அரசியலில் ரஜினி-கமல்; யாருக்கு ஆதரவு..? பாரதிராஜா பதில்

அரசியலில் ரஜினி-கமல்; யாருக்கு ஆதரவு..? பாரதிராஜா பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor bharathi rajaஇயக்குனர் இமயம் பாரதிராஜா விரைவில் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.

எனவே சில பகுதிகளை பார்வையிட புதுச்சேரி சென்றார்

அதன்பின்னர் முதல்வர் நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…

ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருகின்றனர்.

அவர்களுக்கு கடைசி காலத்தில் நாட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம். அதான் அவர்கள் வந்திருக்கிறார்கள்.

அவர்கள் கட்சி ஆரம்பித்து தங்கள் கொள்கைகளை அறிவித்த பிறகு யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிப்பேன்.

நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன்’ என்று பேசினார்.

மக்களை சாகடிக்கக் கூடாது; வெற்றியின் ரகசியம் சொல்லும் விஜய்சேதுபதி

மக்களை சாகடிக்கக் கூடாது; வெற்றியின் ரகசியம் சொல்லும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கவுதம் கார்த்தி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை 7சி எண்டர்டையின்மன்ட் மற்றும் அம்மா நாராயணா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியல் விஜய்சேதுபதி கலந்துக் கொண்டார்.

அப்போது அவரிடம் எப்படி வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள்? என கேட்டுள்ளனர்.

அதற்கு விஜய்சேதுபதி கூறியதாவது…

‘தமிழக மக்களை பலரும் பல வகையில் சாகடிக்கிறார்கள். நாம் அவர்களை தியேட்டருக்கு வரவழைத்து சாகடிக்கக் கூடாது என நினைத்து கதைகளைத் செலக்ட் செய்கிறேன்.

ஒரு இயக்குனர் கதை சொல்ல வரும்போதே அவரின் கேரக்டர்களை தெரிந்துக் கொள்வேன்.

அவரின் குணம் பிடிக்கவில்லை என்றால் அவருடன் பல மாதங்கள் பணி புரிய முடியாது.

சில நண்பர்கள் கதை சொன்னால் அது பிடிக்கவில்லை என்றாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

என்னால் எந்த தயாரிப்பாளரும் பாதிக்கப்படக்கூடாது.

நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படியோ, அப்படித்தான் கதைகள் அமைவதும். சினிமா என்பது மக்களுக்கானது” என விஜய்சேதுபதி கூறினார்.

கமலுக்கு பிப்ரவரி 21; அஜித்துக்கு பிப்ரவரி 22… காத்திருக்கும் ரசிகர்கள்

கமலுக்கு பிப்ரவரி 21; அஜித்துக்கு பிப்ரவரி 22… காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Feb 21st for Kamal and Feb 22nd for Ajithகமல் தன் அரசியல் பயணத்தை பிப்ரவரி 21ஆம் தேதி ராமநாதபுரத்தில் ஆரம்பிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

தற்போது அஜித்தின் விசுவாசம் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என முன்பே தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கவிருக்கிறார்களாம்.

தொடங்கியது முதல் ஒரே கட்டமாக சூட்டிங்கை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

இப்படத்திற்கு யுவன் இசையமைப்பார் என கூறப்பட்டது.

தற்போது அவர் விலகியுள்ள நிலையில் பிரபலமான மற்றொருவர் இசையமைப்பார் என கூறப்படுகிறது.

Feb 21st for Kamal and Feb 22nd for Ajith

பரபரப்பான பாம்பன் பர்ஸ்ட் லுக்; சரத்குமார்-வெங்கடேஷ் மீண்டும் கூட்டணி

பரபரப்பான பாம்பன் பர்ஸ்ட் லுக்; சரத்குமார்-வெங்கடேஷ் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumars Paamban first look goes viralமகாபிரபு,ஏய், சாணக்கியா, சண்டமாருதம் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் ஏ. வெங்கடேசும், சரத்குமாரும் மீண்டும் இணைந்து உள்ளனர்.

அந்த படத்திற்கு பாம்பன் என பெயரிடப்பட்டு உள்ளது.

‘பாம்பன்’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மேலாடை இல்லாமல் பாம்பு உடையுடன் சரத்குமார் தோன்றியுள்ளார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

தற்போது சரத்குமார் மகேஷ்பாபு அய்ரா அத்வானி நடிக்கும் பாரத் அனே நினூ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மகேஷ்பாபு தந்தையாக சரத்குமார் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sarathkumars Paamban first look goes viral

paamban 1

மீண்டும் விஸ்வரூபம்2.. டப்பிங் பணிகளில் பிஸியானார் கமல்

மீண்டும் விஸ்வரூபம்2.. டப்பிங் பணிகளில் பிஸியானார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasnஒரு பக்கம் தன் ரசிகர்களுடன் அரசியல் ஆலோசனை என பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் தன் பட வேலைகளையும் கவனித்து வருகிறார் கமல்ஹாசன்.

இவர் இயக்கி, தயாரித்து நடிக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டது.

இப்படத்தில் கமலுடன் ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜாகுமார், சேகர் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சனு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தற்போது இதன் டப்பிங் வேலைகளை துவங்கி விட்டார் கமல்.

விஸ்வரூபம் 2 பணிகளை முடித்து விட்டு ‘சபாஷ் நாயுடு’ பட வேலைகளை துவங்விருக்கிறாராம்.

இதனையடுத்து ஷங்கரின் ‘இந்தியன்-2’ படத்தில் நடிப்பார் கமல்ஹாசன்.

டாப் ஹீரோயின்ஸ் உடன் டூயட் பாட ஆசைப்படும் சண்முகபாண்டியன்

டாப் ஹீரோயின்ஸ் உடன் டூயட் பாட ஆசைப்படும் சண்முகபாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanmuga pandianமதுரவீரன் படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு பற்றிய எத்தனையோ படம் வந்திருந்தாலும் முழுமையாக ஜல்லிக்கட்டை பற்றி பேசாது.

படத்தின் முதல் பாதியில் ஜல்லிக்கட்டு பற்றி இருந்தாலும் இரண்டாவது பாதியில் வரும் கதை ஹீரோவின் பெர்சனல் வாழ்கையில் உள்ள பிரச்சனை நோக்கி நகர தொடங்கும் அதிலிருந்து ஹீரோ வில்லன் சண்டை காட்சிகள் நோக்கி சென்றுவிடும்.

படம் முழுவதும் ஜல்லிக்கட்டு பற்றி இருக்காது. ஆனால் மதுரவீரன் படத்தின் தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை ஜல்லிக்கட்டு பற்றிய கதை இருக்கும். படத்தில் பாடல்கள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் ஜல்லிக்கட்டை விட்டு கதை வெளியே செல்லாது.

இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி மெரீனாவில் நடைபெற்ற போராட்டம் மூலம் நன்றாக தெரிந்துள்ளது. ஆனால் மதுரவீரன் படத்தின் மூலமாக இன்னும் அதிகமான விஷயங்களை கொண்டுசேர்க்க முடியும் என்பதால் தான் இப்படம் உருவானது.

நான் நகரத்தில் வளர்ந்தாலும் நிறைய பயணம் மேற்கொள்வேன். சின்ன வயது முதல் அப்பாவுடன் மதுரை சென்றுள்ளேன். அம்மாவின் ஊருக்கு சென்றுள்ளேன். நிறைய கிராமங்களுக்கு சென்றுள்ளேன் அதனால் எனக்கு எந்தவொரு வித்யாசமும் தெரியவில்லை.

கிராமத்தில் நிறைய விவசாய நிலங்கள் இருக்கும் நகரத்தில் அனைத்தும் கட்டிடங்களாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் மதுரையில் நடிக்கும் போது எனக்கு வெளி ஊரில் நடிப்பது போன்ற உணர்வில்லை.

மதுரை என்னுடைய் சொந்த ஊர் எனக்கு மிகவும் சந்தோஷமாக தான் இருந்தது. படத்தில் மதுரையில் பேசப்படும் தமிழ் பாஷையை கொஞ்சம் பேசியுள்ளேன்.

படத்தில் மெரீனாவில் நடைபெற்ற போராட்டத்தை மையமாக கொள்ளாமல் போராட்டத்திற்கு காரணம் கிராமத்தில் தான் பிரச்சனை வருகின்றது அதனால் தான் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை அதற்கு தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று போராட்டம் தோன்றியது.

கிராமத்தில் ஏற்பட்ட பிரச்சனை என்ன ஏதற்காக ஜல்லிக்கட்டு நடக்க தடை ஏற்பட்டது என்பதை பற்றிய படம் தான் மதுரவீரன். என்னை பொறுத்தவரை படத்தின் கதையை மட்டுமே தான் பார்பேன். கதை மிகவும் உறுதியாக இருக்கும்பட்சத்தில் நடிக்க ஒப்புகொள்வேன். P.G. முத்தையா அவர்களின் கதை மிகவும் உறுதியானது.

அவர் கூறிய கதையை சிறப்பாக படமாக்கியுள்ளர். இப்படத்தின் கதைக்கு பொருத்தமாக மீனாட்சி இருந்தார். மீனாட்சியின் நடிப்பை நன்றாக வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர் P.G. முத்தையா. மீனாட்சி நன்றாக தமிழ் தெரிந்தவர் முதல் படமாக இருந்தாலும் நன்றாக நடித்தார்.

ஒரு சில இடங்களில் தடுமாறும் போது முத்தையா உதவி செய்வார். கதைக்கு பெரிய நடிகை தேவைப்படும் போது நடிக்க வாய்ப்பு அமைந்தால் நடிப்பேன். எல்லாருக்கும் பெரிய இயக்குனருடன், பெரிய நடிகையுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் எனக்கும் அந்த ஆசை உள்ளது.

படத்தில் சமுத்திரகனி அவர்களுடன் நடித்த அனுபவம் மிக சிறந்த அனுபவம். சின்ன வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும் என்பதால் என்னை அவர் அண்ணன் பையன் போல பார்த்துக்கொண்டார். படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் எனக்கு உதவியாக இருந்தனர்.

அனைவரும் முத்த கலைஞர்கள் நான் சில இடங்களில் தடுமாறும் போது பெரும் உதவியாக இருந்தனர். தேனப்பன் அவர்கள் மாரிமுத்து அவர்கள் வேலராமமூர்த்தி அவர்கள் மைம் கோபி அண்ணன் என அனைவரும் உதவியாக இருந்தனர்.

படத்தில் என்னுடன் 5 பசங்கள் நடித்துள்ளார்கள் என்னுடைய நண்பர்களாக உண்மையிலும் எனக்கு நண்பர்களாகிவிட்டனர். சித்து, குணா, அருண்மொழி, ராஜபாண்டி, நரைன் இவர்களுடன் இருக்கும் போது படப்பிடிப்பு தளம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

அதுமட்டும் இல்லாமல் பாலா, கதிர் நாங்கள் என 7 பேர் இணையும் போது படப்பிடிப்பு தளமே கலகலப்பாக இருக்கும்.மதுரவீரன் படபிடிப்பு நடத்தப்பட்ட ஊர்களில் அனைவரும் எல்லா உதவிகளை செய்தனர். தொடந்து இந்த மாதிரியான சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பேன் என்று கூறினார் மதுரவீரன் படத்தின் நாயகன் சண்முகபாண்டியன்.

More Articles
Follows