டைரக்டர் ஷங்கர் மருமகன் உள்ளிட்ட ஐவர் மீது பாய்ந்தது போஸ்கோ சட்டம்

டைரக்டர் ஷங்கர் மருமகன் உள்ளிட்ட ஐவர் மீது பாய்ந்தது போஸ்கோ சட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படங்களை இயக்கியதால் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் இயக்குனர் ஷங்கருக்கு உண்டு.

லைகா தயாரிப்பில் கமல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2 ‘ படத்தை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

தற்போது தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

மேலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் இயக்கவுள்ளார். இதில் விக்ரம் கேரக்டரில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இதில் முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி கிரிக்கெட் வீரர் தாமரை கண்ணன் கிரிக்கெட் பயிற்சி பெற்று வரும் 16 வயது மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்

இது குறித்து மாணவி கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்த போது அனுசரித்து செல் என்று கூறினார்களாம்.

எனவே புதுச்சேரி கிரிகெட் அணியின் தலைவரும் இயக்குனர் சங்கரின் மருமகனுமான ரோஹித் உட்பட 5 பேர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள ஐந்து பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Case filed against director Shankar’s son in law

தீபாவளி ரேஸில் ‘அண்ணாத்த’ ‘ஜெய் பீம்’ ‘எனிமி’ உடன் இணைந்த ‘எம்ஜிஆர் மகன்’

தீபாவளி ரேஸில் ‘அண்ணாத்த’ ‘ஜெய் பீம்’ ‘எனிமி’ உடன் இணைந்த ‘எம்ஜிஆர் மகன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ & ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம்.

இவர் தற்போது இயக்கியுள்ள படம் ‘எம்ஜிஆர் மகன்’. இதில் சத்யராஜும், சசிகுமாரும் அப்பா, மகனாக நடித்துள்ளனர்.

சசிக்குமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் கடந்த ஆண்டே வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனாவால் தள்ளிப்போனது.

இந்த நிலையில், வரும் தீபாவளியையொட்டி, நவம்பர் 4 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இத கொஞ்சம் பாருங்க : ‘‘இணையதளத்தை பற்ற வைத்த சூர்யாவின் ‘பவர்’ சாங்

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் பொன்ராம்.

தீபாவளியையொட்டி சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘ஜெய் பீம்’ நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ‘அண்ணாத்த’ & ஆர்யா & விஷால் இணைந்துள்ள எனிமி படங்கள் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசாகிறது.

Sasi Kumar’s MGR Magan joins Diwali race

டாக்டர் டக்கரூ… அரண்மனை 3 அசத்தல்..; நெகட்டிவ் விமர்சனங்களை தூர வீசி மக்கள் ஆதரவுடன் வசூல் வேட்டை

டாக்டர் டக்கரூ… அரண்மனை 3 அசத்தல்..; நெகட்டிவ் விமர்சனங்களை தூர வீசி மக்கள் ஆதரவுடன் வசூல் வேட்டை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்டோபர் 9ல் ‘டாக்டர்’ திரைப்படமும் அக்டோபர் 14ல் ‘அரண்மனை 3’ திரைப்படமும் தியேட்டர்களில் ரிலீசானது.்

இந்தப் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களில் வந்து படம் பார்ப்பதால் தியேட்டர் உரிமையாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

‘டாக்டர்’ படத்தைத் தொடர்ந்து ‘அரண்மனை 3’ படமும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபகரமான படமாக அமைந்துள்ளது என்கின்றனர் தியேட்டர்கள் உரிமையாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள்.

ஆயுத பூஜை தினத்தன்று வெளியான ‘அரண்மனை 3’ படம் சுமார் 16 கோடி வரை வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘டாக்டர்’.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு, கிங்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க சுந்தர் சி இயக்கத்தில் உருவான படம் ‘அரண்மனை 3’.

C.சத்யா இசையமைத்துள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, மனோபாலா, சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேலா ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆனாலும் இந்த 2 திரைப்படங்களுக்கும் ஒரு சில விமர்சகர்களிடம் நெகட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் இருந்தாலும் மக்கள் ரசனையை வெல்லும் மந்திரம் இங்குண்டோ

Despite of negative reviews Doctor and Aranmanai 3 collected more

3 குரங்குகள் பொம்மை தெரியும்.; 4வது குரங்கு பொம்மை என்ன.? ‘மோகன்தாஸ்’ பட போஸ்டர் ட்விஸ்ட்

3 குரங்குகள் பொம்மை தெரியும்.; 4வது குரங்கு பொம்மை என்ன.? ‘மோகன்தாஸ்’ பட போஸ்டர் ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘மோகன்தாஸ்’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மோகன் தாஸ்’. ‘களவு’ என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் ‘மோகன்தாஸ்’ படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.

எடிட்டர் கிருபாகரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து படத்தின் தொகுப்பு மற்றும் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடையில் ‘மோகன் தாஸ்’ படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியாகி ஏராளமான பாராட்டுகளைக் குவித்த நிலையில், தற்போது ‘மோகன்தாஸ்’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் நாயகன் விஷ்ணு விஷால் புதிரான- அழுத்தமான- அர்த்தத்துடன் கூடிய சிரிப்புடன் இருக்க, அவரது கையில் ரத்தம் தோய்ந்த ஆயுதம் ஒன்றும் இருக்கிறது. அத்துடன் மூன்று குரங்குகள் பொம்மைகளாக தொங்கிக் கொண்டிருக்கிறது.

நான்காவதாக ஒரு குரங்கு வீழ்த்தப்பட்டுள்ளதைப் போல் அமைந்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

Vishnu Vishal Studioz, the makers of Vishnu Vishal’s upcoming film Mohandas, have now launched the second look poster of the film.

‘ஜெய் பீம்’ பட ட்ரைலர் ரிலீஸ் தேதி அப்டேட் கொடுத்த சூர்யா

‘ஜெய் பீம்’ பட ட்ரைலர் ரிலீஸ் தேதி அப்டேட் கொடுத்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’ படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட படம் ஜெய் பீம்.

சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசனின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது.

சமூக அநீதியும், மனிதர்களின் மிருகத்தன்மையும் இந்த அப்பாவி உயிர்களை பலிகடா செய்கிறது. வழக்கறிஞர் சந்துரு (சூர்யா) இவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராட வருகிறார்.

விறுவிறுப்பான, மிகத் தீவிரமான ஒரு கதைக்கரு மனதைப் பிசையும், அதே சமயம் நெகிழவும் செய்யும் ஒரு களத்தில் சொல்லப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை நடிகர் சூர்யா மிக நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

இப்பட டீசர் அண்மையில் ரிலீசாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த டீசரில்… “எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடன்ங்க இருக்காங்க….

நாம போலீசை எதிர்த்து வழக்கு போடவில்லை… நம்ம அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு போடுறோம்” என சூர்யா பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது.

ஜெய் பீம் திரைப்படத்தின் இணைதயாரிப்பை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கவனிக்க, ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர், படத்தொகுப்பு ஃபிலோமின் ராஜ், கலை இயக்கம் கதிர்.

இந்த நிலையில் சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர், அக்டோபர் 22 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான போஸ்டரில் கூட்டத்தில் தனியாளாக உயர்ந்து நிற்கும் சூர்யாவின் சக்திவாய்ந்த தோற்றத்தை இந்தப் புதிய போஸ்டர் காட்டுகிறது.

நவம்பர் 2ஆம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜெய் பீம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது

Suriyas Jai Bhim Trailer to be out on October 22

‘தர்மதுரை 2’ படத்திற்கு வாழ்த்துக்கள்.. ஆனா எனக்கு சம்பந்தமில்லை.. – சீனுராமசாமி

‘தர்மதுரை 2’ படத்திற்கு வாழ்த்துக்கள்.. ஆனா எனக்கு சம்பந்தமில்லை.. – சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் ஆகியோர நடிப்பில் வெளியான படம் ‘தர்மதுரை’.

யுவன் இசையமைத்த இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். கடந்த 2016ல் இப்படம் வெளியானது.

பெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இதன் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இதுபற்றி சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்…

“தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. வாழ்த்துக்கள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல.

ஆகவே அது சம்பந்தமான விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்” என கூறியுள்ளார்.

Director Seenu Ramasamy about Dharma Durai 2

More Articles
Follows