முதன்முறையாக போலீஸாகும் ‘பிக்பாஸ்’ ஆரி..; வித்யா பிரதீப்புக்கு ஜோடியாகிறார்.!

முதன்முறையாக போலீஸாகும் ‘பிக்பாஸ்’ ஆரி..; வித்யா பிரதீப்புக்கு ஜோடியாகிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vidya Pradeepபிக்பாஸ் 4 வின்னர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்குகின்றார் அறிமுக இயக்குனர் அபின்.

முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் ஆரி அர்ஜுனன்

ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதிப் கதாநாயகியாகவும் நடிக்கும் இன்வெஸ்ட்டிகேசன் க்ரைம், கமர்சியல் த்ரில்லராக புதிய படம் உருவாகி , சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க விரைவில் வருகின்றது.

பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து வந்த ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா
மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி முதன்முறையாக தமிழில் திரைப்படம் ஒன்றை இணைந்து தயாரிக்கின்றது.

வெளிநாடுகளில் கடந்த 10 வருடங்களாக படத்தொகுப்பாளராகவும், இந்தியாவில்
செலிபிரிட்டி போட்டோகிராபராக வலம் வந்துகொண்டிருந்த அபின் தனது அடுத்தகட்ட பயணமாக கதை, திரைக்கதை, வசனம், எழுதி இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராகவும், மாயா, நெடுஞ்சாலை, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதீப் கதாநாயகியாகவும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் முனிஷ்காந்த் உட்பட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

முதல் முறையாக ஒரு காப் ஸ்டோரி script பன்றதுல ஆரி அர்ஜுனன் தன்னுடைய சந்தோஷத்தை தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களாக மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

அறிமுக இயக்குனர் அபின் மீது எல்லையில்லா அன்பும் கதையின் கருவில் உள்ள சுவாரசியத்திற்காகவும் பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டு
தமிழில் பல வெள்ளி விழா சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆர்.சுந்தரராஜன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்தியா இப்படத்தின் இசையமைப்பாளராகவும்,
பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியின்
ஆயிரத்தில் ஒருவன், வேலைக்காரன், தனி ஒருவன் இரண்டாம் உலகம் ஆகிய படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிவி கார்த்திக் ஒளிப்பதிவாளராகவும்,
நயன்தாரா நடித்த நெற்றிகண் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய கமலநாதன் இப்படத்தில் கலை இயக்குனராகவும், தளபதி விஜயின் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் வரிகள் மூலம் உலக தமிழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த புகழ்பெற்ற பிரபல பாடலாசிரியர் விவேக் பாடலாசிராயராகவும் மற்றும் படத்தொகுப்பாளராக அருள் சித்தார்த், சண்டை பயிற்சி இயக்குனராக சக்தி சரவணன் மற்றும் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் சினிமாவின்
நிர்வாக தயாரிப்பாளராகவுள்ள விசுவநாதன் இத்திரைப்படத்தின்
நிர்வாக தயாரிப்பாளராகவும், 25 ஆண்டு காலமாக சிறந்த சினிமா பிஆர்ஓவாக வலம் வரும் நிகில் முருகன் இப்படத்திற்கு பிஆர்ஓ_வாக உள்ளனர்.

தயாரிப்பு:

ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா
மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி

கதை-திரைக்கதை-வசனம்- இயக்கம் – அபின்

Bigg Boss 4 Winner Aari is playing cop role for the first time.

குஷ்பூவின் சாதாரண நாளை ஸ்பெஷல் நாளாக மாற்றிய விஜய்சேதுபதி

குஷ்பூவின் சாதாரண நாளை ஸ்பெஷல் நாளாக மாற்றிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushboo Vijay Sethupathiகை விரல்களை விட அதிக எண்ணிக்கையில் தமிழ் படங்களை கைவசம் வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி.

மேலும் மலையாளம் தெலுங்கு & ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

மும்பைக்கார் என்ற ஹிந்தி படத்தில் நடிக்க மும்பை சென்றிருக்கிறார் விஜய்சேதுபதி.

அங்கு நடிகையும் பா.ஜனதா செய்தி தொடர்பாளருமான குஷ்புவை சந்தித்துள்ளார்.

விஜய்சேதுபதியை சந்தித்த புகைப்படங்களை குஷ்பு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில்… ‘மதிய உணவு சாப்பிட வந்தார் விஜய்சேதுபதி. நிறைய பேசினோம். சாதாரண நாளை ஸ்பெஷலாக மாற்றிய விஜய்சேதுபதிக்கு நன்றி’ என புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

Actress Khushboo treat to Vijay Sethupathi

எங்க வேணாலும் போங்க… ஆனா மறந்துடாதீங்க… ரஜினி ரசிகர்களுக்கு மக்கள் மன்றம் திடீர் அறிக்கை

எங்க வேணாலும் போங்க… ஆனா மறந்துடாதீங்க… ரஜினி ரசிகர்களுக்கு மக்கள் மன்றம் திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini makkal mandram25 ஆண்டுகளாக பல யூகங்கள் வந்தாலும் 2017 டிசம்பர் 31ல் தான் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

2020 ஆண்டு மாதங்களில் அரசியல் அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கினார் ரஜினி.

இத்துடன் கட்சிப் பணிகளையும் மும்முரமாக தொடங்கினார்.

ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி தன் உடல்நிலை காரணத்தால் அரசியலில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார்.

இதனால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி மக்கள் மன்றத்தினர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஆனால் ரஜினி தனது முடிவை மாற்ற போவதில்லை என அறிக்கை வெளியிட்டார்.

இது போன்று போராட்டங்களை நடத்தி, தன்னை வேதனைக்குள்ளாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார் ரஜினி.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அவருடன் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா செய்துவிட்டு, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று பச்சை கொடி காட்டியுள்ளது.

அதே சமயம் ரஜினி ரசிகர்கள் என்பதை எப்போதும் மறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Join any party as you like – RMM

ஆரியின் வெற்றி முகம்… பாலாஜியின் உண்மை முகம்..; ‘பிக்பாஸ்’ ரிசல்ட் குறித்து சேரன் கருத்து

ஆரியின் வெற்றி முகம்… பாலாஜியின் உண்மை முகம்..; ‘பிக்பாஸ்’ ரிசல்ட் குறித்து சேரன் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 106 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நேற்றோடு முடிவடைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பிக்பாஸ் சீசன் 4 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் ஆரி. பாலாஜி ரன்னராக அறிவிக்கப்பட்டார்

ஆரியின் வெற்றியை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்

இந்த வெற்றிகள் குறித்து முன்னாள் போட்டியாளர் நடிகர் இயக்குனர் சேரன் தன் ட்விட்டரில் கூறியதாவது…

“ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்பப்பிள்ளைகளின் வெற்றி. ஒவ்வொரு சமூகப் பொறுப்பாளனின், நேர்மையான மனிதர்களின் வெற்றி. உங்களின் வெற்றியால் ஒவ்வொரு கடின உழைப்பாளியும் பெருமை கொள்கிறான்.. வாழ்த்துக்கள் ஆரி அர்ஜுனன்.
#AariBB4TitleWinner
#AariArjunan https://t.co/r6gP477Rzo

BBல் runner ஆக வெற்றிபெற்று இரண்டாம் இடத்தை பெற்ற பாலாஜியின் உண்மைமுகமும் எதையும் சுலபமாக கடந்துசென்று தன்னை மாற்றிக்கொள்ளும் குணமும் கவர்ந்தது.. கண்டிப்பாக பக்குவப்படப்பட வாழ்க்கையில் உயர்வார்.. வாழ்த்துக்கள் பாலாஜி.
#BalajiMurugaDoss
#BBTamilSeason4 https://t.co/4xVqUAOstr

Director Cheran about Bigg Boss 4 winner and runner
cheran

மீண்டும் உண்மைச் சம்பவத்தை படமாக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ இயக்குனர்..; நாயகன் யார் தெரியுமா?

மீண்டும் உண்மைச் சம்பவத்தை படமாக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ இயக்குனர்..; நாயகன் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasi Kumarஉண்மைச் சம்பவத்தை ‘க/பெ ரணசிங்கம்’ என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் விருமாண்டி. அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள்.

அதற்குப் பிறகுத் தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான்.

தற்போது பல்வேறு முன்னணி நாயகர்கள் படங்களின் வசூலைக் கொண்டாடி வருகிறோம். அதற்கு எல்லாம் முன்னோட்டமாக 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் விருமாண்டி.

இந்தக் கதையைக் கேட்டவுடனே, நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் சசிகுமார்.

ஏப்ரலிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.விஸ்வநாதன் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதற்கான அலுவலக பூஜை இன்று நடைபெற்றது.

இந்தப் படத்துக்குப் பாடலாசிரியராக வைரமுத்து, ஒளிப்பதிவாளராக என்.கே.ஏகாம்பரம், எடிட்டராக டி.சிவாநாதீஸ்வரன், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிகிறார்கள். உண்மைச் சம்பவங்கள் என்றால் தத்ரூபமாகப் படமாக்க வேண்டும்.

அதற்குத் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தால் சாத்தியப்படுத்தி விடலாம். இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலைப் பார்த்தாலே, இதன் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்பது தெளிவாகிறது.

ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கி, இந்த ஆண்டு முடிவுக்குள் படத்தை வெளிக்கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

KaPaeRanaSingam direcror Virumandi’s next film announced

கிரிக்கெட் விளையாட ‘திடல்’ தேடி அலையும் 5 ஹீரோக்கள்

கிரிக்கெட் விளையாட ‘திடல்’ தேடி அலையும் 5 ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thidal first lookகிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கும் ‘திடல் ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘ராட்சசன்’ ராம்குமார் வெளியிட்டார்.

இப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் எஸ்.கே.எஸ்.கார்த்திக் கண்ணன்.
இவர் இயக்குநர் முகி மூர்த்தி, முத்து செல்வன், செல்வா போன்றவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

மேலும் பல படங்களில் பணியாற்றியவர். ஏராளமான குறும்படங்கள் எடுத்தவர். ஒரு ஷார்ட் பிலிம் மேக்கராக பரவலாக அறியப்பட்ட இவர், தனது குறும்படங்களுக்காக 7 விருதுகளை பெற்றிருப்பவர்.

இந்தத் ‘திடல்’ , ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் பற்றிய கதை.

முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த கிராமத்துச் சிறுவர்கள் வளர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்கள். ஊரில் உள்ள சிலர் அவங்களை இங்கு விளையாடக்கூடாது என்று அசிங்கப்படுத்துகிறார்கள்.

அவர்கள பக்கத்து ஊர்களுக்குப் போய் விளையாட. அங்கும் புறக்கணிக்கப்படுகிறார்கள். தங்களுக்கான ஒரு திடலை அடைந்தே தீருவது என்று அவர்கள் எண்ணம் கிரவுண்ட் கிடைத்ததா இல்லையா என்பது தான் முடிவு.

இப்படத்தில் பிரபு, அன்பு, சாகுல், யோகேஷ் , கர்ணா என 5 நாயகர்கள் அறிமுகமாகிறார்கள்.

மற்றும் முக்கியமான திருப்புமுனைக் கதாபாத்திரத்தில் வினோதினி நடித்திருக்கிறார்.

முக்கிய பாத்திரத்திரங்களில் ராட்சசன் கிரிஸ்டோபர், சரண்யா ரவிசந்திரன் ஆகியோர் நடித்துள்ளார்கள் .

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சேகர்ராம், ஜெரால்டு , இசை ஸ்ரீசாய் தேவ். வி. இவர் தெலுங்கில் மூன்று படங்கள் கன்னடம் 2 தமிழ் 4 படங்களுக்கு இசையமைத்து உள்ளவர்.

எடிட்டிங் ரோஜர் .கலை – சிவா. நடனம்-ஜாய் மதி, ஸ்டண்ட்- ஓம் பிரகாஷ்.

இப்படத்தின் கதையை எழுதி முக்கிய பாத்திரத்தில் நடித்தது தனது கிரவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் P. பிரபாகரன்.

‘திடல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராட்சசன் ராம்குமார் படத்தை பற்றி விசாரித்துப் பாராட்டியிருக்கிறார் .

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Ratchasan christopher next film is titled Thidal

More Articles
Follows