மீண்டும் விக்ரமுடன் இணைந்தார் பாபி சிம்ஹா.; வழக்கம்போல கார்த்திக் சுப்பராஜ் காம்பினேசன்

மீண்டும் விக்ரமுடன் இணைந்தார் பாபி சிம்ஹா.; வழக்கம்போல கார்த்திக் சுப்பராஜ் காம்பினேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் & அவரது மகன் துருவ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘சீயான் 60’ என அழைக்கின்றனர்.

இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

லலித் குமார் தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு இன்று மார்ச் 10 முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணி புரியவுள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹாவும் தற்போது இணைந்துள்ளார்.

இதற்கு முன்பு ‘சாமி 2’ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்திருந்தார் பாபி சிம்ஹா.

கார்த்திக் சுப்பராஜின் அபிமான ஆஸ்தான நடிகர்களில் ஒருவர் தான் பாபி சிம்ஹா.

கா.சு இயக்கிய ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’ உள்ளிட்ட பட படங்களில் பாபி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bobby Simha joins the gang Chiyaan 60

Breaking மநீம வேட்பாளர்கள் : கோவை தெற்கு கமல்.. தி.நகரில் பழ.கருப்பையா.. மயிலாப்பூரில் ஸ்ரீபிரியா போட்டி

Breaking மநீம வேட்பாளர்கள் : கோவை தெற்கு கமல்.. தி.நகரில் பழ.கருப்பையா.. மயிலாப்பூரில் ஸ்ரீபிரியா போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்குகிறார் கமல்ஹாசன்.

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் கோவை தெற்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் தி.நகர் தொகுதியில் பழ.கருப்பையா போட்டி, மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீபிரியா போட்டி.

Kamal Haasan to contest in Assembly polls from this constituency

‘பேராண்மை’ இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கவலைக்கிடம்..; வதந்திகள் பரப்ப வேண்டாம் என அமீர் வேண்டுகோள்

‘பேராண்மை’ இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கவலைக்கிடம்..; வதந்திகள் பரப்ப வேண்டாம் என அமீர் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இயற்கை’, ‘ பேராண்மை’, ‘ ஈ’, ‘பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என தரமான படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.

இவர் ஒரு கம்யூனிச சிந்தனையாளர்.

தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ படத்தை இயக்கி வருகிறார் ஜனநாதன்.

இந்த படத்தில் விவசாயம் மற்றும் கார்ப்பரேட் அரசியல் குறித்து அலசியிருக்கிறார்.

பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் லாபம் படத்தை ஜனநாதன் இயக்கி வருகிறார்.

அவரது அன்பிற்காக, தன் நண்பருடன் சேர்ந்து ‘லாபம்’ படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார் எஸ்பி. ஜனநாதன்.

இதனையடுத்து அவரது உதவி இயக்குனர்கள் அவரை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மூளைக்குசெல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்.

தற்போது ICUவில் ஜனநாதன் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.

அவரை நடிகர் விஜய்சேதுபதி நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இதனிடையில் அவரை பற்றி வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இது குறித்து இயக்குனரும் நடிகருமான அமீர் கூறியதாவது….

“அன்பும் அறிவும் நிறைந்த அண்ணன் இயக்குநர் SP ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எனவே உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
அமீர்

Ameer requests to avoid rumours on Director SP Jananathan’s health

‘மன்மதன்’ சிம்பு மீண்டும் வருகிறார்..; டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ்.

‘மன்மதன்’ சிம்பு மீண்டும் வருகிறார்..; டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் டி.ஆர். & ஜோதிகா இணைந்து நடித்து பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று ‘மன்மதன்.’

2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் இன்று முதல் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

படத்தை நந்தினி தேவி ஃபிலிம்ஸ் தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களில் வெளியிடுகிறது!

‘மன்மதன்’ சிலம்பரசன் டி.ஆர் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம், யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அத்தனையும் தாறுமாறான வரவேற்பு பெற்ற படம், சிலம்பரசனின் பரபரப்பான கதைக்காகவும் விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும் ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்ட படம்.

சிலம்பரசன் டி.ஆர் உடன் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் என பலரும் நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்தார்.

மன்மதன் மீண்டும் ரிலீஸாகவிருப்பது சிலம்பரசன் டி.ஆர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைக்கும் என நம்பலாம்..

STR’s Block Buster Hit Manmadhan is back again in theatres

JUST IN புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்; – ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

JUST IN புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்; – ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டில் மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.

மேலும் இந்த கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிச் செல்லவில்லை.

9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன

தமிழகத்தில் 1 முதல் 11 வகுப்பு வரை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து புதுவையில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான ஆணையை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டார்.

அதில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.

10, 11்ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி.

12ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும்.

அது போல் மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் கேரளா & ஆந்திரா விதிகளுக்குட்பட்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1st std to 9th Std Students all pass in Puducherry state

விஜய் ஆண்டனி ரியல் லைப் ஹீரோ..; ‘கோடியில் ஒருவன்’ நாயகி ஆத்மிகா டபுள் ஹாப்பி

விஜய் ஆண்டனி ரியல் லைப் ஹீரோ..; ‘கோடியில் ஒருவன்’ நாயகி ஆத்மிகா டபுள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் ‘கோடியில் ஒருவன்’.

ஆத்மிகா நாயகியாக நடித்துள்ளார்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, ஒளிப்பதிவினை என்.எஸ்.உதயகுமார் கவனித்துள்ளார்.

இந்த படத்தின் எடிட்டிங்கை விஜய் ஆண்டனியே கவனித்துள்ளார்.

இப்படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

விஜய் ஆண்டனி…

”கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார்.

எதிர்காலத்திலும் அவருடன் பணிபுரிவேன்.

ஆத்மிகா திறமையான நடிகை. அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.

நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது.

இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது” என்றார்.

ஆனந்த் கிருஷ்ணன்…

‘மெட்ரோ படத்தை பார்த்து எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார் விஜய் ஆண்டனி.

கோடியில் ஒருவன் படத்தில் ஆண்டனி டியூசன் மாஸ்டராக நடித்துள்ளார்.

இந்த அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினையை மாற்றும் கேரக்டரில் நடித்துள்ளார்.” என்றார்.

ஆத்மிகா…

”கொரோன காலத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த தருணமே படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும், தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க வந்தார்.

அவர் ஒரு ரியல் லைப் ஹீரோ. இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

தனஞ்செயன் கூறுகையில்…

”கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது.

ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குனர். இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்”

இவ்வாறு கலைஞர்கள் (படக்குழுவினர்) பேசினர்.

Actress Aathmika praises vijay antony

More Articles
Follows