தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவின் அண்மை நாடானஇலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா.
அங்கு பிரபலமாகி விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனால் தமிழக ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதனையடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரத் தொடங்கியது.
முதல் படமாக ஹர்பஜன் சிங், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் ஒப்பந்தமானார்.
இப்பட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஆரி அர்ஜூனா நடிக்கும் படத்தில் நாயகியாக கமிட்டானார்.
தற்போது லாஸ்லியாவின் மூன்றாவது படம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.
ராஜா சரவணன் இயக்கவுள்ள இந்தப படத்தில் பூரணேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.