தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படங்களை இயக்கியதால் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் இயக்குனர் ஷங்கருக்கு உண்டு.
லைகா தயாரிப்பில் கமல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2 ‘ படத்தை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.
தற்போது தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
மேலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் இயக்கவுள்ளார். இதில் விக்ரம் கேரக்டரில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இதில் முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி கிரிக்கெட் வீரர் தாமரை கண்ணன் கிரிக்கெட் பயிற்சி பெற்று வரும் 16 வயது மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்
இது குறித்து மாணவி கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்த போது அனுசரித்து செல் என்று கூறினார்களாம்.
எனவே புதுச்சேரி கிரிகெட் அணியின் தலைவரும் இயக்குனர் சங்கரின் மருமகனுமான ரோஹித் உட்பட 5 பேர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது தலைமறைவாக உள்ள ஐந்து பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Case filed against director Shankar’s son in law