தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த பிப்ரவரி மாதம் காரில் சென்று கொண்டிருந்தபோது, நடிகை பாவனா அந்த கார் டிரைவர் பல்சர் சுனிலால் கடத்தப்பட்டார்.
இதனையடுத்து, காரிலேயே பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.
இச்சம்பவம் போலீஸ் விசாரணைக்கு 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து நடந்த விசாரணையில் நடிகர் திலீப்பின் பேரும் சேர்க்கப்பட்டது.
தற்போது அவர் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது…
திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர், பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் செய்து வந்தனர்.
இதனிடையில் விவாகரத்து ஆன காவ்யா மாதவனுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார் திலீப்.
இதனை தன் தோழி மஞ்சுவிடம் பாவனா போட்டுக்கொடுக்க, பாவனாவை பழிவாங்க திட்டம் தீட்டினாராம் திலீப்.
எனவேதான் இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் திலீப்.