத்த குரலில் பாரதிராஜா அழைப்பு.. பதறியடித்து ஓடிய சேரன்.; என்ன நடந்தது..?

தழுதழுத்த குரலில் பாரதிராஜா அழைப்பு.. பதறியடித்து ஓடிய சேரன்.; என்ன நடந்தது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் சென்னைக்கு வந்தவர் இயக்குனர் சேரன்.

“புரியாத புதிர்” படத்தில் உதவி இயக்குனராகவும், “சேரன் பாண்டியன்” “நாட்டாமை” போன்ற படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர் இவர்.

பார்த்திபன் & மீனா நடித்த “பாரதி கண்ணம்மா” என்ற படத்தையும் இயக்கி யார் இந்த சேரன்.? என தமிழ் சினிமாவையே தன் பக்கம் திருப்பியவர்.

இந்த படம் விருதுகளை அள்ளியது. அதன்பின்னர் முரளி மீனா நடித்த ‘பொற்காலம்” என்ற திரைப்படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றார்.

தொடர்ந்து “வெற்றிக்கொடிகட்டு” போன்ற படங்களை இயக்கி வந்த சேரன் முதன்முதலாக “ஆட்டோகிராஃப்” என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் சேரன்.

இதில் மல்லிகா, கோபிகா, சிநேகா, கனிகா என நான்கு தாயகிகள் நடிக்க ஒரு மனிதனின் நான்கு கட்ட காதல் வாழ்க்கையை காவியமாக சொல்லியிருந்தார்.

‘தவமாய் தவமிருந்து’ படத்தில் தந்தை மகன் பாசத்தை படைத்திருந்தார்.

இதன் பின்னர் நடிப்பு இயக்கம் என இரட்டை குதிரையில் பயணிக்கத் தொடங்கினார்.

பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, மூன்று பேர் மூன்று காதல், யுத்தம் செய்” போன்ற படங்களில் இயக்கத்தை விட்டு நடிகராகவே தோன்றினார்.

தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் கௌதம் & வெண்பாவுடன் நடித்து வருகிறார்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சேரன் தன் ட்விட்டரில் பாரதிராஜா அழைப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில்…

காலை பாரதிராஜா அப்பாவிடமிருந்து அழைப்பு.. எடுத்து பேசுகிறேன்.. அவர் குரல் தழுதழுக்கிறது. “என்னப்பா” என சற்று பதட்டம் .

ஆட்டோகிராஃப் பார்க்கிறேன்.. எங்கடா அந்த சேரன்… நீ திரும்ப வரணும்டா என அக்கறையோடு சொல்கிறார்.

இதோ வந்துட்டேன்ப்பா என அவர் இல்லம் சென்றேன்.. ஆசீர்வதித்தார்.. https://t.co/LGEUbMMMYu

Director Cheran met legendary director Bharathi raja

செப்டம்பரில் ‘கோடியில் ஒருவன்’… அக்டோபரில் ‘தமிழரசன்’ வர்றாங்க..

செப்டம்பரில் ‘கோடியில் ஒருவன்’… அக்டோபரில் ‘தமிழரசன்’ வர்றாங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரே நேரத்தில் 2 திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

எனவே ஒரு படத்தை செப்டம்பரிலும் அடுத்த படத்தை அக்டோபரிலும் வெளியிடவுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு..:

‘மெட்ரோ’ என்ற படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘கோடியில் ஒருவன்’.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த மே மாதமே ரிலீசுக்கு தயாரானாலும் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படம் செப்டம்பர் 17ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ‘தமிழரசன்’.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.

எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்து வருகிறார்.

தமிழரசன் படத்திற்காக இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வந்தார்.

இந்த படம் அக்டோபர் மாதம் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படவில்லை.

Vijay Antony’s next 2 films release update is here

விஜய்சேதுபதி – ஆண்ட்ரியா இணையும் ‘பிசாசு 2’ சூட்டிங் & ரிலீஸ் அப்டேட்

விஜய்சேதுபதி – ஆண்ட்ரியா இணையும் ‘பிசாசு 2’ சூட்டிங் & ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T. முருகானந்தம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார்.

கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

திண்டுக்கல்லில் 3 கட்டமாக நடைபெற்ற ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் மிஷ்கின் அனைவரின் ஒத்துழைப்பிற்கு தனது அன்பை தெரிவித்து வாழ்த்துக்களை கூறினார்.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

திரையரங்குகளில் ‘பிசாசு 2’ வெளியாகும் என்று கூறிய தயாரிப்பு தரப்பு விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Pisaasu 2 movie release update is here

நடிகர்கள் ரமணா & நந்தா தயாரிப்பில் விஷால்..; மீண்டும் இணையும் பிரபல நடிகை

நடிகர்கள் ரமணா & நந்தா தயாரிப்பில் விஷால்..; மீண்டும் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார்.

பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக #விஷால்32 என்று வைத்துள்ளார்கள்.

நடிகர்களில் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த நிறுவனம் தான் #விஷால்32 படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே, சன் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான, விஷால் பங்கு பெற்ற “சன் நாம் ஒருவர்” நிகழ்ச்சியை இந்த ராணா புரொடக்‌ஷன்ஸ் தான் தயாரித்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து தனது நண்பர்கள் ரமணா, நந்தா தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கிறார் விஷால்.

இதன் படபிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

#சமர் படத்தில் விஷால் திரிஷாவுடன் இணைந்து நடித்த சுனைனா, முதன் முறையாக விஷாலுடன் தனி ஹீரோயினாக ஜோடி சேருகிறார். சுனைனா படங்களில் இது முக்கிய படமாக இருக்கும்.

ஒரு ‘பொருள்’ – #விஷால்32 படத்தின் கதையையும் டைட்டிலையும் தீர்மானிக்கும். விரைவில் டைட்டில் வெளியாகும் போது அந்த ‘பொருள்’ என்னவென்று தெரிந்துவிடும்.

சமீபத்தில் வெளியான பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய A. வினோத்குமர் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதுகிறார்.
வசனம்: A.வினோத்குமார்/பொன்பார்த்திபன்.
சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Vishal to romance actress Sunaina for his next

இம்சை இன்னும் தீரல..; நாய் சேகருக்காக மோதும் காமெடியன்கள் வடிவேலு – சதீஷ்

இம்சை இன்னும் தீரல..; நாய் சேகருக்காக மோதும் காமெடியன்கள் வடிவேலு – சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு வழியாக தனக்கு போடப்பட்ட ரெட் கார்டு பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்த்து வைகைப் புயல் வடிவேலு விரைவில் திரையை கடக்கவிருக்கிறார்.

விரைவில் ‘நாய் சேகர்’ மற்றும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கவுள்ளார் வடிவேலு.

இந்த நிலையில் அடுத்து ஒரு பிரச்சினை வடிவேலுக்காக உருவெடுத்துள்ளது.

இவர் நடிக்கவுள்ள ‘நாய் சேகர்’ படத்தின் தலைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ள படத்தில் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ பவித்ரா நடித்து வருகிறார்.

அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் டைட்டில் வைத்துள்ளனர். இதுதான் இப்போ பிரச்சினை ஆகியுள்ளது.

அண்மையில் அளித்த பேட்டியில்… “தன்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று வடிவேலு கூறியதால் இந்த டைட்டில் பிரச்சினை வெளியே தெரிய வந்துள்ளது.

எனவே தற்போது ‘நாய் சேகர்’ என்ற தலைப்பை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என கேட்டிருக்கிறாராம் வடிவேலு.

ஆனால் சதீஷ் படக்குழு மறுத்துவிட்டதாம். எனவே இரு தரப்பிலும் பஞ்சாயத்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Vadivelu and Sathish joins for a new movie

மிஸ்டர் உத்தமனாக மாறிய மனோபாலா..; நயன்தாரா தம்பியுடன் கூட்டணி

மிஸ்டர் உத்தமனாக மாறிய மனோபாலா..; நயன்தாரா தம்பியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த ’ஊர்காவலன்’, விஜயகாந்த் நடித்த சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கருப்பு நிலா உள்பட சுமார் 20க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா.

மேலும் இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

’சதுரங்க வேட்டை’ ’பாம்பு சட்டை’ உள்ளிட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

தற்போது மனோ பாலா முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்து இருக்கிறார்.

‘மிஸ்டர் உத்தமன்’ என்ற இந்த வெப் தொடரை நிஷாந்த் லோகநாதன் இயக்கி இருக்கிறார்.

இதில் முதன்மை கதாபாத்திரத்தில் சச்சின் நாச்சியப்பன் நடிக்கிறார்.

இவர் நயன்தாராவுக்கு தம்பியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்தார். யூடியூப், விளம்பர படங்களில் நடித்த பிரணிகா தக்ஷு இதில் நாயகியாக நடிக்கிறார்.

மிஸ்டர் உத்தமன் வெப் தொடர் காதல், காமெடி, பேண்டஷி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த வெப் தொடர் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் ‘ஸ்டே டியூன்’ என்ற யூடியூப்பில் வெளியாக இருக்கிறது.

Staytuned launches a new Web Series named Mr Uthaman by Manobala

Staytuned youtube channel is proudly announcing a new launch of web series named Mr Uthaman directed by Nizhanth Loganathan and a fame actor Manobala played an important role. The web series is going to be launched on September 3 2021, Friday. Actor Sacchin Nachyappan played the lead role, Saccin Nachiyappan has played an important role in Netrikann as Actress Nayanthara’s brother.

Female lead role is played by Pranika Dhakshu who has acted in many youtube series, advertisements and also Vijay TV artist.

Mr Uthaman is a fantasy love comedy genre and it’s the first youtube web series for Actor Manobala which is expected to be a huge success.

Staytuned youtube channel has released two web series namely Kadhal Café and Sagiye. For the first time Staytuned youtube channel proudly works with the Comedy Legend Manobala which is expected to have a huge response.

Staytuned launches a new Web Series named Mr Uthaman by Manobala

More Articles
Follows