தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 4’ கடந்த ஒரு மாதமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.
தற்போது அனல் பறக்கும் வாய்ச்சண்டைகள் அதிகம் இடம் பெற்றுள்ளது.
ஒரு நாள் நடிகை சனம் ஷெட்டியை பாலா, ‘தருதலை’ என கேலி செய்தார்.
இதனையடுத்து கோர்ட் செட்டப் ஒரு டிசைன் செய்து பாலா, சனம் இருவரது சண்டை பற்றியும் இரு அணிகளாக விவாதம் நடைபெற்றது.
இறுதியாக பாலாவுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி சுசித்ரா.
இவையில்லாமல் சனம் பற்றி பாலா பேசும்போது ‘அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகிப் போட்டியில் வென்றார்,’ எனவும் ஒரு முறை கூறியிருந்தார்.
ஆனால் கடந்த வருட பிக்பாஸ் சீசனில் பெண் அவமதிப்பு பற்றிய சர்ச்சை உருவானது.
எப்போதோ நடந்த ஒரு விஷயத்தை நடிகர் சரவணன் சொன்னதை அடுத்து அவரை உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு நீக்கினார்கள்.
ஆனால், இந்த சீசனில் பாலா எதை செய்தாலும் பிக்பாஸ் அவரை கண்டு கொள்வதில்லையே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு பட்டப்பெயர்களை வைத்து வருகிறார் பாலாஜி.
ஆரிக்கு அட்வைஸ் ஆரி, சனம்க்கு முந்திரிக்கொட்டை, வேல்முருகன்க்கு டிப்ளமேட்டிக், சோம்க்கு பப்பட் என ஒவ்வொருவருக்கும் பெயர் வைத்துள்ளார் பாலாஜி.
ஆனால் அவரை குழந்தை என அழைத்தால் மட்டும் ஏன் கோபப்படுகிறார்?
இதுபோல பல்வேறு கண்டனங்களை பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Did Balaji Murugadoss cross his limits ?








