தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்த சர்கார் கதையை டைரக்டர் முருகதாஸ் திருடிவிட்டதாக வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் அளிக்க அது பெரும சர்ச்சையானது.
அப்போது எழுத்தாளர் சங்க தலைவராக இருந்த டைரக்டர் பாக்யராஜ் அவர்கள் கதாசிரியர் வருனுக்கு ஆதரவாக பேசினார்.
இறுதியில் முருகதாஸ் எழுத்தாளருக்கு உரிய மரியாதை மற்றும் தொகையை கொடுக்க வேண்டும் என முடிவானது.
இந்த பிரச்சினைகள் முடிந்து படமும் வெளியானது. அதன்பின்னர் பாக்யராஜ் தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அருண்காந்தின் கோகோ மாக்கோ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தான் மீண்டும் எழுத்தாளர் சங்க தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்தல் இன்றி தேர்வாகியுள்ளதாக அறிவித்தார் பாக்யராஜ்.
பாக்யராஜ் ராஜினாமா செய்த பின்னர் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய முன் வந்துவிட்டதால் அவர்களின் ராஜினாமாவை வாபஸ் பெற வைக்க மீண்டும் அந்த பதவியை பாக்யராஜ் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.