ரஜினி விஜய் அஜித் பட பெயரில் ஹர்பஜன் சிங்கை வாழ்த்திய சுரேஷ் ரெய்னா

ரஜினி விஜய் அஜித் பட பெயரில் ஹர்பஜன் சிங்கை வாழ்த்திய சுரேஷ் ரெய்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் முதன்முறையாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

“பிரண்ட்ஷிப்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

ஹர்பஜன் சிங்கிற்கு நடிகர் சிம்பு குரல் கொடுத்திருக்கிறார்.

பிரண்ட்ஷிப் படம் நாளை செப்டம்பர் 17 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலிஸாக உள்ள நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன் சக நண்பருக்கு வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஜினி விஜய் அஜித் நடித்து வரும் படங்களின் பெயரை குறிப்பிட்டு அழகாக வாழ்த்தியுள்ளார். இதோ அவரின் பதிவு

பஜ்ஜி பா @harbhajan_singh என் அண்ணாத்த! #Friendship ட்ரைலர்,டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு
படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது.#FriendshipMovie டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க #FriendShipFromTomorrow https://t.co/du8UmVxhm0

Cricketer Suresh Raina wishes Friendship team

அருணாச்சலம் வைத்யநாதனுக்காக மீண்டும் இணையும் வெங்கட் பிரபு – சினேகா

அருணாச்சலம் வைத்யநாதனுக்காக மீண்டும் இணையும் வெங்கட் பிரபு – சினேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரசன்னா சினேகா காதலுக்கு பிள்ளையார் சுழி போட்ட ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் அருண் வைத்யநாதன்.

இவர் கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்.

மேலும் அர்ஜூன் நடித்த ‘நிபுணன்’ & மோகன்லால் நடித்த ‘பெருச்சாளி’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது அருணாச்சலம் வைத்யநாதன் என தன் பெயரை மாற்றியுள்ளார்.

இவர் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் புதிய படத்திற்கு ‘ஷாட் பூட் 3’ என பெயரிட்டுள்ளார்

இப்படத்தின் மூலம் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில் நடிகை சினேகாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஜோடியாக நடிக்கின்றனர்.

ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் நடிகை சினேகா நடித்திருக்கிறார்.

‘ஷாட் பூட் 3’ படத்தில் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

Venkat Prabhu Sneha joins for a new film

ஷாரூக்கான் & நயன்தாரா இணையும் படத்திற்கு மாஸான டைட்டில் வைத்த அட்லி

ஷாரூக்கான் & நயன்தாரா இணையும் படத்திற்கு மாஸான டைட்டில் வைத்த அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி, மெர்சல், பிகில் ஆகிய விஜய்யின் பேவரைட் படங்களை இயக்கியவர் அட்லீ.

கோலிவுட்டில் வெற்றிகளை அடுக்கி விட்டு தற்போது பாலிவுட்டில் பயணிக்கவுள்ளார்.

அட்லி இயக்கும் ஹிந்தி படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இவர்களுடன் பிரியாமணி, யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு LION ‘லயன்’ என தலைப்பு வைத்திருக்கிறார் அட்லி.

இது தொடர்பான ஒரு சூட்டிங் பர்மிசன் லெட்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Is the official title of #SRK – #Atlee film leaked online?

அசத்தும் அமுதவாணனின் ‘கோட்டா’..; உலகளவில் 100 விருதுகளை நெருங்குமா.?

அசத்தும் அமுதவாணனின் ‘கோட்டா’..; உலகளவில் 100 விருதுகளை நெருங்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அமுதவாணனின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் வெளியான ‘கோட்டா’ திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்தது.

அப்படம் வெளியான போது திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது.

மேலும் சிறந்த விமர்சனங்களையும் பெற்றிருந்தது.

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை சினிமா மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள பல பிரபலங்கள் வெளியிட்டிருந்தார்கள்.

அத்துடன் ‘கோட்டா’ திரைப்படத்தின் பயணம் நின்று விடவில்லை.

இன்றைய தேதி வரை சுமார் 64 சர்வதேச விருதுகளை குவித்துள்ளது.

இதன் பிறகும் இன்னும் பல விருதுகளை குவிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதில் முக்கிய விருதாக டொரன்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக விருதை வென்றுள்ளது.

இந்நிலையில், மேலும் 16 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

The Best Feature Film Audience Award from Toronto International Tamil Film Festival 2021 for the movie #QUOTA

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்.. – முதல்வர் முக ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்.. – முதல்வர் முக ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக. ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.

அப்போது விருதுகளை வழங்கினார்.

பெரியார் விருது – மிசா மதிவாணன்

அண்ணா விருது – எல்.மூக்கையா

கலைஞர் விருது – கும்மிடிப்பூண்டி வேணு

பேராசிரியர் விருது – முபாரக்

பாவேந்தர் விருது- வாசுகி ரமணன்

உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

முப்பெரும் விழாவில் முதலமைச்சர் முக. ஸ்டாலின் உரையாற்றினார்.

அதில் முக்கியமானவை..

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சி தான் என்கிற வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும்.

9 மாவட்டங்களில் வருகிற‌ ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதன்பிறகு வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றாக வேண்டும்.

கோட்டையில் கையெழுத்திட்டு அறிவிக்கப்படும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர உள்ளாட்சி நிர்வாகத்தில் திமுகவினர் இடம் பிடிப்பது முக்கியம்.

ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் பல நல்லத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இனி வருகிற ஒவ்வொரு மாதங்களிலும் திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த விழாவில் முரசொலி செல்வம் எழுதிய ‘முரசொலி – சில நினைவலைகள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது..

DMK rule should no longer be permanent says MK Stalin

JUST IN ஹோட்டல் 11PM வரை.. BAR 10PM வரை.; புதுச்சேரி காரைக்காலில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

JUST IN ஹோட்டல் 11PM வரை.. BAR 10PM வரை.; புதுச்சேரி காரைக்காலில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று செப்டம்பர் 15 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

இதேபோல் மதுக்கடைகள் மொத்தம் மற்றும் சில்லறை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

உணவகங்கள் மற்றும் மது அருந்தும் வசதியுடன் கூடிய உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

மேலும் கடற்கரை சாலைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்

இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கூடுதல் தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Lockdown extenstion in Pondy and Karaikkal

More Articles
Follows