கவின் இயக்கத்தில் ‘பிக்பாஸ்’ முகேன் & மீனாக்‌ஷி இணையும் ‘வேலன்’

கவின் இயக்கத்தில் ‘பிக்பாஸ்’ முகேன் & மீனாக்‌ஷி இணையும் ‘வேலன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் நெஞ்சங்களை, மொத்தமாக கொள்ளையடித்த முகேன் நடிப்பில், தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் Skyman Films International நிறுவனம் சார்பில் “வேலன்” எனும் அழகான ரொமான்ஸ் காமெடி படத்தினை தயாரிக்கிறார்.

இயக்குநர் கவின் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.

கலைமகன் முபாரக் Skyman Films International நிறுவனம் சார்பில் “வேலன்” படத்தினை மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கி வருகிறார்.

Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறியதாவது…

குடும்பமாக இணைந்து பார்க்கும், அழகான படங்களை உருவாக்குவதே எனது குறிக்கோள்.

குடும்பங்களை இணைக்கும் எந்த விதமான கதைகளும் சிறப்பானதாகவே இருக்கும். இன்றைய உலகில் குடும்பங்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, நேர்மறை அம்சங்களை சொல்ல வேண்டியது நமது கடமை.

அறிமுக இயக்குநர் கவின் பிரபல இயக்குநர் சிவாவின் குழுவிலிருந்து வந்துள்ளார். அவரிடம் கற்ற வித்தை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது.

இளமை துள்ளலுடன் இருக்கிறார் நடிகர் முகேன். அது அவரது நடிப்பிலும் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.

அழகான தேவதை நடிகை மீனாக்‌ஷி.

பிரபு அவர்களும் சூரி அவர்களும் மிகுந்த ஒத்துழைப்பினை நல்கியுள்ளார்கள். அனுபவம் வாய்ந்தவர்களுடனும், இளம் திறமைகளுடனும் இணைந்து வேலை செய்யும் இந்த வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியினை தந்துள்ளது.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் முடிந்த நிலையில், தற்போது பொள்ளாச்சி பகுதிகளில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

படக்குழுவினர் அயராத உழைப்பினை தந்து வருகின்றனர். படத்தினை வரும் கோடை காலத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.

இப்படத்தில் பிக்பாஸ் முகேன் நாயகனாகவும், மீனாக்‌ஷி
நாயகியாகவும் நடிக்கிறார்கள்.

பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் கவின் எழுதி இயக்க, பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, சண்டைப்பயிற்சி மகேஷ் மேத்யூ செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு முறைகளை, முறையாக கடைப்பிடித்து, பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் பற்றிய அறிவிப்புகள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Bigg Boss Mugen next film details

Mugen Velan (1)

விக்ரம் மகன் பாணியில் விஜய் மகனும் ரீமேக்கில் அறிமுகம்..?.; விஜய்சேதுபதியின் ‘மாஸ்டர்’ ப்ளான்

விக்ரம் மகன் பாணியில் விஜய் மகனும் ரீமேக்கில் அறிமுகம்..?.; விஜய்சேதுபதியின் ‘மாஸ்டர்’ ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு பாடலுக்கு ஆடி நடித்திருந்தார்.

அதன் பின்னர் வெளிநாட்டில் படிக்க சென்ற அவர் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமா தொடர்பான படிப்பையும் மேற்க்கொண்டு வருகிறார் சஞ்சய்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான உப்பெனா தெலுங்கு பட தமிழ் ரீமேக்கில் சஞ்சய் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் (தெலுங்கில்) விஜய்சேதுபதி வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இப்பட தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம் விஜய்சேதுபதி.

எனவே இப்படத்தை தமிழில் தயாரித்து இதிலும் மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான (தெலுங்கு) அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ படத்தில் தான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay son to debut as hero in this remake ?

vijay sethupathi uppena (2)

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாகும் ரஜினி பட வில்லன்

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாகும் ரஜினி பட வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘டாக்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் என்பவர் தான் விஜய்யின் ‘தளபதி65’ படத்தை இயக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த 2020 டிசம்பரில் இதற்கான அறிவிப்பும் வெளியானது.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என கூறப்படுகிறது.

ஆனால் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.

‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் (விஜய்சேதுபதியின் தந்தையாக) நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini film actor to play antogonist in Thalapathy 65

nawazuddin siddiqui petta

ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் கொடுத்த ‘எரும சாணி’ ஹரிஜா..; என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் கொடுத்த ‘எரும சாணி’ ஹரிஜா..; என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘எரும சாணி’ டியூப்பில் பிரபலமானவர் ஹரிஜா.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் கோவையில் செட்டிலானவர்.

எரும சாணி சேனலில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து பல வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

இவருடன் சில குறும்படங்களில் நடித்த அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஹரிஜா.

திருமணத்திற்கு பின்னரும் நடித்து வந்தார்.

மேலும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஹரிஜாவுக்கு அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Eruma Saani fame Harija announces pregnancy

eruma saani harija

மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரீ கொடுக்கும் ‘கருவாப்பையா’ பாடல் புகழ் கார்த்திகா

மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரீ கொடுக்கும் ‘கருவாப்பையா’ பாடல் புகழ் கார்த்திகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthika (2)‘தூத்துக்குடி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா.

அப்படத்தில் இடம்பெற்ற ‘கருவாப்பையா’ என்ற பாடல் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

சில வருடங்கள் திரையுலகை விட்டு ஒதுங்கிய கார்த்திகா தற்போது மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறாராம்.

இதுபற்றி கார்த்திகா கூறியதாவது…

“தமிழில் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், திடீரென தங்கையின் படிப்புக்காக மும்பை சென்று தங்க வேண்டிய சூழல் உருவானது.

மீண்டும் சென்னை வந்தபோது…இத்தனை நாளாக எங்கே சென்றீர்கள்..? நீங்கள் ஏன் மீண்டும் நடிக்கக் கூடாது? என தவறாமல் கேட்டனர்.

உடன் இருந்த உறவினர்கள் கூட, உன்னை எவ்வளவு பேர் மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதற்காகவாவது மீண்டும் நீ நடிக்கவேண்டும் என்றனர்

ரசிகர்களின் அன்பை இவ்வளவு நாள் நான் மிஸ் பண்ணியிருக்கிறேன் என புரிந்தது.

அப்போது தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.

இதுதான் சரியான தருணம் என அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இன்னும் 2 தெலுங்கு படங்களிலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது.

அதேபோல இங்கே தமிழிலும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இனி வெள்ளித்திரையில் என்னை அடிக்கடி நீங்கள் பார்க்கலாம்” என்றார் கார்த்திகா.

Thoothukudi fame Karthika re entry in films

ரூ 65 லட்சம் கடனுக்கு ரஜினியை இழுத்து விட்ட தனுஷ் தந்தை கஸ்துாரி ராஜா..; ஐகோர்ட் எச்சரிக்கை

ரூ 65 லட்சம் கடனுக்கு ரஜினியை இழுத்து விட்ட தனுஷ் தந்தை கஸ்துாரி ராஜா..; ஐகோர்ட் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ம் ஆண்டில் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் நடிகர் தனுஷின் தந்தை கஸ்துாரி ராஜா 2 தவணைகளில் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

அப்போது 2 புரோ நோட்டுகளையும் எழுதிக் கொடுத்திருந்தார்.

கடனைத் முகுந்த் சந்த் திருப்பி கேட்டபோது கஸ்தூரி ராஜா கொடுக்கவில்லை. இழுத்தடித்துள்ளார்

ஒரு கட்டத்தில், கடன் தொகையை தான் தரவில்லை என்றால் சம்பந்தியான ரஜினி தருவார் எனவும் போத்ராவுக்கு கஸ்தூரி ராஜா கடிதம் கொடுத்துள்ளார்.

அதன் பிறகும் பணம் கொடுக்காததால், போத்ரா தரப்பில், 2016ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில், கஸ்தூரி ராஜா வாங்கிய கடனுக்கு தான் பொறுப்பாக முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்டார் நீதிபதி.

எனவே முகுந்த்சந்த் போத்ரா சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து முகுந்த்சந்த் போத்ரா இறந்து விட்டடார். இவ்வழக்கை தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்தது.

இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என கஸ்தூரிராஜா தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் பணத்தை திருப்பி தருவது தொடர்பாக கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், நடிகர் ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும் எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

தீ்ர்வுகாண முடியாவிட்டால், வழக்கை விசாரித்து, தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்பின்னர் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

High court warns Dhanush father Kasthuri Raja

rajini kasthuri raja

More Articles
Follows